Thursday, August 16, 2012

மீனம்,கன்னி,மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட எச்சரிக்கை!!!




யுத்தக்கிரகமான செவ்வாயும்,காற்றுக்கிரகமான சனியும் மீண்டும் ஒன்று சேரப்போகின்றன.ஒரு ராசியைக் கடக்க செவ்வாய்க்கு 45 நாட்கள் ஆகிறது;ஒரு ராசியை சனி 900 நாட்கள்(2 1/2 வருடம்) எடுத்துக்கொள்கிறது.

18.8.2012 அன்று வக்கிரநிவர்த்தியான கன்னி சனிபகவான்,துலாம் ராசிக்குள் நுழைகிறார்.அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அதாவது 14.8.12 அன்றே கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பார் செவ்வாய் பகவான்! எனவே,18.8.2012 முதல் 27.9.2012 வரை துலாம் ராசியில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
இவ்வளவு குறைந்த கால கட்டத்தில் யுத்தக்கிரகமான செவ்வாயும்,காற்றுக்கிரகமான சனியும் அடுத்தடுத்து ஒன்று சேர்வதால் நாட்டு மக்களின் மன நிம்மதி  சீர்குலைந்து,போராட்ட மனோபாவம் தலைதூக்கும்.

18.8.2012 முதல் 27.9.2012 வரையிலான கால கட்டத்தில் மேஷம்,விருச்சிகம்,கன்னி,மீன ராசிக்காரர்கள் உடல்நிலை அல்லது மனநிலை பாதிக்கும்விதமாக சம்பவங்கள் நிகழும்;தன்னையறியாமல் அடிக்கடி ஆக்ரோஷமடைவார்கள்;இந்த காலகட்டத்தில் மீனம் மற்றும் விருச்சிக ராசியினர் வாகனப்பயணத்தின்போது மிகுந்த நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.ரிஷபத்தில் இருக்கும் குருபகவான்,மேஷம்,கன்னி மற்றும் விருச்சிகராசியினரை தனது அருட்பார்வையால் ஓரளவு காப்பாற்றிவிடுவார்.



இந்த கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள நாம்  ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்னவெனில்,இந்த நாட்களில் வரும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நமது ஊரில்/அருகில் இருக்கும் மலைக்கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.அங்கே தனிமையான இடத்தில் ஒரு மஞ்சள் துண்டினை விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஓம்ஹரிஹரிஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.(நமது  ஊரில்/அருகில் இருக்கும் மலைக்கோவில் எந்த கடவுளாக இருந்தாலும் அங்கே இவ்வாறு ஜபிக்க வேண்டும்)
17.8.2012 வெள்ளிக்கிழமை அன்று ஆவணி மாத அமாவாசை வருகிறது;31.8.2012 வெள்ளிக்கிழமையன்று ஆவணி மாத பவுர்ணமி வருகிறது;15.9.2012 சனிக்கிழமை அன்று மீண்டும் ஒரு அமாவாசை ஆவணி மாதம் வர இருக்கிறது;29.9.2012 சனிக்கிழமை அன்று புரட்டாசி மாத பவுர்ணமி வர இருக்கிறது.

ஏழரைச்சனியால அவதிப்படும் கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களும்,அஷ்டமச்சனியால் அவதிப்படும் மீன ராசிக்காரர்களும் இந்த காலகட்டம் முழுவதும் (23.6.2012 முதல் 27.9.2012 வரை) தினமும் உங்கள் ஊரில்/நீங்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் ஜீவசமாதிகளுக்குச் செல்ல வேண்டும்;அங்கே கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மஞ்சள் துண்டில் அமர்ந்து 30 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் மந்திரஜபம் செய்ய வேண்டும்.மறந்தும்கூட அசைவம் சாப்பிடக் கூடாது;இதன் மூலமாக மனநிம்மதியைப்பெற முடியும்.
கடந்தகாலங்களில் சனியும்,செவ்வாயும் ஒன்று சேரும்போதெல்லாம் மிகப்பெரிய போராட்டங்கள்,யுத்தங்கள்,அரசாங்கமே தடுமாறுமளவுக்கு கலகங்கள்,தீவிரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.இறைபக்தியும்,ஜீவசமாதி வழிபாடுமே நம்மை இந்தகடுமையான காலகட்டத்தில் நிம்மதியாக இருக்க வைக்கும்;எனவே,இந்த ஆவணி அவிட்டமான 30.8.2012 வியாழக்கிழமை இரவுக்கு எல்லோரும் பாம்புக்கோவில் சந்தையில் இருக்கும் மாதவான சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வரவும்.கூட்டுத் தியானம் உலகத்தின் போராட்டங்களை மட்டுப்படுத்தும்;

ஓம்சிவசிவஓம்   ஓம்ஹரிஹரிஓம்

1 comment:

  1. கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய http://spiritualcbe.blogspot.in

    Saravanakumar.B

    ReplyDelete