Thursday, August 16, 2012

அர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி!!!




கர்நாடகமாநிலம் சிவமொகா(ஷிமோகா) நகரின் ஆஞ்சநேயர் கோவில் சக்தி வாய்ந்தது;அந்தக் கோவிலின் சக்தியால் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே வருவது வழக்கம்;அதன் தலைமை அர்ச்சகரின் மகளுக்கு  திருமணம் நடைபெற்றது.புதுமணத் தம்பதிகளுக்கு ஆசி வழங்க ஆர்.எஸ்.எஸ்.அன்பர்களின் யோசனைப்படி ஒரு மடாதிபதி அழைக்கப்பட்டிருந்தார்.திருமணமேடையில் அவர் ஆதிசாம்பவ சமூகத்தாரின் குலகுரு என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.சிலர் ஆச்சரியப்பட்டனர்;பலர் மனநிறைவுடன் கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.

“நான் ஹரிஜனங்களுக்கு சாமியார் என்ற முறையில் பல கசப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்;ஆனால்,ஆர்.எஸ்.எஸ்.அன்பர்கள் இந்து சமுதாயத்தின் எல்லா சமுகத்தாரும் ஒரே குடும்பம் என்று பேசுவதுடன் நில்லாமல் செயலிலும் நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள்.அவர்களால் தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது”என அந்த அரிஜன குலகுரு தெரிவித்தார்.
த வே (THE WAY) என்ற நூலில் இருந்து;எழுதியவர் ஹெ.வே.ஷேசாத்திரி

No comments:

Post a Comment