Saturday, February 4, 2012

அமெரிக்காவுக்கு அல்வா கொடுக்க உதவிய சித்தரின் கண்டுபிடிப்பு

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அமிதிஸ்ட் கல்லை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் ஒட்டிவைத்தால் கம்ப்யூட்டரில் இருந்து வரக்கூடிய கதிர் இயக்கத்தைக் குறைக்க முடியுமாம்.



இதுபோல கம்ப்யூட்டர் கதிரியக்கத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது நண்பர்களே !




வெங்காயச்சருகுகளை துணியில் வைத்துத் தலையணை போல் தைத்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டால் கதிரியக்கத்தைக் குறைக்கமுடியும்.

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது . அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை.



என்ன காரணம் தெரியுமா?

அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே! வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழையமுடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போக மகரிஷி.




விஸ்வாமித்ரப்புல்(லெமன் கிராஸ்) என்ற ஒரு புல் வகை இருக்கிறது, தர்ப்பைக்கு நிகராக விசஸ்வமித்ரரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புல் வகை எனக்கூறுவார்கள். இந்தப் புல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளை உபயோகப்படுத்தும் போதும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியும்.








கம்ப்யூட்டரில் அதிகமாக வேலைசெய்யும் இளைஞர்களுக்கு, ஆண்மைக்குறைவும், பிறக்கக்கூடியக் குழந்தைகள் ஊனமாகவும் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் வரக்கூடிய செய்திகளைப் படித்திருக்கிறேன்.

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் வேலை முடிந்தவுடன் தூங்கச் செல்வதற்கு முன்பாக உப்பு (சோடியம் குளோரைடு) கலந்த நீரில் குளித்தால், இந்தப்பிரச்சினையைத் தவிர்க்கலாமே! நன்றி:யுவா

1 comment: