Sunday, February 19, 2012

தமிழ்நாடு முழுவதும் ஓம்சிவசிவஓம் பரவிக்கொண்டிருக்கிறது!!!









1.1.2011 அன்று சனிப்பிரதோஷம் ஆகும்;அன்று  முதல் இன்றுவரையிலும் தமிழ்நாட்டில் திருஅண்ணாமலை,திருச்சி அருகில் இருக்கும் திருஆனைக்கா,மேலப்பெரும்பள்ளம்,கோயம்புத்தூர் அருகில் இருக்கும் கோவில்பாளையம்,மதுரையில் இருக்கும் இம்மையில் மறுமை தருவார் கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் அருள்மிகு வைத்திய நாதசுவாமி திருக்கோவில்,சதுரகிரி,நாகப்பட்டிணத்தின் அருகே இருக்கும் வடக்குப்பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கர் ஜீவசமாதி,நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில்,கோவில்பட்டி அருகில் இருக்கும் கழுகுமலை;அருப்புக்கோட்டை,திருச்சியில் அருகில் இருக்கும் குழுமணி, போன்ற இடங்களில் ஆன்மீகக்கடலின் குழு நேரடியாக ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற துண்டறிக்கைகளை விநியோகம் செய்து வருகிறது.


ஆன்மீகக்கடலின் வாசக,வாசகிகள் சென்னையில் மூன்று ஜீவசமாதிகள்,சதுரகிரி,கோவையில் ஐந்து பிரபலமான கோவில்கள்,ஈரோடு,தஞ்சாவூரிலிருக்கும் பெரிய கோவில்,கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில்,மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில்,காளையர்கோவில்,பரமக்குடி மற்றும் இராமநாதபுரம்,ஓசூரில் இருக்கும் மலைக்கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,தூத்துக்குடியில் இருக்கும் பழமையான சிவாலயம் மற்றும் இணையத்தின் வழியே  facebook,yahoo groups,google groups,picscrazy,discussion board,discussion forum போன்றவைகளின் வழியாகவும் எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிப்பது எப்படி? என்பது பற்றிய விளக்கங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கு இந்த எண்ணிக்கை போதுமா?

.ஏனெனில்,இந்த 2012 முதல் அடுத்து வரும் ஆண்டுகளில் பலவிதங்களில் கடல்பரப்பு அதிகரித்து நிலப்பரப்பு சுருங்க இருப்பதால்,எல்லோரும் தினமும் ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும்படி கேட்டுக் கொள்கிறோம்;ஒவ்வொரு தடவையும் ஓம்சிவசிவஓம்ஜபிக்க ஆரம்பிக்கும்போது,நமது பாரத நாடு விரைவில் சித்தர்கள் ஆளுகைக்குள் வர வேண்டும் என்று ஒரு கூடுதல் கோரிக்கை வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வீதம்,100 நாட்களுக்கு மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டால்,உங்களால் சும்மா இருக்கமுடியாது;ஆம்,ஜோதிடராக இருக்கும் நானே இவ்வளவு கஷ்டப்பட்டேன்;ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தினால்,எனது எல்லா கர்மவினைகளையும் முறியடித்துவிட்டேன்;என்னைப் போல தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர்கள் ஏதாவது ஒரு தேவையில்லாத சிக்கலில் மாட்டியிருப்பார்கள்? என்ற எண்ணத்தின் விளைவாக உருவானதே ஓம்சிவசிவஓம் வலைப்பூ!!!

தவிர,ஒவ்வொருவரும் 1000 துண்டறிக்கைகளை அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


ஓம்சிவசிவஓம்


1 comment:

  1. அய்யா
    நிச்சயம் நீங்கள் செல்லும் வழியில் நாங்களும் வருவோம்
    ஓம் சிவசிவ ஓம்

    ReplyDelete