Wednesday, February 15, 2012

வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா?


வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகிஉள்ளது.
உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.


எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.


வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது


- நமது செய்தியாளர் சுந்தர் நன்றி:தினமலர் 15.2.12                                                                                                                                        ஆன்மீகக்கடலின் கருத்து: அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்து வரும் வேளையில்,எதையாவது புருடா விடுவது அமெரிக்காவின் வேலை; ஒருவேளை வேற்றுக்கிரக மனிதர்களுடன் பேசுவதையே இவர்கள் பெருமையாக நினைத்தால்,நினைத்த நேரத்தில் எந்த ஒரு வேற்றுக்கிரகத்திற்கும் ராக்கெட் இல்லாமல் சென்று வந்த நமது முன்னோர்களாகிய சித்தர்கள்,மகான்களின் மன சக்தியை என்ன வென்று சொல்வது? நமது முன்னோர்களின் பெருமைகளை நாம் அறியாமல் செய்த இந்த வெள்ளைக்காரர்களின் பொறாமையை என்னவென்று சொல்வது? 

No comments:

Post a Comment