Friday, February 3, 2012

நாத்திகம் எந்த அளவிற்கு உண்மை?


நாத்திகம் எந்த அளவிற்கு உண்மை?


நாத்திகம் எந்த அளவுக்கு உண்மை?
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்த கேள்வி வெகுகாலமாக இருந்து வருகிறது.பதில் பலரிடம் இல்லை என நாத்திகவாதிகள் நம்புகிறார்கள்.இதனால் பல ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நாத்திகவாதிகளான கதைகள் ஏராளமாக 1970களில் உருவாகின.
கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் பேசுவது- பேசும் கருத்து நிஜம். கடவுள் இருப்பது 101 சதவிகிதம் நிஜம்.எப்படி என நிருபி என கேட்கும் நாத்திகவாதிகளுக்கு சில கேள்விகள். . .
இதோ இந்த வலைப்பூ கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்(தமிழ்நாடு அல்லது இந்தியா எனில்) டாடா இண்டிகாம்,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல் மற்றும் புதிதாக வரவுள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் செல்போன் அலைகள் பரவியிருப்பது நிஜம் தானே! அதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் உங்கள் பகுத்தறிவு கடவுளை ஏற்க மறுப்பது ஏன்?
கடவுளை உணர்வுகளால் மட்டுமே உணர முடியும்.

நாத்திகவாதிகளே! உங்களால் எனது கண்ணுக்கு செல்போன் அலைகளைக் காட்ட முடிந்தால் ,என்னால் மட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கடவுளை நேரில் காட்டமுடியும்.
அல்வாவில் இனிப்பு மறைந்திருப்பது போலவும், மிளகாயில் காரம் மறைந்திருப்பது போலவும்,பூமி முழுவதும் காற்று பரவியிருப்பது போலவும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
நீங்கள் உங்கள் வழிகாட்டி ஈ.வே.ராமசாமியின் “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தைப் படித்ததுண்டா?அதில் ராமசாமி அய்யா என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
எனக்கு வெளிநாட்டுமதங்களைப் பற்றிக் கவலையில்லை.எனது இந்து மதத்தில் கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை முழுமையாக அழிப்பதுதான் எனது லட்சியம்.அதற்காகத்தான் நான் கடவுளையே எதிர்க்கிறேன்.இதன் மூலமாக எனது இந்து மதத்தை நான் சீர்திருத்துகிறேன்.
இன்றைய நவீன எண்கணிதம் அதாங்க நியூமராலஜிப்படி 8,17,26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் சனியின் பிள்ளைகள்.இவர்கள் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றப்பிறந்தவர்கள்.இவர்கள் மத விஷயங்களில் தலையிட்டால் கடும் எதிர்ப்பை சந்திப்பர்.அதன் மூலமாக பிரபலமடைவர்.இவர்கள் உண்மைத்தன்மையை உலகமக்களுக்கு எப்பாடுபட்டாவது தெரிவிப்பர்.

ஆனால் இன்றைய நாத்திகம் தமிழ்நாட்டில் நமது இந்து தர்மத்தை இழிவுபடுத்தமட்டுமே இருக்கிறது.
இதற்காக நாத்திகத்தலைவர்கள் யார் யாரிடமெல்லாம் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது உங்களைப் போன்ற அப்பாவி நாத்திகர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?
சரி!!!இந்துதர்மத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்கின்றன என்கிறீர்களா?ஜாதிகள் உருவாக்கப்பட்ட வரலாற்றை நீங்கள் படித்ததுண்டா?
செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் ஜாதிகள் உருவாக்கப்பட்டன.மனித சமுதாயம் என்பதை ஒரு மனித உடலாக கற்பனைப்படுத்திக் கொண்டால், வாயால் நடக்க முடியுமா?இல்லை முதுகால்தான் சாப்பிட முடியுமா?கி.பி.1700 களில் இந்தியாவிற்கு பிழைக்க வந்த ஆங்கிலேய கிறிஸ்தவன் தான் எஃப்சி,பி.சி.,எம்.பி.சி.,எஸ்.சி., எஸ்.டி என பிரிவினையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில் பிரிவினையை உருவாக்கினான்.நமது பாரம்பரிய வளங்களை 300 வருடங்களாக 15.8.1947 வரைக் கொள்ளையடித்தான்.
இன்று, லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி என பெருமையாக ஜாதிப்பெயரை வைத்து பீற்றி கொள்கிறோம்.குங்குமம் நெற்றியில் பூசியிருப்பதை ரத்தம் வழியுது என திருக்குவளை கிராமத்தில் பிறந்த மு.அருட்செல்வர் (கருணாநிதி)நக்கல் செய்வதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறோம்.
கிறிஸ்துவ மதத்தில் ஜாதிக் கொடுமை இல்லையாக்கும்.ரட்சண்ய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் வேலையே தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் கிறிஸ்தவர்களாக்குவதுதான்.ஏன் அவர்களுக்கு மட்டும் தனி அமைப்பு வைத்து மதம் மாற்றவேண்டும்?
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சர்ச்களுக்குப் போய்ப்பாருங்கள்.ஜாதிவெறி எவ்வளவு தாண்டவமாடுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஜாதிகளை ஒழிக்க தி.க., தி.மு.க., இதுவரை என்ன செய்திருக்கின்றன?
எல்லோரையும் பிராமணர்கள் ஆக்கிவிட வேண்டியதுதானே!
எல்லோருக்கும் சமஸ்கிருதம் 1ஆம் வகுப்பிலிருந்து கொண்டுவர வேண்டியது தானே.ஏன் செய்யவில்லை.?அப்படி கி.பி.2009இல் இந்த சீர்திருத்தத்தை ஆரம்பித்தாலும் கி.பி.2109 லிருந்தாவது எல்லோரும் பிராமணர்களாகி அவர்களைப் போல நுண்ணறிவாளர்களாகிவிடலாமே!!!

No comments:

Post a Comment