Wednesday, August 24, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நிவாரணப்பரிகாரமும்









இன்று தொலைக்காட்சித்தொடர்களால்,பொறாமை என்பது செல்போன் அளவுக்கு மலிந்துவிட்டது.தான் மட்டும் நன்றாக,சொகுசாக இருக்கவேண்டும்;தன்னைத் தவிர மற்ற அனைவருமே நாசமாகப் போக வேண்டும் என்ற எண்ணம் சகஜமாகிவிட்டது.அதேசமயம்,எந்த ஒரு நயவஞ்சகத்தையும் எதிர்கொள்ளத் தெரியாத அப்பாவித்தமிழர்களின் எண்ணிக்கையே இன்று தமிழ்நாடு மக்கள்த் தொகையில் 80% பேர்கள் இருக்கின்றனர்.எனவே,கண் திருஷ்டி,பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதை நீக்கிட,ஒரு சுலபப் பரிகாரத்தை நமது மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் அருளியுள்ளார்.எனது தமிழ் சகோதர,சகோதரிகளுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

ஏதாவது ஒரு ஏகாதசி திதியன்று காலையில் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரவும்.வந்து,செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமியின் மானுடப்பிறப்பாகிய ஸ்ரீஆண்டாளைத் தரிசித்து,தமது பெயருக்கு அர்ச்சனை செய்யவும்.செய்தபின்னர்,அங்கிருக்கும் கண்ணாடிமாளிகைக்குள் செல்ல நுழைவுச்சீட்டு எடுத்துக்கொள்ளவும்.கோவிலில் ஒரு தடவைக்கு மேல் அந்த கண்ணாடிமாளிகைக்குள் சுற்றிவர அனுமதிப்பதில்லை;ஆனால்,இந்தப் பரிகாரப்படி 16 தடவை சுற்றி வர வேண்டியிருக்கும்.அதற்கு ஏற்றாற்போல்,தயாராகவும்.

கண்ணாடி மாளிகைக்குள் முதலில் கன்னி மூலையில் ஒரு நிமிடம் நின்று உங்களின் குல தெய்வத்தை முதலில் மனதார வேண்டிக்கொள்ளவும்;அடுத்ததாக விநாயகரை மனதார வேண்டிக்கொள்ளவும்;பிறகு உங்களின் வாழ்க்கை லட்சியத்தை வேண்டவும்.பிறகு கால் பங்கு சுற்றிவிட்டு,வாயுமூலையில் நின்று எதிரே இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்தவாறு இதே போல், ஒரு நிமிடம் வரை வேண்டவும்.அடுத்த கால் பங்கு சுற்றிவிட்டு,அக்னி மூலையில் நின்று இதே போல் ஒரு நிமிடம் வேண்டவும்.உடலுக்குள் ஒரு வித எரிச்சல் வெளிப்படுவதை உணர்வீர்கள்.பிறகு அடுத்த கால் பங்கு சுற்றி ஈசான மூலையில் இதே போல ஒரு நிமிடம் நின்று வேண்டவும்.

ஒரு சுற்று முடிந்தது.மீதி 15 முறை மிகவும் நிதானமாக மேற்கூறியது போல செய்து கண்ணாடிகளில் தெரியும் உங்களின் உருவங்களைப் பார்த்தவாறு சுற்றவும்.வெளியே வந்து யாருக்காவது ஒரு வேளை அன்னதானம் அல்லது பசுவுக்கு பழதானம் அல்லது அகத்திக்கீரைதானம் செய்யவும்.

இது போல,தொடர்ந்து 9 நாட்கள் செய்ய வேண்டும்.வெளியூர்,வெளிமாநிலம்,தொலைதூர நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்வதற்குப்பதிலாக வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது ஓரிரு வாரத்துக்கு ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் செய்து முடித்ததும்,அவர்களின் அத்தனை சிரமங்களும் நீங்கும்.முயன்று பார்க்கலாமா?

ஓம்சிவசிவஓம்

* படத்தில் தெரிவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருக்கும் கண்ணாடி மாளிகை




No comments:

Post a Comment