Tuesday, August 16, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் :2010 நவராத்திரி அலங்காரங்கள்






மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே;                                                                          பலர் போற்றிப்பாராட்டும் குணம் வேண்டும் தாயே!!!                                                       வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே!!!                                                    இந்தப் பாடலை பலமுறை ஜெயாடிவியில் காலை 5.30 மணிமுதல் 6 மணிக்குள் கேட்கும்போது உணர்வு ஆன்மீகமயமாகி,அன்னையின் நினைவுகளில் மூழ்கும்.சரணாகதி தத்துவத்தின் மூலமாக நமது கஷ்டங்கள்,கர்மங்கள் ,சிரமங்களை அடியோடு நீக்க ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியைச் சரணடைந்த நான்,இன்று அந்த அம்மாவின் அருள்பார்வையால் இயங்கிவருகிறேன். யாருக்கெல்லாம் இராகு திசை நடைபெறுகிறதோ,யாரெல்லாம் திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்களோ,அவர்களும்,பிற எல்லா நட்சத்திரக்காரர்களும்,ராசிக்காரர்களும் ஒரு பவுர்ணமியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் கோவிலுக்கு வருகை தந்து,பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.அடுத்த நாளே ,உங்களின் தினசரி வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பதை உணருங்கள்.                                                                                     குறிப்பு:இங்கு இருக்கும் பத்திரகாளியம்மாளின் படங்களில் உங்களுக்குப் பிடித்த படத்தை உங்களின் கணினியின் வால்பேப்பாராக வைத்து,தினமும் வழிபடலாமே!!!(மாதம் தோறும் பவுர்ணமி பூஜைக்கு வர விரும்பி,ஆனால் தொலைதூரத்தில்/அயல்நாட்டில் வாழ்பவர்கள் இதைப் பின்பற்றி,வழிபடவும்.)

No comments:

Post a Comment