Wednesday, August 24, 2011

சித்தராக விரும்பினாலும்,சித்தரை சந்திக்க விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்









கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,தினத்தந்தியில் ஹனுத்தாஸன் அவர்கள் அகத்தியர் நாடி ஜோதிடம்,அதிசய சித்தர்கள் என்ற இரு தொடர்களை தினத்தந்தியில் எழுதி தமிழ் உலகத்தில் மாபெரும் புரட்சியை உண்டாக்கினார்.இந்த தொடர்கள் மூலமாக,தமிழ்மக்கள் தமது கர்மாக்களை நீக்கி நிம்மதியோடு வாழ ஹனுமத்தாஸனை சந்திக்க துடித்தனர்.மேலும் சதுரகிரி இன்று பரபரப்பான சிவாலயமாகிவிட்டது.

ஏராளமான தமிழ் இளைஞர்கள் சித்தர்களில் யாரையாவது ஒருவரை சந்திக்கத் துடித்துக்கொண்டிருப்பது இன்று இயல்பாகிவிட்டது.அவர்கள் அனைவரும் செய்ய வேண்டியது இதுதான்: ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.அப்படி அவர்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,அவர்களின் ஜப எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியதும்,அவர்கள் விரும்பிய சித்தரை தரிசிக்கும் சுலப வழிமுறை கிடைக்கும் என்பது உறுதி.

சித்தராக வேண்டுவோர்கள் செய்ய வேண்டியது,அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டால்,அஷ்டமா சித்திகளும் கைகூடி,சித்தராக முடியும்.
சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்கள்.சித்தர்களின் உலகில் பல்லாயிரம்பேர்கள் இருக்கின்றனர்.கலிகாலத்தில் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும் என்பதை உங்களால் நம்ப முடியுமா?

சித்து நிலையை எட்டியவர்கள் எப்போதும் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதில்லை;

1,00,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,ஜபிப்பவருக்கு சிவதரிசனம் கிடைப்பது சர்வ நிச்சயம்.சிவ தரிசனம் செய்தவருக்கு மறு பிறவி கிடையாது என்பது சிவபுராணத்தகவல்.ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்க,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காலம் ஆகுமாம்.
ஆன்மீகப்பாதையில் ஒவ்வொரு பதவி உயர்வும் இன்றைய கலிகாலத்தில் பத்திரிகையில் விளம்பரப்படுத்திட முடியாது.எனவே, சித்தராக விரும்புவோர்,முதலில் அசைவத்தைக் கைவிட வேண்டும்.அடுத்ததாக,ஆசைகளை,பந்தபாசங்களை அறுக்க வேண்டும்.உங்களால் முடியுமா? முடியும் எனில் ஒரு கோடி ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தயாராகுங்கள்.27.9.2011 செவ்வாய்க்கிழமையன்று புரட்டாசி அமாவாசை வருகிறது.சித்தர்களுக்கும் செவ்வாய்க்கிழமைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.எனவே,இந்த நன்னாளைப் பயன்படுத்தி,உங்கள் குலதெய்வத்திடம் ஆசியும்,அனுமதியும் வாங்கிக்கொண்டு,முழு முதற்கடவுள் கணபதியை வழிபட்டு விட்டு,ஒருகோடி ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பியுங்கள்.

(ஒருவேளை இந்த முயற்சியில் ஏதாவது தடை வந்தாலும் அடுத்த பிறவியில் இந்த முயற்சி ஜெயிக்கும்.)

ஓம்சிவசிவஓம்










No comments:

Post a Comment