Tuesday, August 30, 2011

போகிற போக்கில் புண்ணிய காரியம்


2011 ஜீன் 15 அன்று,கொச்சி ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரிய பெண் எஸ்பிரெய்டு மரியா ஸ்மித் மரணமடைந்தார்.எட்டு ஆண்டுகளாக அங்கே தனிமை வாசம் செய்த இந்த யூத மூதாட்டி(77) தன்னை தகனம் செய்த சாம்பலை கடலில் கரைக்கும்படி எழுதி வைத்திருந்தார்.அவ்வாறே செய்யப்பட்டது.2003 இல் “ஒரு சில நாட்களுக்காக” என்று கூறி அறை எடுத்தவர் அங்கிருந்து வெளியே போகவே இல்லை.தன் சொத்துக்களில் பாதியை ராஜஸ்தான்,மத்தியப்பிரதேச புலிகள் சரணாலயத்திற்காக எழுதி வைத்தவர் இவர்.இவரது உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.இதுவும் இவரது விருப்பப்படியே!!!



நன்றி:பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 15,விஜயபாரதம் 26.8.11

No comments:

Post a Comment