Wednesday, August 24, 2011

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-10




கேள்வி:சித்தர்கள் ஆட்சி பூமியில் ஆரம்பிக்க இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.எப்போது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும்? ஏன் துவங்கும்?



பதில்:நல்ல கேள்வி!!! ஏற்கனவே விரிவான விளக்கத்துடன் ஆன்மீகக்கடலில் வெளிவந்திருக்கிறது.இருப்பினும்,இன்னொரு தடவை விவரிப்பதில் மகிழ்ச்சியே!



பூமியில் 435 கோடி வருடங்கள்,இந்துதர்மத்தில் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கு ஒரு நாள்.அப்படி பிரம்மா நூறாண்டுகள் வரை வாழ்ந்து,மனித படைப்புக்களை நிர்வாகிப்பார்;26.12.2012 அன்றோடு அவருக்கு நூறு வயது நிறைவடைகிறது.அடுத்த பிரம்மாவாக இராமாயணத்தில் ஸ்ரீஇராமபிரானின் பக்தன் ஆஞ்சநேயர் பொறுப்பேற்க இருக்கிறார்.அப்படி அவர் பிரம்மாவாகப் பொறுப்பேற்க ஆகும் இடைவெளி வானுலகில் ஓரிரு நாட்கள்/ஓரிரு மணித்துளிகள் தான்.ஆனால்,அதுவே பூமியில் 72,000 ஆண்டுகளாக ஆகிவிடும்.இந்த இடைவெளியில் சித்தர்களின் ஆட்சி பூமியில் இருக்கும்.இது சிவபெருமானில் சதாசிவன் என்பவர் அகில பிரபஞ்சத்தையும் நிர்வாகிப்பவர்.அவரது அனுமதியோடு சித்தர்கள் ஒவ்வொருவராக பூமியை ஆளப்போகிறார்கள்.

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான முதல் அடையாளம் தமிழ்நாட்டின் புராதனமான கோவில்களின் குளங்களில் எப்போதும் நறுமணம் வீசத்துவங்கும்.சித்தர்களின் ஆசி பெற்ற ஒரு தேசபக்தன் + மாவீரன் இந்தியாவின் தலைமை பீடத்தை அடுத்த சில ஆண்டுகளில் கைப்பற்ற இருக்கிறார்.அதற்கு அடையாளமாக பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவப்பட்டு,அதன் வழிபாட்டு முறையில் சிறந்த மாற்றம் வரும்;திரு அண்ணாமலை சர்வ தேச சுற்றுலாத்தலமாக பிரபலமடையும்.திரு அண்ணாமலையின் வழிபாட்டு முறையிலும் அதிரடியான மாற்றம் வரும்.



தென் இந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.சென்னை ஒரு தீவாகவும்,சென்னையிலிருந்து கேரளாவரை சில குறிப்பிட்ட பகுதி சூயஸ் கால்வாய் போலவும் மாற இருக்கிறது.

உலகில் இருக்கும் அனைத்து மதத் தலைவர்களும் தங்களின் ஆன்மீக சக்தியை இழப்பார்கள்.அப்படி இழந்ததற்கு சென்னையில் இருக்கும் ஒரு துறவியே காரணம் என்பதை அறிந்து,நேரடியாக வருவார்கள்.இதைத்தான் சுவாமி விவேகானந்தர், “சென்னையிலிருந்து புறப்படும் ஒரு ஆன்மீகப்பேரலை இந்த உலகம் முழுவதையும் தாக்கும்.அதன் தாக்குதலால் கத்தியாலும்,வாளாலும்,பீரங்கிகளாலும்,துப்பாக்கிகளாலும் எந்த மதங்கள் பரவினவோ,அவை அனைத்தும் சக்தியிழக்கும்” என்று எப்போதோ சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.ஐரோப்பா கிறிஸ்தவ மதத்தைக் கைகழுவி விட்டு,இந்து மதத்தை ஏற்கும்.உலகம் இந்து மயமாகும்.(இந்த நிலையை இந்தியா எட்டும்முன்பாக,இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றிவிட வாடிகன் நிர்வாகம் பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ரகசியமாக அல்ல;ஓப்பனாக அறிவித்துவிட்டே செயல்படுத்துகிறார்கள்.ரீச் பெங்கால் முதலான ஒவ்வொரு மாநிலத்துக்கும்,மாநில மக்களுக்கும் ஏற்ப மதமாற்றத்திட்டமிட்டு செயல்படுத்துகிறது.உச்சகட்டமாக சோனியாவை அனுப்பி வைத்திருக்கிறது.அதிலும்,அடுத்த கட்டமாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போகிறது.ஏதாவது ஒரு இடத்தில் மதக்கலவரம் நடந்தால்,அந்த மதக்கலவரத்தை யார் தூண்டினாலும்,அந்தப்பகுதியில் வாழும் சிறுபான்மையினர் கொடுக்கும் புகார் மட்டுமே காவல் நிலையத்தில் ஏற்கப்படும்.அதாவது கிறிஸ்தவர்கள் ஜாதிக்கலவரத்தைத் தூண்டுவார்கள்;பேப்பரில் அது மதக்கலவரமாக செய்தியாகும்.கலவரத்தைத் தூண்டியவர்களை போலீஸ் ஒன்றும் செய்யாது.கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை போலீஸ் தூக்கி உள்ளே போடும்.இதுதான் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.இனிமேல்,இதற்கு சட்டபூர்வமான அந்தஸ்தை சோனியா தர இருக்கிறார்.இந்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்ததுமே,காஷ்மீரில் இதை ஏற்க முடியாது என அந்த மாநிலத்தலைவர்கள் சொல்லி ‘பாதுகாப்பு’கேட்டிருக்கின்றனர்.ஏனெனில்,காஷ்மீரில் இந்துக்களே சிறுபான்மையினர்!)





முதலில் கொங்ணர் 120 ஆண்டுகளுக்கு இந்த பூமியை ஆட்சி செய்வார்.அதன் ஆரம்பமாக பத்து கிலோ மீட்டர்கள் நீளமும் மூன்று கிலோமீட்டர்கள் உயரமும் கொண்ட ஒரு கடலலை சென்னையைத் தாக்கி,நாறடிக்கும்.



2010 ஆம் ஆண்டில் சதுரகிரியில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது.அதன் முடிவாக,சித்தர்கள் ஆசி பெற்ற அந்த மாவீரன் வெகு விரைவில் இந்தியாவின் தலைமைபீடத்தை அலங்கரிக்கப்போகிறார்.மறுபக்கம்,இந்தியா கடக ராசியாக இருப்பதால்,30.11.2011 அன்று வர இருக்கும் துலாம் சனிப்பெயர்ச்சியானது இந்தியாவுக்கு 2014 வரை கடுமையான சோதனைகளைத் தரப்போகிறது.சீனாவின் தொல்லை,இந்தியாவின் வணிகம்,அரசியல்,தனிமனித வாழ்க்கை,தேச பாதுகாப்பு,சிறு தொழில்,பங்குச்சந்தை என எல்லாவற்றிலும் கடுமையான பாதிப்பைத் தரப்போகிறது.இது பற்றி எந்த பத்திரிகையும் வாய் திறக்காது.ஏனெனில்,எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருப்பது கம்யூனிஸ்டுகளே! அவர்களுக்கு அமெரிக்காவை கண்மூடித்தனமாக எதிர்க்கத் தெரியும்.இந்திய சோற்றைத் தின்று இந்தியா மீது விசுவாசமாக இருக்கத் தெரியாது.

இலங்கையில் காலுன்றிவிட்ட, டிராகன் தான் கடலோர தமிழ்நாட்டு மீனவர்களை சிதைத்து சித்ரவதைப்படுத்தி வருகிறது.இதெல்லாம் இந்தியாவின் உளவுத்துறைகளுக்குத் தெரியாதோ?



பிரசவ வலியைத் தாய்மார்கள் உணர்ந்திருப்பார்கள்.அது மறு ஜன்மம் எடுப்பதற்குச் சமம்.அதேபோல,இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் முன்பாக இந்து தர்மசக்தியை அழிக்க ஒழித்துக்கட்ட உலகமே திரண்டு கொண்டிருக்கிறது என்பது நிஜம்.2010 முதல் 2027 வரையிலுமான கால கட்டம் இந்தியாவை மையமாக வைத்து உலக அரசியல் சுழலப்போகிறது.இதில் இந்தியாவில் தொலை நோக்கு இல்லாத தலைவர்களால் நாம் ஏராளமானவற்றை இழக்கப்போகிறோம்.இந்த இழப்புகள் பெருமளவு குறைய வேண்டுமென்பதற்காகத்தான் எனது ஆன்மீகக்கடல் வாசகர்களை தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வற்புறுத்துகிறேன்.



சித்தர்கள் ஆட்சி ஆரம்பிக்கும் வரையிலும் நீதி நேர்மைக்காக மட்டுமே வாழ்ந்து வந்தவர்கள்,அதனாலேயே சொத்துக்கள்,குடும்பத்தை இழந்தவர்கள்,அவர்களின் வாரிசுகள் செல்வச்செழிப்போடும்,நிம்மதியோடும் வாழத்துவங்குவார்கள்.சுருட்டுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டவர்கள் ஆயுள் முழுக்கவும்,அடுத்த ஜன்மத்திலும் கஷ்டப்படப்போகிறார்கள்,



நாத்திகச்சிங்கங்களுக்கு இந்தக்கருத்துக்கள் மூடநம்பிக்கையின் சிகரமாக இருக்கட்டும்.அவர்களிலும் நேர்மையாக இருந்தவர்கள் தப்பித்தார்கள்;மற்றவர்கள் ஒழிந்தார்கள் என்பது இன்றிலிருந்து சில மாதங்களிலேயே உணரத்துவங்குவார்கள்.



இந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளாக நமது பங்காளிநாடு மூன்றாக உடையும்.அதில் ஒன்று இந்தியாவுடன் இணையும்;மற்றது வலிமையான ஆப்கானிஸ்தானுடன் இணையும்.நடுவில் இருக்கும் நாடு சொங்கியாகிவிடும்.



1990 முதல் இன்று வரையிலும் நாடி ஜோதிடம்,ஜோதிட இதழ்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பாக இதை நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.கடவுளே! அப்பிராணி இந்துதர்மத்தைக் காப்பாற்று!!!



ஓம்சிவசிவஓம்

5 comments:

  1. it will be good if there is proof for this in current time(post an example) so that your message will be spread easily

    ReplyDelete
  2. இங்கே கொடுத்துள்ளதை பாக்கும் போது. நம்பர மாதிரியான விழ்யம் ஒன்னும் இல்லை .சித்தர்கள் வருவார்கள் அட்சிசெவ்வர்கள் . தமிழ் நாடு இராண்டக பிரியும் .இதை எல்லாம் கேட்கும் போது சிரிப்பு தான் வருது .. நான் ஒரு 3 மாசமாகவே இந்த ஆன்மிக கடல் செய்திகளை படித்து வருகிறேன் .எல்லாம் நன்றாக தான் இருக்கும் ஆனால் இதில் சொல்கிற விழயங்களை படிக்கும் போது நம்ப முடியவில்லை நன் ஒரு நாத்திகன் இல்லை .கடவுள் நம்பிகை இருக்கிறது .என்னதான் இருந்தாலும் இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாத கூடாது இது என்னுடைய கருது.

    உங்களை தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்

    இ தற்கு எனக்கு பதில் வேணும் ......................... ப்ளீஸ் ......

    ReplyDelete
  3. அன்புள்ள ஜெயராமன் தயாளன்,ஒரு போதும் பகுத்தறிவுக்கு ஒத்துவராத தகவல்களை ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளிவராது.நீங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள்.ஸ்பெக்டரம்மூலமாக மக்களை ஏமாற்ற நாம் ஓட்டுப்போட்டு நமது ஆட்சியாளர்களை அனுமதிக்கலாம்.எதிர்காலம் பற்றிய மகான்கள்,அனுபவமுள்ள ஜோதிடர்களின் கணிப்புக்கள் ஏமாற்றுபவை அல்ல;அவற்றை கேலி செய்வது தவறு.நமது வாழ்நாளுக்குள் இவை அனைத்து நிகழும்.அதுவரை பொறுங்கள்.

    ReplyDelete
  4. என்னுடைய கேள்விக்கு நீங்கள் உங்கள் பதிலை கொடுத்ததற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
    நான் காத்திருக்க தயார் நான் கேட்டது சித்தர்களை பற்றி அதற்கு விளக்கம் தருவதற்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை பற்றி சொல்கிறிர்கள்?

    நான் உங்களுடைய ஆன்மிக கடல் செய்திகளில் படித்தேன் .நமது முளை எத்தனை சதவிதம் வேலைசெய்கிறது என்பதையும் அதற்கு அப்பால் எப்படியல்லாம் பயன்படுத்தத் முடியும் என்றெல்லாம் அதில் தரப்பட்டு இருந்தது . அந்த செய்தியை மிண்டும் படிக்க முயற்சி செய்தேன் அனால் முடியவில்லை .தயவு செய்து அந்த செய்தியை அனுப்புமாறு வேண்டி கொள்கிறேன் .

    ReplyDelete
  5. ஜெயராமன் தயாளன் அவர்களே,நம்மை ஏமாற்றுவதற்கு நமது மக்கள் பிரதிநிதிகள் தயாராக இருக்கிறார்கள்.அதை நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை;ஒரு சாதாரண ஜோதிடன் நான்.எனது இந்தியாவை நான் அளவுக்கதிகமாக நேசிக்கிறேன்.எனவே,நான் கேள்விப்பட்ட,பெரும் மகான்கள் சொன்ன வாக்குகளில் நமது நாட்டைப்பற்றி சொன்னவைகளில்,நமது நாட்டைப்பெருமைப்படுத்துபவைகளை வெளியிடுகிறேன். சாதாரண மனிதர்கள் இரண்டு சதவீதம் வரையிலும் தனது மூளையைப் பயன்படுத்துகிறார்கள்.விஞ்ஞானிகள் 5 சதவீதம் வரையிலும் தனது மூளையைப் பயன்படுத்துகிறார்கள்.மகான்கள்,துறவிகள் 5 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டேன்.இது தொடர்பாக படைப்புகள் கிடைத்தால்,உடனே பதிவாக வெளியிடத் தயார்.ஆல்பா மைண்டு பவர் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.

    ReplyDelete