Thursday, February 18, 2010

யார் நிஜமான நாத்திகவாதி?

யார் நிஜமான நாத்திக வாதி?

யாருக்கு தன்னம்பிக்கையில்லையோ அவரே நாத்திகவாதி என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
தருமம் மிகு தமிழ்நாட்டை ஆன்மீகவேரிலிருந்து நீக்கி தன்னம்பிக்கையில்லாமல் ஆக்கிய பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும்.

ஈ.வே.ராமசாமி சொன்ன பகுத்தறிவுக்கருத்து வேறு.அதைப்புரிந்து கொள்ள அவர் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகத்தை வாசித்தால் நமக்குப் புரியும்.அந்தப்புத்தகத்தின் சுருக்கம் நமது ஆன்மீகக்கடலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்துமதத்தை இழிவுபடுத்துவதில் திமுகவின் பங்கு மிகவும் மகத்தானது.1960களில் இவர்கள் தமிழ்நாடுமுழுக்க இருக்கும் கோயில்களுக்குள் புகுந்து விநாயகர் சிலைகளை உடைத்து தம்மை வீரமுள்ள நாத்திகவாதியாகக் காட்டிக்கொண்டனர்.
(அதற்குப்பதிலாக ஒரு முருகக்கடவுள் சிலையையோ அல்லது காளி சிலையையோ உடைத்திருந்தால் உடைத்தவர்களின் வம்சமே நாசமாகிப்போயிருக்கும்)

திராவிடர்கழகம் சொல்வது என்ன வென்றால்,பிராமணர் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்பது.பிராமணர்களின் ஆதிக்கம் எல்லா அரசு துறைகள்,அரசியல் கட்சிகள்,தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் இருப்பது நிஜம்தான்.
பிராமணர்களின் ஜனத்தொகை தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% அளவைத் தாண்டாது.ஆக, தி.க.சொல்வது பொய்.

ஒரு வேளை அது உண்மையென எடுத்துக்கொண்டால், இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பத்தில் 15 குடும்பத்திற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினர் தமிழ்நாடு அரசின் அரசு ஊழியராக பணிபுரிகிறார்.இந்த 1/15 என்ற விகிதாச்சாரத்தில் எத்தனை பிராமணக்குடும்பம் அரசு ஊழியராக இருக்கும்?

ஒரே ஒரு பிராமணர் வந்தாலே அங்கு பிராமண ஆதிக்கம் வந்துவிடும் என தி.க.கூப்பாடு போடுகிறது.ஓ.கே!
பிராமணர்களின் அறிவுத்திறன் அவர்கள் தினமும் வேதம் ஓதுவதாலும்,தினசரி உணவில் நெய் சேர்ப்பதாலும் வருகிறது.(நூறு கிராம் இறைச்சியில் இருக்கும் கொழுப்புச்சத்தை விடவும்,10 கிராம் நெய்யில் இருக்கும் கொழுப்புச்சத்து அதிகம் என நவீன விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன)
இவையெல்லாம் தெரிந்தும்கூட இந்துமதத்தைச் சீர்திருத்திட திராவிடக்கழகத்தால் ஏன் முடியவில்லை?
எல்லோரையும் பிராமணர்களாக மாற்றிட திராவிடக் கழகம் ஏன் முயற்சி செய்ய வில்லை?அப்படிச்செய்தால் ஜாதிப்பாகுபாடு ஒழிந்துவிடுமே.

பிராமணர் அல்லாத அனைத்து இந்து ஜாதிமக்களுக்கும் தினமும் சமஸ்க்ருதம் கற்றுத் தரலாமே! தினமும் வேதம் ஓதுவதற்கு பயிற்றுவிக்கலாமே!இதைச் செய்வதால் கி.பி.2020 வேண்டாம். . . கி.பி.3010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எல்லோரும் பிராமணர்கள்தான் என அறிவிக்க வேண்டியது தானே!

திராவிடக் கழகத்தின் வாரிசான தி.மு.க.விற்கு இதைச் செய்யும் படி வலியுறுத்தலாமே.அது சரி! தமிழினத் தலைவர் என தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட கருணாநிதிக்கே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைப்படுத்திட 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.
தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் சமஸ்க்ருதத்தை அனைவருக்கும் கட்டாயப்பாடமாக்கிட இன்னும் எத்தனை 30 ஆண்டுகள் தேவைப்படுமோ?

தி க எப்படி சிந்திக்கிறதோ அதேபோலத்தான் தி மு க வும் சிந்திக்கிறது?
சமத்துவபுரம் தமிழ்நாடு முழுவதும் தி மு க கட்டிக்கொண்டே இருக்கிறது.இதனால்,ஜாதியை ஒழித்துவிடலாமாம்.
சரி அது திமுகவின் நம்பிக்கையாக இருக்கட்டும்.அந்த சமத்துவபுரங்களில் கட்டப்படும் வீடுகளில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் வாழ்வதற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டும் ஏன் பச்சை நிறம் வெளிப்புறமாக அடிக்க வேண்டும்?

இந்தியை ஒழிப்போம் என 30 வருடங்கள் தி மு க கோஷமிட்டது.அதே 30 ஆண்டுகளில் தி மு க வின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்தி படித்து யு பி எஸ் சி எழுதி டெல்லி செக்ரட்டேரியேட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர்.எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் திமுகவுக்கு ஆதரவாக டெல்லி செக்ரட்டரியேட்டை மாற்றுவது இவர்களின் வேலை! இன்று கருணாநிதியின் செல்வ மகள் கனிமொழி இந்தி பண்டிட்!!!

அஞ்சா நெஞ்சர் அழகிரி தனது தேர்தல் பிரச்சாரத்தை யோகநரசிம்மர் ஆலயத்தில் ஆரம்பிக்கிறார்.நமது துணை முதல்வர் ஸ்டாலின் வீட்டின் வரண்டாவில் ஒரு தீபம் ஏற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.அதனால்,அவருக்கு துணை முதல்வர்பதவி கிடைத்தது.
யாராக இருந்தாலும் என்ன நினைக்கிறோமோ,அதை மட்டுமே சொல்ல வேண்டும்; என்ன சொல்லுகிறோமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.இப்படி செயல்படுபவர்கள் எப்போதும் இறைவனுக்குச் சமமாகப்போற்றப்படுவார்.

குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டினம் என்ற முகவரியில் இயங்கும் பதிப்பத்தினர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற சிறிய புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளனர்.அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை நாம் உணர்ந்தால் நமது ஆன்மீக பூமியான தமிழ்நாடை இந்த நாத்திகச்சிங்கங்கள் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தியிருக்கின்றனர் என்பது விளங்கும்.

No comments:

Post a Comment