Thursday, February 25, 2010

மலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்


மலையாள மசாஜ் சிகிச்சை என்றால் என்ன?

ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும்,மருத்துவமுறைகளும் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ்(உடலை பிடித்துவிடுதல்) ஆகும்.இந்தமுறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன.

சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு ஆயுர்வேதத்தில் ‘அப்யங்கா’ என்று பெயர்.அப்யங்காவில் உடல் முழுவதும் மூலிகை எண்ணெய்யை தடவி,மெதுவாகப்பிடித்துவிடுவது.இதனால்,ஆழ்ந்த தூக்கம் வரும்.உடல்,மனம்,மூளை இம்மூன்றும் நல்ல சுறுசுறுப்பை அடையும்.

இன்னொரு முறைக்குப்பெயர் ‘ஞவரக்கிழி’ இதில்,உடல் முழுக்க மூலிகை எண்ணெய்யை தடவிவிட்டு,ஞவரா அரிசி(மூலிகை சத்துக்களை புகுத்தப்பட்ட அரிசி)யை துணியில் கட்டி,அதை பொட்டலமாக்கி,அதைக்கொண்டு உடலின் ஒவ்வொருபாகமாக அழுத்துவது.

‘பிழிச்சல்’என்றொரு முறை உண்டு.இதில் இளம் சூடான மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி,ஒரு தாள கதியில் உடலை அழுத்தித் தேய்ப்பது.மசாஜீக்கு வந்திருப்பவரின் உடல் உபாதையைப் பொறுத்து,மசாஜ் செய்பவர்கள் முதுகு,இடுப்பு போன்ற பகுதிகளை காலால் மிதித்து மசாஜ் செய்வர்.ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வீதம் குறைந்தது ஒரு வாரம் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ் செய்ய வேண்டியிருக்கும்.இதனால்,ஆர்த்திரிடிஸ், பக்கவாதம்,நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும்.

ஒற்றைத்தலைவலி, இரட்டைத்தலைவலி,மூக்கடைப்பு,தொண்டை வாய் உலர்ந்து போகுதல் போன்றவை நீண்ட நாட்களாக இருந்தால் அதை சரிசெய்ய ‘சிரோ வஸ்தி’ என்ற முறை இருக்கிறது.தலையில் தோலான மேல்,கீழ்பக்கம் திறந்த தொப்பியை தலையில் வைத்து,குழல் வழியாக இளஞ்சூடான மூலிகை எண்ணெய்யை குறிப்பிட்ட நேரத்திற்கு ஊற்றுவர்.இதனால்,இந்நோய்கள் ஓடிவிடும்.

ஆண்மை பெருக சிட்டுக்குருவி லேகியமும்,லேட்டஸ்டாக வயாகராவும் பிரபலம்.அதனால்,பக்கவிளைவுகள் அதிகம் எனத் தெரிந்தும் அதில் போய் விழுந்து தன்னை அழித்துக்கொள்பவர்கள் அதிகம்.பக்கவிளைவுகளற்ற ஆயுர்வேத முறையான காயகல்ப சிகிச்சை செய்தால் போதும்.ஒரே நிபந்தனை 50 வயதுக்குள் இந்த காய கல்ப சிகிச்சை செய்துகொண்டால்,50 வயதுக்கு மேலும் படுக்கையில் துள்ளி விளையாடலாம்.

சிரோதாரா என்ற ஆயுர்வேத சிகிச்சையானது டென்ஷனோடு வாழ்ந்துவருபவர்களுக்கு மிக அவசியமானது.தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள்,உளவுத்துறையில் இருப்பவர்கள்,அரசியல்கட்சியில் கொள்கை வகுப்பவர்கள்,அரசாங்கத்தின் நிழல் சக்தியாக செயல்படுபவர்கள் மற்றும் டென்ஷனோடு வாழ்பவர்களுக்கு சிரோதாரா மிகச்சிறந்த சிகிச்சையாகும்.
மூலிகை எண்ணெய்,மூலிகை சேர்க்கப்பட்ட பால்,மோர் அல்லது மூலிகைச்சாற்றினை சிறிய குழல் வழியாக நெற்றியில் தொடர்ந்து விழும்படி செய்வதுதான் ‘சிரோதாரா’
இந்த ஆயுர்வேத சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் கேரளாவின் மழைக்காலம்தான்.அப்போது இந்த சிகிச்சை அதிக பலன் தரும்.தூசிகள் இராது.தோலில் இருக்கும் துவாரங்கள் விரிந்து பெரிதாகும்.இதனால்,மூலிகை எண்ணெய் உடலினுள் இழுக்கப்படும்.

No comments:

Post a Comment