Friday, February 26, 2010

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்

ஒருவரது பிறந்த நட்சத்தரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி,திருஅண்ணாமலை,பழனி,திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர்,திருப்பதி,திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அசுவினி - எட்டி

பரணி - நெல்லி

கார்த்திகை - அத்தி

ரோகிணி - நாவல்

மிருகசீரிடம் - கருங்காலி

திருவாதிரை - செங்கரு

புனர்பூசம் - மூங்கில்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆலமரம்

பூரம் - பலாசு

உத்திரம் - அலரி

அஸ்தம் - வேலம்

சித்திரை - வில்வம்

சுவாதி - மருதம்
விசாகம் - விளா

அனுஷம் - மகிழம்

கேட்டை - பிராய்

மூலம் - மாமரம்

பூராடம் - வஞ்சி

உத்திராடம் - பலாசு

திருவோணம் - எருக்கு

அவிட்டம் - வன்னி

சதயம் - கடம்பு

பூரட்டாதி - தேமா

உத்திரட்டாதி - வேப்பை

ரேவதி - இலுப்பை


No comments:

Post a Comment