Monday, February 22, 2010

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள்;நிம்மதியாக வாழுங்கள்


உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
பசுவுக்கு அகத்திக்கீரை ஒரு முறை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் உடனே தீர்ந்துவிடும்.பசுவை
இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம்.
திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரமண மகரிஷியின் ஆசிரமத்திலும், அஷ்ட லிங்கங்களில் சில லிங்கங்களின் வாசல்களிலும் பசுக்களைக் காணலாம்.
சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே காம ரீதியான குற்றங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும்.பழமையான கோயில்களில் இதையே செய்தால் எவ்வளவு சிறப்பு!!!

No comments:

Post a Comment