Friday, January 10, 2020

ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் அருளாசியைப் பெற



ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் அருளாசியைப் பெற

உலகத்தின் குருவாக நமது பாரத நாடு எப்போதும் இருக்கின்றது;எல்லா யுகத்திலும் பாரதமே உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டி! 1850 வரை உலகின் முதன்மை வல்லரசு நாடாகவும்,பணக்கார நாடாகவும் இருந்த நமது பாரதம் மீண்டும் 2020 முதல் வல்லரசு நாடாகிவிடும்;2020 நிறைவடையும் போது பாரத நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும்;

இதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியினால்,பாரதநாட்டுக்கு அருகில் இருக்கும் நாடுகளான ஸ்ரீலங்கா,நேபாளம்,பூட்டான்,பங்களாதேஷ்,மியான்மர்,மாலத்தீவு,மொரிசியஷ் போன்ற நாடுகளின் தனி நபர் வருமானம் அதிகரித்து,ஆசியாவின் பொருளாதாரம் வலிமையடையும்;

   மீண்டும் உலக அரசியல்,உலக பொருளாதாரம்,உலக ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாக 2020 முதல் 2040க்குள் ஆகிவிடும்;இதன் தாக்கம் அடுத்த 3000 ஆண்டுகள் வரை தொடரும் என்று நாடி நூல்கள் தெரிவிக்கின்றன;


நார்ஸ்டர்டாமஸ் அடுத்த 2000 ஆண்டுகள் வரை என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கணித்திருக்கின்றார்;அந்த கணிப்புகளின் தொகுப்புக்கு நூற்றாண்டுகள் என்று பெயர்;இந்த பெயரில் தமிழ் மொழியிலும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளன;

இவரைவிடவும் அடுத்த 10,000 ஆண்டுகள் வரை நமது உலகத்தில் என்னென்ன நிகழும் என்பதை ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்த வீரப்பிரம்மம் என்ற மகான் கணித்திருக்கின்றார்;அந்த கணிப்புகள் கால ஞானம் என்ற பெயரில் தமிழ் மொழியில் புத்தகமாக வெளிவந்திருக்கின்றது;


கிருத யுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று நான்கு யுகங்களும் சேர்ந்து 43,20,000 ஆண்டுகள் ஆகின்றன;

நாம் இப்போது கலியுகத்தில் 5121 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;1,72,80,000 ஆண்டுகள் ஆனால்,அதற்கு மஹாயுகம் ஆகும்;
41,47,20,000 ஆண்டுகள் ஆன பிறகு காலக் கணக்கு மாற இருக்கின்றது;இப்போது ஜோதிடக்கலையில் அசுபதி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக கணக்கில் எடுக்கப்பட்டு,ரேவதி நட்சத்திரம் இறுதி நட்சத்திரமாகப் போற்றப்படுகின்றது;41,47,20,000 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாக எடுக்கப்பட்டு,பின்னோக்கி நட்சத்திரங்களை வரிசைப்படுத்தும் பழக்கம் வர இருக்கின்றது;அந்த அடிப்படையில் மூலம் நட்சத்திரமே இறுதி நட்சத்திரமாக எண்ணப்படும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் உபதேசம் செய்துள்ளார்;


விருச்சிக ராசியை செவ்வாய் கடக்கும் போது கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் காலத்தில் ஜீவசமாதி ஆன மகான்கள் ஒளி வடிவில் வெளிப்படுவார்கள்;

அந்த சமயத்தில் மகான்களுக்கு படையல் இட்டு,சிவ மந்திரங்கள் ஜபித்து,பூஜை,அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் அவருடைய அருளைப் பெறலாம்;ஜீவசமாதி ஆன மகான்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகள்,சாதுக்கள் தமிழ்நாடு முழுவதும்  எல்லா ஊர்களில் ஐக்கியமாகி உள்ளார்கள்: 

இவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும்;

28.1.2020 செவ்வாய்

4.2.2020 செவ்வாய்

20.10.2020 செவ்வாய்

17.11.2020 செவ்வாய்

இந்த இரண்டு நாட்களிலும் உங்கள் ஊரில் ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் இருப்பிடத்தில் (அதிஷ்டானம்/ஜீவசமாதி/ஆலயம்) மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில்ஆறு வகையான உணவுகளை படையல் இட்டு,சிவபுராணம் அல்லது சைவ சமயத் திருமுறை பாடிவிட்டு அன்னதானம் செய்தால் போதுமானது;

இப்படி ஒரே ஒரு நாள் மட்டுமாவது தனி ஒருவராகவோ அல்லது கூட்டாக சிலர் சேர்ந்தோ அன்னதானம் செய்வதால்,ஒவ்வொருவருடைய நீண்டகால துக்கங்கள்,கடன்,நோய்,தீராத சோகங்கள் படிப்படியாக அதே சமயம் நிரந்தரமாக தீர்ந்துவிடும்;வருமானம் அதிகரிக்கும்;பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினை வேகமாக முடிவுக்கு வந்துவிடும்;யாருக்கு என்ன நியாயமான ஏக்கமோ அது அந்த ஜீவசமாதி ஆன மகான்/துறவி/சித்தரால் நிறைவேறிவிடும்;

மீண்டும் இதே போன்ற நாட்கள் அமைய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்;

No comments:

Post a Comment