Friday, January 10, 2020

தீரவே தீராத பிரச்சினைகளைத் தீர்க்கும் வராகி ஜபம்!



தீரவே தீராத பிரச்சினைகளைத் தீர்க்கும் வராகி ஜபம்!
    
உங்களுடைய வயது ஆண் எனில் 21 நிரம்பியிருக்க வேண்டும்;பெண் எனில்,18 நிரம்பியிருக்க வேண்டும்;கண்டிப்பாக ,அசைவம் சாப்பிடுவதை கைவிட்டிருக்க வேண்டும்;மது அருந்தவே கூடாது;

இன்று 14.1.2020 செவ்வாய்க்கிழமை அன்னை மஹாவராகியின் அருளைத் தரும் தேய்பிறை பஞ்சமி திதி!!! இன்று முதல் வராகியை ஜன்மாந்திர அன்னையாக நினைக்கிறேன் என்று மனதில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்;

வராகி ஜபம் செய்வதை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்ளலாம்;ரகசிய வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று;’

ஒருவேளை எல்லோருக்கும் தெரியும்படியாக நீங்கள் வராகி ஜபத்தை ஆரம்பித்தால்,சில நாட்கள் மட்டுமே ஜபிப்பீர்கள்:அதன் பிறகு,ஜபிக்க முடியாது;மனிதர்களின் தீய எண்ணங்களுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது;

எப்படி ஜபிப்பது?

ஒரு புதிய துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்;அந்த துண்டு வெண்மை நிறமாக இருக்கலாம்; அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறம் நன்று;இதை ஜபத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;

இலுப்பை எண்ணெய் அல்லது கலப்படம் இல்லாத நெய்யில் தீபம் ஏற்றுங்கள்:தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்;   பிறகு,
சந்தன வாசம் அல்லது மல்லிகைப்பூ வாசம் அல்லது சாம்பிராணி வாசம் தரும் பத்தியை பொருத்துங்கள்;

வராகி மாலையை ஜபியுங்கள்;இரவில் மட்டுமே வராகி மாலையை ஜபிக்க வேண்டும்;இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜபித்து வாருங்கள்:
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 3 ஆண்டுகள் வரை தினமும் வராகி மாலை ஜபித்து வருக!

வெகுசீக்கிரமாக உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்கள் தீர வேண்டுமா? அதற்கும் வழி இருக்கிறது;

ஒரு நாளுக்கு ஐந்து முறை வராகி மாலையை ஜபியுங்கள்;அப்படி 90 நாட்கள் ஜபியுங்கள்:உங்கள் 10 வருட,15 வருட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்;

சிலருக்கு பல முற்பிறவி கர்மவினைகள் பெருமளவு இருக்கும்;அவர்களது வாழ்க்கை மிகவும் சராசரியாக இருக்கும்;ஆனால்,நிம்மதியான,வளமான வாழ்க்கை நமக்கு கிடைக்காதா? என்று ஏங்குவோர் 91 வது நாளில் இருந்து மீண்டும் , தினமும் 5 முறை வராகி மாலையை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;

இரண்டாவது 90 நாட்கள் ஜபித்து முடித்ததும்,91 வது நாளில் மீண்டும் ஐந்து முறை வராகி மாலையை தினமும் ஜபிக்க வேண்டும்;இப்படி ஐந்து 90 நாட்கள் வரை ஜபித்து வருவதால்,அன்னை மஹாவராகியின் கருணை கிட்டிவிடும்; உங்களது நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி விடுவாள்:


தினமும் ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்துவிடுங்கள்;
ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் அன்னைக்கு படையல் வைக்கலாம்;சிகப்பு நிறக் கனிகள் வைக்கலாம்;இரவில் வைத்த படையலை காலையில் எடுத்து நீங்கள் சாப்பிடலாம்;

No comments:

Post a Comment