Monday, January 13, 2020

சனி+ராகு சேர்க்கையின் தீமையை விலக்கிட




                                                   சனி+ராகு சேர்க்கையின் தீமையை விலக்கிட

உங்கள் பிறந்த ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சனியுடன் ராகு சேர்ந்திருந்தால் அல்லது சனியானது திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரத்தில் நிற்கும் போது நீங்கள் பிறந்திருந்தால் தொழிலில் அடிக்கடி நிலையற்ற தன்மை இருக்கும்;வேலைக்குச் சென்றால்,ஒரு இடத்திலும் நிரந்தரமாகப் பணிபுரிய இயலாது;அசைவ உணவின் மீதும்,மது,போதைப் பொருட்கள் மீதும் நாட்டம் இருந்து கொண்டே இருக்கும்;

அதே போல,உங்களுடைய ஜாதகத்தில் ராகு கிரகம் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி என்று மூன்று நட்சத்திரங்களில் ஒன்றில் இருக்கும் போது பிறந்திருந்தாலும் இதே நிலைதான்!
ராகு மஹாதிசையோ,சனி மஹாதிசையோ உங்களுடைய இப்பிறவியில் வர வேண்டும்;அப்படி வந்தால் தான் இப்படிப்பட்ட நிலை என்று இல்லை;இப்படிப்பட்ட கிரக அமைப்பு இருந்தாலே போதும்;


இதைச் சரிசெய்ய பாம்பாட்டி சித்தர் நமக்கு ஒரு சுலபமான அபிஷேக முறையை போதித்திருக்கின்றார்; அருள்மிகு வைத்திய நாத சுவாமி என்ற பெயரில் மூலவர் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;

அங்கே ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் அபிஷேகம் நமது செலவில் செய்ய வேண்டும்;இப்படி 8 ஆயில்யம் நட்சத்திர நாட்களில் அபிசேகமும்,அர்ச்சனையும் செய்துவிட்டால்,சனி+ராகு சேர்க்கையால் விளைந்த தொழில்/வேலை நிலையற்ற தன்மை மாறிவிடும்;

இந்தப் பரிகாரம் செய்தாலும்,பரிகாரம் நிறைவு செய்த நாள் முதல் 3 ஆண்டுகள் அசைவம்,மது=இரண்டையும் கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே தாங்கள் செய்த பரிகார பூஜை பலன்களை அள்ளித் தரும்;(நிம்மதியான,ருணமற்ற வாழ்க்கை இப்பிறவி முழுவதும் கிட்டும்)

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே இருக்கும் கால பைரவருக்கு அபய ஸர்ப்ப பைரவர் என்று பெயர்!


உதாரணம்:அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்;

ஓம் பாம்பாட்டி சித்தகுரு நமஹ

No comments:

Post a Comment