Friday, January 10, 2020

பல மடங்கு ஆன்மீக முன்னேற்றம் தரும் சந்திர கிரகண ஜபம்!!!



உங்களது இப்பிறவி வாழ்க்கையை தீர்மானித்தது யார் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


போன 4 ஜன்மங்களில் நீங்கள் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்பாகவே உங்களுக்கு இப்பிறவியில் இந்த வேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;இவ்வளவு வருமானமும்,சொத்துக்களும் கிடைத்திருக்கின்றன;குடும்பம்,புகழ்,தனித்திறமை அனைத்துமே போன 4 பிறவிகளில் செய்த நற்செயல்களின் தொகுப்பு மட்டுமே!

அதே போல போன 4 பிறவிகளில் நீங்கள் செய்த அடாவடிகள்,அகங்காரங்கள்,தேவையற்ற தீமைகளே இப்பிறவியில் கடன்,நோய்,எதிரி,துரோகங்கள்,வம்பு வழக்குகளாகவும்,ஏழரைச்சனியில் அனுபவிக்கும் துயரங்களாகவும்,அஷ்டமச்சனியில் கைநழுவிப் போன வாய்ப்புகளாகவும் இருக்கின்றன;


புண்ணியத்தை அதிகப்படுத்துவதில் முதலிடம் வகிப்பது அன்னதானம்,இரண்டாம் இடத்தில் இருப்பது அண்ணாமலை கிரிவலம்,மூன்றாம் இடத்தில் இருப்பது நீங்கள் தினமும் நேரம் ஒதுக்கி செய்யும் மந்திர ஜபம்! மந்திரங்களில் உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டியவை;உபதேசம் பெறாமல் ஜபிக்க வேண்டியவை என்று இரண்டு வகைகள் இருக்கின்றன;

இதில்,உபதேசம் பெறாமல் ஜபிக்கக் கூடிய மந்திரங்களையே இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்;

ஆண் எனில் 14 வயது நிறைவடைந்த பின்னரும்,பெண் எனில்,பருவம் அடைந்த பின்னரும் இந்த மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

தரையில் அமர்ந்து,அதன் மீது எந்தவித விரிப்புகளும் இல்லாமல் மந்திரம் ஜபிக்கக் கூடாது;அப்படி ஜபித்தால்,அது பூமிக்குள் போய்விடும்;அதனால்,உங்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாமல் போய்விடும்;

பழமையான கோவிலுக்குள் அமர்ந்து அல்லது நடந்தவாறு ஜபிக்கலாம்;அங்கே கருங்கல்லே விரிப்புக்கு இணையாக இருக்கிறது;வீடு,தங்கும் இடம் எனில்,பூஜை அறை அல்லது தூங்காத அறை ஒன்றைத் தேர்வு செய்து அதில் ஒரு புதிய துண்டு/விரிப்பு விரித்து அதன் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;கிழக்கு/வடக்கு அமர்ந்து ஜபிக்க வேண்டும்;விரிப்பு மீது அமர்ந்திருக்கும் போது உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;


பலர் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா?


இந்த மந்திர ஜபம் எல்லாம் தாம்பத்திய சுகத்தை நிரந்தரமாகக் கைவிட்டவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று! இது முற்றிலும் தவறு!!! இல்லறத்தில் இருந்தவாறும்,திருமணம் செய்யாத ஆணும்,பெண்ணும் கூட மந்திர ஜபம் செய்யலாம்;ஜபித்து முடிக்கும் வரை உடல் சுத்தம் அவசியம்:அவ்வளவு தான்!


எந்த ஒரு மந்திரமும் ஒரு மணி நேரம் ஜபித்துவிட்டால் மட்டுமே பலன் தரும் என்று எண்ணக் கூடாது;ஒரு லட்சம் தடவை ஜபித்த பின்னர் தான் பலன் தர ஆரம்பிக்கும்;கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து/விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வரை ஒரு மந்திரத்தை ஜபிப்பது நன்று;பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஜபிக்கக் கூடாது;


சூரிய கிரகணம் நடைபெறும் போது ஆண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;


சந்திர கிரகணம் நடைபெறும் போது பெண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமானதை ஜபிக்கலாம்;

கிரகணம் துவங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;கிரகணம் முடிவதற்கு 15 நிமிடம் முன்பாகவே ஜபத்தை முடித்துவிட வேண்டும்;கிரகணம் முடிந்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்;


இப்படிச் செய்தால் மட்டுமே மந்திர ஜபம் பலன் தரும்;
ஒரு மந்திரத்தை நமது விட்டில் 1 முறை ஜபித்தால் 10 முறை ஜபித்த பலனைத் தரும்;


பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன்  தரும்;

தமிழ் மாதப் பிறப்பு,தமிழ் வருடப் பிறப்பு அன்று ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 மடங்கு பலன் தரும்;

கடலோரம் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,1 கோடி முறை ஜபித்த பலன் தரும்;

மலை மீது ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,2 கோடி மடங்கும்,
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகண நேரத்தில் ஜபித்தால் மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை பெருக்கல் 1000 கோடி மடங்கு பலன் தரும்;


10.1.2020 வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.37 முதல் நள்ளிரவு 2.42 வரை சந்திர கிரகணம் வர இருக்கிறது;

நீங்கள் இரவு 10.47 மணி முதல் பின்னிரவு 2.32 மணி வரை பெண் தெய்வ மந்திரம் ஒன்றை ஜபிக்கலாம்;சுமார் 3 மணி நேரம் 45 நிமிடம் வரை ஜபிக்க இயலாதவர்கள்,இதற்குள் 30 நிமிடம் மட்டுமாவது ஜபிப்பது போதுமானது;


ஒரு போதும் துரோகங்களும்,எதிர்ப்புகளும் உங்களை இனிமேல் நெருங்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால்,பிரபஞ்சத்தை ஆளும் அன்னை,கருணைக் கடல் மஹாவராகியை ஜபிக்கலாம்;

ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தை இந்த 3.45 மணி நேரம் வரையிலும் ஜபிக்கலாம்;

No comments:

Post a Comment