Thursday, February 10, 2011

வரி விலக்கு கவிதை:தி.உதயக்குமார்




ஜப்பானியப் படம் ஒன்றிலிருந்து

கதையைச் சுட்டோம்

அமெரிக்காவிலிருந்து அனிமேஷனுக்கு

ஆள் கூட்டி வந்தோம்

நடனமாட மும்பை அழகிகளை

இறக்குமதி செய்தோம்

பாடுவதற்கு பாலிவுட் பாடகர்களைப்

பயன்படுத்தினோம்

தெலுங்கு பேசும் ஹீரோவையும்

மலையாள வாசம் வீசும் ஹீரோயினையும்

இடம்பெறச் செய்தோம்

அதிக ஆங்கில வரிகளைச் சேர்க்குமாறு

ரைட்டரிடம் கேட்டுக்கொண்டோம்

கடைசியில். . .

படத்துக்குத் தமிழில் பெயர் வைத்து

வரிவிலக்கும் பெற்றுக்கொண்டோம்.



நன்றி:ஆனந்த விகடன்

No comments:

Post a Comment