Tuesday, February 8, 2011

மெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி




பொருளாதாரத்தினை திறந்துவிடுவது பற்றி மேலை நாடுகள் செய்யும் உபதேசங்கள் அலுப்பைத் தருகின்றன.அவர்களது உபதேசத்தை அவர்களே கடைபிடிப்பதில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் திரு.அசீம் பிரேம்ஜி அமெரிக்க தடையுத்தரவுகள் பற்றி சாடியுள்ளார்.அவர் இதை உலக பொருளாதார மன்றத்தில் பேசினார்.



பிற நாடுகல் அமெரிக்க பொருட்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என எதிர்பார்க்கும் அமெரிக்கா,தனது நாட்டில் வெளிநாட்டுப்பொருட்களுக்கு தடை விதிக்கிறது.அமெரிக்காவின் விசா கட்டண உயர்வு மற்றும் சேவை இறக்குமதித் தடைகளை பற்றி அவர் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து நாம்(இந்தியா) 50 பில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும்,இந்தியா 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி:சுதேசி செய்தி,பக்கம் 25,பிப்ரவரி 2011.

1 comment: