Monday, February 28, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேரில் வருக!!!





விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டுடன் இணைந்திருக்கும் முதலியார்பட்டித்தெருவில் நடுவில் அமைந்திருப்பது பத்திரகாளியம்மன் திருக்கோவில்.நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஓரத்தில் இருக்கும் புகைப்படம் இந்த பத்திரகாளியம்மாளின் புகைப்படமே.

ஒவ்வொரு வருடமும் வரும் சிவராத்திரியன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் (கரண்டி இல்லாமல்)வெறும் கையாலேயே அப்பம் சுட்டு எடுப்பார்.அப்படி எடுக்கப்பட்ட அப்பங்கள் பத்திரகாளியம்மாளுக்கு படைக்கப்பட்டு,அன்றிரவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த பத்திரகாளியம்மாளின் சக்தியை,அருளாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் வருபவர்களின் வாழ்க்கையில் தீராத பல பிரச்னைகள் தீருகின்றன.இந்த பத்திரகாளியம்மனின் அருளாற்றலை விவரிக்க ஒருதனி வலைப்பூவே நடத்திட முடியும்.(ஆன்மீகக்கடல் வலைப்பூவையே தினமும் பதிவுகள் செய்ய இயலவில்லை)



அப்படி பிரச்னை தீர்ந்தவர்களில் நானும் ஒருவன்.எனது பகுத்தறிவினால்,பலமுறை இந்த பத்திரகாளியின் சக்தியை உணர்ந்தவன்.8.8.2004 முதல் இன்றுவரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருப்பவள்;என்னை பாதுகாப்பவள்;எனக்கு மாபெரும் பிரச்னைகள் வந்த போதெல்லாம் எந்த வித அரசியல் செல்வாக்கும்,போலீஸ் செல்வாக்கும் பண செல்வாக்கும் இல்லாமலேயே என்னை அந்த பிரச்னைகளிலிருந்து காத்துவருபவள் இந்த பத்திரகாளியம்மன் மட்டுமே!

நீங்களும் ஒருமுறை எனது அம்மனை வந்து தரிசித்து,ஆசிர்வாதம் பெற்று,நிம்மதியாக வாழ்க!

2.3.2011 புதன் கிழமையன்று இந்த வருடம் சிவராத்திரி வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித்தெருவிற்கு வருக!!!எனது அம்மா பத்திரகாளியன்னையின் அருளைப் பெறுக!!!

அங்கே என்னையும் சந்திக்கலாம்.

No comments:

Post a Comment