Thursday, February 10, 2011

மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்




மாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.

நீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.

பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

கலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!

அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!

இந்த பதிவு நமது ஆன்மீகக்கடலின் மறுபதிவு ஆகும்.

1 comment:

  1. அய்யா வியாழன் இரவுதான் பௌர்ணமி வெள்ளி பகல் 2 மணியளவில் முடிந்து விடுகிறது, தவறை திருத்தவும்

    ReplyDelete