Wednesday, January 5, 2011

முன்கோபம் தீர உதவிய ஓம்சிவசிவஓம்




ஒரு இல்லத்தரசி அவர்.வயது 40களை நெருங்குகிறது.இரண்டு குழந்தைகள் அவருக்கு இருக்கின்றன.கணவனைப் பிரிந்து வாழத்துவங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.இவரது முன்கோபமும்,எந்த ரகசியத்தையும் பாதுகாக்கத் தெரியாமையும் இவர்களது பிரிவினைக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.ஒரு நாளுக்கு நான்கு முறை தற்கொலைக்கு முயன்றவர் எனில்,இவரது சுபாவம் எப்படிப் பட்டது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.






நமது வலைப்பூவை வாசித்து,நமது சிவ மகா மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.இந்த மந்திர ஜபம்,தற்போது அவருக்கு இரண்டாவது மாதத்தைத் தொட ஆரம்பித்திருக்கிறது.மாதவிலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் வரையிலும் ஜபிப்பதில்லை;அசைவமும் சாப்பிடுவதில்லை.






தன்னைச் சுற்றி வாழும் பல இல்லத்தரசிகள் பக்காவாக திட்டமிட்டுச் செய்யும் தவறுகளை இவரது தனது திறமையால் கண்டறிந்திருக்கிறார்.விளைவு? இப்படியெல்லாமா இல்லத்தரசிகள் வாழ்கிறார்கள் என்பது இவர்களின் அதிர்ச்சி.காரணம் இவரது மனோபாவமே குழந்தை மனோபாவம்.அதுவும் பிடிவாதமும்,கோபமும் இவரது தனி அடையாளம்.இதனால்,தவறுசெய்பவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இவருக்கு பழகுவதற்குக்கூட ஒரு பெண்ணும் இல்லை.அந்த அளவுக்கு இவரது மனதில் எந்த ரகசியமும் தங்காது.பிறர் இவரை தனது எதிரிகளைப் பழிவாங்கிட,புறணி பேச மட்டுமே பயன்படுத்திவருகின்றனர்.






தற்போது,இவரது முன்கோபம் பெருமளவு குறைய ஆரம்பித்திருக்கிறது.எவரும் எப்படியும் வாழட்டும்.நான் இனி அடுத்தவர்களைப்பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டேன்.ஆராய்ச்சி செய்தால்,அவர்களின் நரித்தனம் வெளிப்படுகிறது.அப்படி வெளிப்பட்டால்,அவர்களை நேசிக்க முடியவில்லை;அவர்களின் சாகசத்தை ஒருவரிடமாவது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று 38 ஆம் வயதில் ஓம்சிவசிவஓம் உணர்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment