Friday, January 29, 2010

திருமணம் என்ற அமைப்பைச் சிதைக்கும் திருமணத்தரகர்கள்



திருமணம் என்ற அமைப்பைச் சிதைக்கும் திருமணத்தரகர்கள்



உங்களது மகள் அல்லது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறீர்களா?

திருமணத் தரகரின் நம்பகத்தன்மையை தீர விசாரித்தப் பிறகு, அவர் மூலமாக

திருமண வரனைத் தேடுங்கள்.ஏனெனில்,தற்காலத்தைய திருமணத்தரகர்களில்

பெரும்பாலானவர்கள் 'பணத்திற்காக என்ன வேண்டுமானாலும்' செய்யும்

நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.இந்த நிலை கி.பி.1990 களின் மத்தியில்

இருந்து மிகப்பரவலாகிவிட்டது.



சில உதாரணங்களை நான் நேரில் வைக்கிறேன்.இந்த உதாரணங்கள்

நம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தவை.இதே போன்ற சம்பவங்கள் உங்களது ஊரிலும்

நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பது நிஜம்.



ராஜன் என்பவரின் வயது 22.ஒரு ஆலையில் பணிபுரிந்துவருகிறார்.இவருக்கு

இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.இவரது பெற்றோரும்

இவரும் அவ்வளவாக விபரம் தெரியாதவர்கள்.ராஜன் ஒரு பட்டதாரி;

இருந்தபோதிலும்,இவரது சுபாவம் யாரைப்போல என்றால்,சின்னத்தம்பி படத்தில்

வரும் பிரபுவின் கேரக்டரைவிட கொஞ்சம் புத்திசாலி.அவ்வளவே!





இவருக்கு ஒரு பெண்ணை திருமணத்தரகர் மூலமாக பார்த்தனர்.இந்தப் பெண்ணின்

குடும்பம் ராஜன் வாழும் ஊரின் பக்கத்து ஊரில் வசிக்கிறது.

இந்தப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்து வரும் சம்பவங்களை இங்கே

அச்சில் எழுத முடியாதவை.ஆனாலும்,இந்தப் பெண்ணின் பெற்றோர் திருமணத்

தரகரிடம் பேரம் பேசியுள்ளனர்.

'அய்யா தரகரே! எனது மகளுக்கு நீங்கள் திருமணம் செய்துவைத்துவிட்டால்,

உங்களுக்கு ரூ.5,000/- தரகாக (திருமண கமிஷனாக) வாங்கிக் கொள்ளுங்கள்.

அவளைப் பற்றி நாங்கள் கேள்விப்படும் விஷயங்களை எங்களால்

மறுக்கவோ,மறைக்கவோ முடியவில்லை'



ராஜனையும்,அந்தப்பெண்ணையும் பெண்பார்க்க வைத்தார் ஒரு திருமணத்தரகர்.

அப்படி பெண்பார்க்கும் சில நிமிடங்களுக்கு முன்பு,எல்லோருக்கும் காபி

வாங்கிக் கொடுத்தார்.ராஜனுக்குக் கொடுக்கப்பட்ட காபியில் ஒரு 'மந்திரீகம்

செய்யப்பட்ட பொடியை' கலந்து கொடுத்தார்.ராஜன் வசியமானான்.

கோவில் ஒன்றில் பெண்பார்க்கும் படலம் நடந்தது.கோவிலில் எல்லோர்

முன்னிலையிலும்,'இவளைத்தான் நான் திருமணம் செய்வேன்'என அடம்

பிடித்தான்.

மூன்று நாட்களுக்குள் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்தது.நான்காம்

நாள் காலையில் ராஜன் தனது பெற்றோரிடம் எனக்கு எப்போது

நிச்சயதார்த்தம் நடந்தது? எனக்கேட்டான்.ராஜனின் பெற்றோர்கள் அதிர்ந்தனர்.

இருந்தாலும்,ஊராரின் ஏச்சுக்கு ஆளாகாமலிருக்க இந்த திருமணத்திற்கு

சம்மதித்தனர்.

திருமணம் நடந்தது.திருமணமான அன்றிரவு,முதலிரவன்று மணப்பெண்

சொன்ன வார்த்தைகளால் ராஜன் அதிர்ச்சியடைந்தான்.

"இன்று உனக்கு முதலிரவு.அதனால்தான் நான் 'இதுக்கு'சம்மதிக்கிறேன்"என்றாள்.

மறுநாள் முதல்,மணப்பெண் தன் கணவனான ராஜனை தனது பெற்றோரின்

ஊருக்கு குடியேற வைக்க 7 நாட்கள் வரை பிரம்மப்பிரயத்தனம் செய்தாள்.

கதை நடக்க வில்லை.

8 ஆம் நாள்,ராஜனின் வீட்டின் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒரு ரூபாய்

காயின் பாக்ஸிலிருந்து மணப்பெண் தனது வீட்டிற்கு போன் செய்தாள்.

தன்னை ரொம்ப கொடுமை படுத்துகிறார்கள்.எனவே,இப்பவே ,உடனே

வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு அழுதுவிட்டு போனைத் துண்டித்து

விட்டாள்.போனைத் துண்டித்துவிட்டு,கையோடு கொண்டு வந்திருந்த

பிளேடால் தனது கை கால்கள்,இடுப்பில் கீச்சிவிட்டு நடுத்தெருவில் படுத்து

அழுது அரற்றத் துவங்கிவிட்டாள்.

அது கிராமம் ஆக இருந்ததால்,கிராமமே கூடிவிட்டது.

21 நாளில் காவல் நிலையத்தில் வரதட்சணை திருப்பித்தரப்பட்டு,இருவரும்

பிரிந்தனர்.

அந்தப்பெண் மணிக்கும் அவளது அக்கா மாப்பிள்ளைக்கும் நீண்ட காலமாக

உறவு இருந்திருக்கிறது.அந்தப்பெண்மணி பிரசவ மருத்துவமனையில்

பணிபுரிவதால்,அவளால் சுலபமாக 10 வருடத்தில் சுமார் 5 முறை கருக்கலைக்க

முடிந்திருக்கிறது.



இன்னொரு நிஜக்கதை:

ஒரு தம்பதிக்கு ஒரே மகன்.ஏழைக்குடும்பம் தான்.தினக்கூலியாக அம்மா,அப்பா,

மகன் மூவருமே வேலைபார்த்துவருகின்றனர்.அப்பாவானவர்,தனது பக்கத்து

தெருவில் உள்ள ஒரு அடாவடிப்பெரியவரிடம் ரூ.10,000/-கடன் வாங்கியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக கடனுக்கு வட்டி கட்ட வில்லை;கடன் வாங்கி 3 ஆண்டுகள்

ஆகிறது.திடீரென,அந்த அடாவடி பெருசு,இந்த அப்பாவுக்கு கெடு விதித்தார்.



கெடு முடிந்தது;மறுநாள் வந்தார்.நான் கொடுத்த பணத்தை வட்டியோடு தா

எனக் கேட்டார்.என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.ஒரு ஆண்டுக்கான

வட்டியைத் தருகிறேன் என அப்பாவானவர் மன்றாடினார்.அடாவடி பெருசு

தனது பரிவாரங்களுடன் வந்து அப்பாவை மிரட்டி,அவரது ஒரே மகனுக்கு

தனது மகளை நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்.திருமணத்தரகர் மூன்று

நாட்கள் தொடர்ந்து பேசி அப்பாவை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்தார்.

இப்படி சம்மதிக்க வைத்ததற்கு அவருக்கு ரூ.2000/-அந்த அடாவடி பெருசால்

வழங்கப்பட்டது.இதில் குறிப்பிடத்தக்க அதிசயமான அசிங்கம் என்னவெனில்

மணமகனின் வயது வெறும் 18.அடாவடிப் பெருசின் கடைசிமகளான

மணமகளின் வயது 28.இருவரும் சேர்ந்து வாழ்ந்தது வெறும் 7 நாட்கள்

மட்டுமே! மணமகள் கர்ப்பமானாள்.இருவரும் பிரிந்தனர்.

மணமகன் தனது காதலியுடன் தனது 19 ஆம் வயதில் ஓடிப்போனான்.மணமகள்

தனது .. வது காதலனுடன் சேர்ந்து வாழத்துவங்கினாள்.கூடவே தனது

1 வயது மகனுடன்.தவிர,போலீஸ்காரர் ஒருவரையும் அந்த மணமகள்

இன்று வரை காதலித்துக்கொண்டிருக்கிறாள்.வடிவேல் ஜோக்குகளில் ஒன்று

இதே போல வரும் இல்லையா?அது வெறும் ஜோக் அல்ல.கொடூரமான

நிஜம்.



மூன்றாவதான நிஜம்:"யோவ் தரகரே! நீ என்ன செய்வியோ தெரியாது.

அந்த ஈ.பி.,ஏ.ஈ.,யின் ஒரே மகளை எனது மகனுக்கு முடிச்சுக் கொடுத்துடும்.

உமக்கு நீர் என்ன கேட்கிறீரோ அதை வாங்கிக்க" என ஒரு நடுத்தர

குடும்பத்தின் தலைவர் பேசுகிறார்.சரி உங்க மகனது பிறந்த ஜாதகத்தைக்

குடுங்க என திருமணத்தரகர் வாங்கிக் கொள்ளுகிறார்.



அந்த ஈ.பி.ஏ.ஈ.க்கு ஜோதிட நம்பிக்கை அதிகம்.கூடவே,இந்த திருமணத்

தரகரிடம் நல்ல பழக்கமும் கூட.ஈ.பி.,ஏ.ஈ.யின் மகளின் பிறந்த ஜாதக

நகலை வாங்கிய திருமணத்தரகர் செய்த முதல் காரியமே அவளின்

பிறந்த நட்சத்திரத்துக்குப் பொருத்தமான நட்சத்திரத்தினை கண்டறிந்து

அந்த நட்சத்திரத்தில் நாம் பார்த்தோமே,அந்த நடுத்தரக்குடும்பத்தின் மகன்

பிறந்ததாக போலி ஜாதகம் தயாரித்துவிட்டார்.





பிறகென்ன டும் டும் தான்.திருமணம் முடிந்தும் கூட, நடுத்தர குடும்பத்

தலைவரானவர்,திருமணத்தரகருக்கு கமிஷன் கூடத் தரவில்லை;

பதிலாக,திருமணத்தன்று,அந்தத் தரகருக்கு பட்டு வேட்டியும்,சட்டையும்

வாங்கிக் கொடுத்து,திருமணத்தில் 'முதல் மரியாதை'செய்துவிட்டார்.

திருமணமான ஒரே வருடத்தில் இந்தத் தம்பதி பிரிந்துவிட்டனர்.

எல்லாப் பழியும் இப்போது திருமணத்தரகரின் தலையில் விழுந்துவிட்டது.

இரண்டு வருடமாகப் போராடிய ஈ.பி.,ஏ.ஈ., தனது ஒரே மகளின்

வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து,நினைத்து

மாரடைப்பில் காலமாகிவிட்டார்.இப்போது,அம்மாவும் மகளும்

நடைபிணமாக வாழ்ந்துவர, கணவன் வீட்டார் இவர்களிடமிருந்து

பணம் கறந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

1.ரூ.10/-க்கு ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என்ற

புத்தகம் எங்கும் கிடைக்கிறது.அந்தப்புத்தகம் எல்லா திருமணத் தரகர்களிடமும்

இருக்கிறது.அதை வைத்து மட்டும் திருமணப்பொருத்தம் பார்ப்பது மாபெறும்

தவறு. மாப்பிள்ளை,பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்த பின்பே, முடிவு

செய்வது அவசியம்.

சர்ப்ப தோஷம்,தார தோஷம்,மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம், இருவரின்

சுபாவம் என பல கோணங்களில் ஆராய்ந்து திருமணப்பொருத்தம்

பார்த்தால் உங்களது வீட்டில் திருமணத்தால் எந்தப்பிரச்னையும் வராது.



2.திருமணத்தரகர் என்னதான் பிராடாக இருந்தாலும்,வரனின் பிறந்த ஜாதகத்தை

உண்மைதானா? என்று ஒரு முறை நம்பகமான ஜோதிடரைக்கொண்டு

பரிசோதிப்பது அவசியம்.(என்னிடம் வந்த பல திருமணப்பொருத்தம் பார்க்க

வந்த ஜாதகங்களில் ராசிக்கட்டத்தில் ஒன்பது கிரகங்கள் இல்லை.ஆறு அல்லது

எட்டு கிரகங்களே இருந்தன.இதில் வேடிக்கை என்னவென்றால்,அந்த

எட்டு கிரகங்களில் மூன்று சூரியன்கள் இருந்தன.திருமணத் தரகர்கள்

இப்படியெல்லாம் தடயத்தோடு தப்புக்கள் செய்கிறார்.



3. சில நிமிடங்களில் உங்களது ஆஸ்தான ஜோதிடரைக்கொண்டு,

உங்களது மகன்/மகளுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது தவறு.

உங்களுக்கு வந்துள்ள வரனின் பிறந்த ஜாதகத்தை ,இவரை/இவளைப்

பற்றி விரிவாகக் கூறுங்கள் என உங்களது ஆஸ்தான ஜோதிடரிடம்

கேட்டதுண்டா?அப்படிக் கேட்கும்போது உங்களது மகளை/மகனையும்

உடன் வைத்துக்கொண்டு அந்த வரனின் சுபாவத்தை அறிந்துகொள்ள

உங்களது மகன்/மகளுக்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுத்ததுண்டா?



(ஏனெனில் இறுதிவரை வாழப்போவது உங்களது மகன்/மகள் தானே?

இந்த சுபாவத்தை உங்களது மகன்/மகளால் ஏற்று குடும்பம் நடத்த

முடியுமா?என்பது உங்களுக்கா தெரியும்?.இதனால்தான் மறுமணத்

திருமணத் தகவல் மையங்களும்,இணையதளங்களும் பெருகிக்

கொண்டே செல்லுகின்றன)



4. ஆணோ அல்லது பெண்ணோ திருமணமாகி,வாழ வெட்டனாக(!),

வாழா வெட்டியாக பிறந்த வீட்டிற்கு வந்தால் அந்தக்கொடுமையை

அனுபவித்தால் மட்டுமே தெரியும்.அனுபவிக்காமல் தெரியாது.



5. திருமணம் என்பது முன்வினைப்படி அமைகிறது என சித்தர்கள்

கூறியுள்ளனர்.இருந்தாலும்,ஜோதிடம் என்ற அறிவியலின் மூலமாக

70% ப்ரச்னைகளைத் தீர்க்க முடியும்.



திருமணம் என்பது அழிந்து வரும் மரபாகும்.முடிந்தவரையில் இதைப் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment