Monday, January 25, 2010

செல்போனை எப்படி பயன்படுத்தக்கூடாது?


செல்போனை எப்படி பயன்படுத்துவது?

பின்வரும் செயல்களைச் செய்தால் செல்போன் உங்களுக்கு
ஏதாவது ஒரு விதத்தில் மகத்தான இம்சை தரும் என்பது
அனுபவ உண்மை.நன்றி:ஆனந்த விகடன் பக்கம் 57,21.1.10
மற்றும் சொந்த அனுபவங்கள்

1.எத்தனை நெருக்கமான நண்பராக/நண்பியாக இருந்தாலும்
உங்கள் அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி அவருக்கு
அல்லது அவளுக்கு சிம் கார்டு வாங்கித் தராதீர்கள்.

2.காதலி அல்லது காதலன் அல்லது நெருக்கமானவரின் மிக
அந்தரங்கமான செய்திகள்/வீடியோக்கள்/பேச்சுப்பதிவுகளை
பொக்கிஷம் போல(உங்களது செல்போனில்) பாதுகாத்து
வைக்காதீர்கள்.

3.எதிர்முனையில் பேசுபவர் உங்கள் உரையாடலைப் பதிவு
செய்யக்கூடும் என்பதால் மூன்றாம் நபரைப்பற்றி
(நீங்களாகவோ/கேட்டாலோ கூட) அவதூறாகப்
பேசாதீர்கள்.

4.உங்களது ஏ.டி.எம்.,வங்கிக் கணக்கு,ஆன் லைன் நடைமுறை
களுக்கான பாஸ்வேர்டுகளை செல்போனில் பதிவு செய்து
வைக்காதீர்கள்.

5.உங்களது மெமரிக்கார்டு முழுக்கவும் ஆபாசப் படங்களை
சேமித்து வைக்காதீர்கள்.உங்கள் அம்மா/சகோதரி அல்லது
அப்பா/சகோதரன் அவற்றைக் காண நேர்ந்தால் என்னாகும்?
என்று யோசியுங்கள்.

6.யாராக இருந்தாலும்,செல்போனில் 20 நிமிடங்களுக்குமேல்
பேசாதீர்கள்.

7.எப்போதும் வலதுகாதை மட்டும் செல்போன் பேச்சுக்கு
பயன்படுத்தாதீர்கள்.

8.பயன்படுத்தாத மற்றும் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம் என நீங்கள்
முடிவு செய்து ஒரு சிம் கார்டை வைத்திருந்தால் அதை
யாரிடமும் தரக்கூடாது;உங்கள் குப்பைத் தொட்டியில்
வீசி விடக்கூடாது.அந்த சிம் கார்டை இரு துண்டுகளாக
உடைத்துவிடுங்கள்.இது மிக நல்லது.

No comments:

Post a Comment