Wednesday, May 23, 2018

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!

உலகத்தில் இருந்து நிலாவுக்கு ராக்கெட்டில் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பியவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்;ஆல்ட்டிரின் குழுவினர்;அனுப்பி வைத்து அந்த புகழுக்கு காரணமாக இருந்தது அமெரிக்கா;

இவர்களைத் தவிர இன்னும் மூன்று குழுவினரை அமெரிக்கா நிலாவுக்கு அனுப்பிட பயிற்சி அளித்து தயார் செய்திருந்தார்கள்;

முதலாளித்துவ அமெரிக்காவுக்கு ஒரு தாகம் எப்போதும் உண்டு;ஒரு சவால் என்று வந்தால் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்;

நிலாவுக்கு யார் முதலில் செல்வது என்ற போட்டி ரஷ்யாவுக்கும்,அமெரிக்காவுக்கும் 1960களில் இருந்தது;


எனவே,நிலாவுக்கு அனுப்ப இருக்கும் விண்வெளிவீரர்களின் பிறந்த குறிப்பினை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஜோதிட ஆலோசனை கேட்டார்கள்:இங்கேதரப்பட்ட ஜோதிட ஆலோசனையின் படியே ஆர்ம்ஸ்டிராங் குழுவினை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள்;

இன்றைய காலகட்டத்தில் நமது ஊரில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ப்யூன் முதல் நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் வரை அவரவர் ரேஞ்சுக்கு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை கேட்ட பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்கின்றார்கள்;

இந்த சூழ்நிலை நமது பாரதநாட்டில் மட்டும் இருக்கின்றது என்று எண்ண வேண்டாம்;ஆசிய நாடுகளான ஸ்ரீலங்கா,மாலத்தீவு,மொரிஷியஸ்,சிங்கப்பூர்,மலேஷியா போன்ற நாடுகளில் வெளிப்படையாகவும்,உலகம் முழுவதும் படுரகசியமாகவும் உண்டு;

ஜோதிடத்தின் பிறப்பிடம் குமரிக்கண்டம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சில தினசரி செய்தித்தாள் நிறுவனங்கள் தமது நிறுவனத்திற்கு முக்கிய பணியாளர்களான எடிட்டர்கள்,சப் எடிட்டர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் தான் தேர்வு செய்கின்றார்கள்;

உலக வல்லரசுகளில் முதன்மையான வல்லரசு அமெரிக்கா! அதன் முதுகெலும்பாக விளங்குவது அதன் உளவுத்துறை அமைப்புகள்;இந்த அமைப்புகள் தமது பணியாளர்களை தேர்வு செய்வதே அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தான்;


ஐரோப்பாவில் இருக்கும் விமானம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் தனது தயாரிப்புகளை செய்யத் துவங்குவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாள் அன்று மட்டுமே!

நாத்திகத்தை கொள்கையாகக் கொண்டது கம்யூனிஸம்;உலகில் இன்று இருக்கும் ஒரே கம்யூனிஸ நாடு சீனா;சீனாவின் முக்கிய அரசு உயர் அமைப்பு அதன் மத்திய அமைச்சரவை;இது ஒவ்வொரு மாதமும் சீனாவின் சுதந்திர ஜாதகப்படி,அரசபட்சி நாள் அன்று மட்டுமே கூடி முக்கிய முடிவுகளை எடுத்துவருகின்றது;அதனால் தான்,உலக அரசியலில் சீனா இன்றும் வலுவான நாடாக ஐரோப்பாவுக்கும்,அமெரிக்காவுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது;

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் இருக்கும் தனியார் விண்வெளி ஏஜன்ஸிகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் உலக ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைப்படியே விண்ணுக்கு செயற்கைக் கோள்களையும்,ராக்கெட்டுகளையும் அனுப்பி வருகின்றது;

அமெரிக்காவின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் இணைய தளமுகவரி:https://acvaonline.org/

இங்கிலாந்தின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் முகவரி:
http://www.bava.org/

உலக அரசியல் வரலாற்றில்,ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த வெறும் ஒன்பது மாதங்களில் ஆளும் கட்சியாக மாறியது நமது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் தான்;அந்த கட்சியை ஆரம்பித்தவர் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே (அச்சுப்பிசகாமல்) பின்பற்றியதால் தான்! அது நமது தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் ஆகும்;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;
இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!

அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?

1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;

உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;

ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;



No comments:

Post a Comment