Tuesday, May 1, 2018

காரிய வெற்றிகளை அள்ளித் தரும் மந்திரம்


உலகில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் நினைத்தது நிகழ்ந்துவிட்டால்,உலக வாழ்க்கையே போரடித்துவிடும்;

தீவிரமான எண்ணங்கள் உள்ளவர்கள் தான் தமது லட்சியங்களில் ஜெயிக்கின்றார்கள்;அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வரை இடைவிடாமல் தனது லட்சியத்தை யார் நினைத்துக்கொண்டே இருக்கின்றார்களோ அவர்களே பிற்காலத்தில் மகத்தான சாதனையாளர்களாகின்றார்கள்;


ஆன்மீகப் பின்னணியும்,சொந்த ஆத்ம பலமும் இல்லாதவர்கள் இன்றைய குழப்பமான கலியுகத்தில் சாதிப்பது மிகவும் கடினமே!


தினமும் 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட வேண்டும்;சரியாக சூரியன் உதயம் ஆகும் போது அதைப் பார்த்தவாறு பின்வரும் சூர்ய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;வெறும் 19 முறை ஜபித்தால் மட்டும் போதும்;


இப்படி குறைந்தது 1008 நாட்கள்,அதாவது 3 ஆண்டுகள் ஜபித்துவர வேண்டும்;இதனால்,சுவாசக் கலையில் இருக்கும் தோஷங்கள் நீங்கிவிடும்;செய்கின்ற காரியங்களில் மகத்தான வெற்றியை அடைய முடியும்;


ஜபாகுஸீம சங்காஸம் காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

இதுதான் அந்த சூர்ய மந்திரம் ஆகும்;3 ஆண்டுகளுக்குப் பிறகு,இதற்கு உரிய எந்திரம்,ஹோம முறைகள்,தர்ப்பண பூஜை முறைகள் உங்களைத் தேடி வரும்;


தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்கள் மற்றும் ரிஷி இனத்தவர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளால் இதை தங்களுக்கு வழங்குகின்றோம்;



ஓம் ஸ்ரீலஸ்ரீ சத்குரு வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்!!!

No comments:

Post a Comment