Friday, May 25, 2018

அனைத்தையும் அள்ளித் தரும் சொப்பன வராகி!!!




உலகமக்கள் ஒவ்வொருவருடைய தலைவிதியையும் நவக்கிரகங்கள் நிர்ணயிக்கின்றன;நவக்கிரகங்களை நிர்வகித்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;இவர் சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் ஆணைப்படி,உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அவரது பெயரால் ஆட்சி புரிந்து வருகின்றார்;


மனிதனாக வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் எட்டுவிதமான செயல்களை தினமும் செய்து வருகின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் செய்வதன் மூலமாக 64 விதமான பாவம் அல்லது புண்ணியச் செயல்களை செய்ய முடியும்;எனவே,மனிதனின் கர்ம பரிபாலனத்தை தீர்மானிக்க மஹா கால பைரவப் பெருமான் எட்டுவிதமான பைரவர்களாக தோன்றினார்;இந்த எட்டுவிதமான பைரவர்களும் தோன்றிய வரலாறு வெகுசிலரிடம் மட்டுமே இருக்கின்றது;அட்டவீரட்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இவை தான் எட்டு பைரவர்கள் தோன்றியதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள்;இந்த எட்டு பைரவர்களும் மேலும் எட்டாக உதயமாகி 64 பைரவர்களாக அவதாரங்கள் எடுத்துள்ளார்கள்;

64 பைரவர்களுக்கு துணையாக 64 யோகினிகள் துணையாக இருந்து வருகின்றார்கள்;


இதில் உன்மத்த பைரவரின் துணை சக்தியே உன்மத்த வராகி!
வராகியின் அவதாரங்களும் 64 இருக்கின்றன;அவைகளில் அரிய வராகி அவதாரங்களின் பெயர்களை அறிந்து கொள்வோம்:

1.அஸ்திர வராகி
2.ஆக்ஞேசீ வராகி
3.இந்திர வராகி
4.ஈசான்ய வராகி
5.உச்சிஷ்ட வராகி
6.ஊர்த்வ வராகி
7.ருந்தினி வராகி
8.ரத்னேசீ வராகி
9.லவண வராகி
10.லிகித வராகி
11.ஏகாக்ஷரி வராகி
12.ஐந்தினி வராகி
13.ஓம்கார வராகி
14.ஓளஷத வராகி
15.அஸ்வாரூட வராகி
16.அக்ஷர வராகி
17.காகினீ வராகி
18.காமிய வராகி
19.கபாலினி வராகி
20.கிரிசக்ர வராகி
21.நித்ய வராகி
22.சமயேசீ வராகி
23.சங்கேதா வராகி
24.ஜம்பினி வராகி
25.ஜ்யேஷ்டா வராகி
26.ஞானேசீ வராகி
27.டாகினீ வராகி
28.டாமினீ வராகி
29.டாமர வராகி
30.டீகர வராகி
31.நீலி வராகி
32.தந்திர வராகி
33.தக்ஷிண வராகி
34.தண்டினி வராகி
35.தூம்ர வராகி
36.நவ வராகி
37.பஞ்சமீ வராகி
38.பந்தன வராகி
39.ப்ருஹத் வராகி
40.பக்த வராகி
41.மந்திர வராகி
42.யந்திர வராகி
43.ராகினீ வராகி
44.லாகினீ வராகி
45.வார்த்தாளீ வராகி
46.ஸங்கார வராகி
47.ஷோடேசீ பூஜித வராகி
48.ஸாகினீ வராகி
49.ஹாகினீ வராகி
50.ளளித வராகி
51.க்ஷேத்ர வராகி

அஸ்திர வராகியின் இன்னொரு பெயர் பகளாமுகி.பகளாமுகி உபாசகர்கள் இன்றைய கால கட்டத்தில் அஸ்ஸாம்,நேபாளம்,காசி போன்ற இடங்களில் மட்டுமே இருக்கின்றார்கள்;பகளாமுகி என்ற அஸ்திர வராகி உபாசனைக்கு வளம் சேர்ப்பது ஸ்ரீசதாசிவ உபாசனை ஆகும்;

சதாசிவ உபாசனை புரிந்து,அது ஸித்தி ஆன பின்னரே பகளாமுகீ வித்யை உபாசனை கைகூடும்;பகளாமுகி உபாசனை ஸித்தி ஆகிவிட்டால்,இப்பிறவியிலும்,இனி வரும் பிறவிகளிலும் அனைத்து வளங்களும்,நலன்களும் அஸ்திர வராகியின் அருளால் கைகூடும்;நீடித்து நிலைக்கும்;

ஆதாரம்:ஸ்ரீவாராஹி ஸித்தர் உபாஸனா மார்க்கம்(பகுதி 9)ஜோதிட பூமி,பக்கம் 36,37,வெளியீடு டிசம்பர் 2009


சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள்;இந்த அன்னையை உபாசனை செய்து,இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கனவில் வந்து பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பாள்;தமிழ்நாட்டில் பலர் இந்த அன்னையின் அருள் பெற்று பிறருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்;


தாங்களும் அதே போல ஆக வேண்டுமா? ஒருமுறை எம்மை நேரில் வந்து பாருங்கள்;

சொப்பனத்தில் வந்து பதில் தரும் தெய்வங்கள் சில இருக்கின்றன;பத்மாவதி,எட்சிணி,வராகி போன்றவை இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன;

சொப்பன வராகி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர,வராகி அருளால் சகல சித்திகளும் கூடி வரும்;துஷ்ட பிரயோகங்களால்(ஜின்,குறளி,மோகினி) அவதிப்படுபவர்கள் தினமும் வராகி மந்திரத்தை ஜபித்து வர,அதில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்;அம்பாள் உபாசனை,ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு வராகி மந்திரம் மிகப் பெரிய,மஹா சக்தி வாய்ந்த கவசம் ஆகும்;

வராகியின் சக்தியை மனித மனத்தினால் மதிப்பிடவே முடியாது;வராகித் தாயை தனது அன்னையாக ஏற்றுக் கொண்டு தினமும் (இல்லறவாசிகள்) ஒரு மணி நேரம்;

(உபாசனையின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்) இரண்டு மணி நேரம்; 

(இப்பிறவியிலேயே அன்னை வராகியின் பாதத்தில் ஐக்கியமாக விரும்புவோர் அல்லது அரசியலில் உச்சத்துக்குச் செல்ல விரும்புவோர்) மூன்று மணி நேரம் 

வராகியின் 13 பெயர்களை ஜபித்து வந்தால் இப்பிறவி முழுவதும் எதிரிகளும்,துரோகிகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்;

தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாக்க எப்பேர்ப்பட்ட மந்திரவாதியாக இருந்தாலும்,அவனது மாந்திரீக ஆற்றல்களை ஒரே விநாடியில் நிர்மூலமாக்கிவிடுவாள்:

தனிமையில் செல்லும் போதும்

இரவில் சுடுகாடு/இடுகாடு வழியாக செல்லும் போதும்

இரவில் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் போதும்



ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தையோ

ஸ்ரீவாராஹி ஸகாயம் என்ற மந்திரத்தையோ ஜபித்துக் கொண்டு வரவேண்டும்;

இதனால்,தேவையற்ற பயம் நெருங்காது;நாய்கள் குரைப்பது கூட நின்றுவிடும்;எதிர்பாராமல் வரும் துஷ்ட சக்தி விலகிச் சென்றுவிடும்;நெருப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அன்னையின் பெயரைச் சொன்னாலே அனைத்தும் விலகிச் சென்றுவிடும்;

சில மாணவ விடுதிகள்,சில தங்கும் லாட்ஜ்கள்,சிலபல வாடகை வீடுகளில் கடந்த காலத்தில் யாராவது தற்கொலை செய்து இறந்திருப்பார்கள்:அவர்களுடைய ஆத்மா அங்கேயே தான் இருக்கும்;அங்கே புதியதாக யார் குடியேறினாலும் அவர்களுக்கு தொல்லையாக ஒவ்வொரு நாளும் நகரும்;இன்றைய கால கட்டத்தில் பலர் ஆத்ம பலம் குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள்;அவர்கள் பின்வரும் அன்னை மஹாவராகியின் 13 பெயர்களை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால்,ஆவிகள்,பேய்கள்,பிசாசுகளின் தாக்கம் நெருங்காது;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நி

இவைகள் மிகவும் சக்தி வாய்ந்த அன்னை மஹாவராகியின் பெயர்கள்;

அன்னை மஹாவராகியின் மந்திரம் எதுவாக இருந்தாலும்,குரு ஒருவர் உபதேசம் செய்த பின்னர்,ஜபித்தால் மட்டுமே அன்னையின் அருள் கிட்டும்;ஆன்மீகத்தில் இன்றைக்கு உண்மையான குருமார்கள் குறைந்துவிட்டார்கள்;எனவே,அன்னை மஹாவராகியிடம் மன்றாடி வேண்டிக் கொண்டு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;அதன் மூலமாக,அன்னையே கனவில் வந்து உபதேசம் செய்வாள்;

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை விதமான தோஷங்கள்,சாபங்கள் இருந்தாலும் அன்னை மஹாவராகியைச் சரணடைந்தாலே போதும்;சொப்பன வராகி மந்திரத்தை தினமும் ஒருவர் 1008 முறை ஜபித்து வந்திருக்கின்றார்;ஒவ்வொரு மாதம் ஆனதும்,அவரது கடுமையான சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கை படிப்படியாக வசந்தம் நிரம்பியதாக மாறியிருக்கின்றது;

சிலருக்கு சொப்பன வராகி மந்திரம் ஸித்தி ஆன, பின்னர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்களை அறியும் சக்தி உண்டாகும்;

சொப்பன வராகி மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 3 ஆண்டுகள் வரை ஜபித்துவிட்டவர்கள்,யார் வீட்டுக்குச் சென்றாலும் அவர்களுடைய சோகங்களை நீக்கும் ஆற்றல் உண்டாகும்;எனவே,ஜோதிடர்கள்,அருள் வாக்கு சொல்பவர்கள்,குல தெய்வத்தின் ஆசிகளைப் பெற்றுள்ளவர்கள் ஒவ்வொருவருமே தினமும் சொப்பன வராகி மந்திரம் ஜபித்து வருவது அவசியம்;

தினமும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வர எல்லோரையும் வசீகரிக்கும் சக்தியுள்ளவராக மாறிவிடுவீர்கள்;


மான் தோல் ஆசனத்தில் (வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே வீட்டில் மான் தோல் ஆசனத்தை பயன்படுத்த முடியும்) அமர்ந்து,தாமரை மணிமாலையால் தினமும் இரவு 11 மணி முதல் 12 மணி வரை 1008 முறை ஜபித்து வந்தால்,1008 நாட்களுக்குள் கனவில் சொப்பன வராகியின் தரிசனம் கிடைக்கும்;


ஓடும் நதியில் நின்று சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை என்று தினமும் ஜபித்து வர சகலவிதமான செல்வ வளமும் தேடி வரும்;ஒவ்வொரு நாளும் வரும் புதன் ஓரை அல்லது குரு ஓரையில் 1008 முறை ஜபிக்க வேண்டும்;முதல் ஆரம்பித்த ஓரையில் தான் தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் பூஜை அறையில் தினமும் இரவு 11 முதல் 12 மணிக்குள் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்;   பவளமணி மாலையால் தினமும் 330 முறை உரு செய்து வர வேண்டும்;இதனால்,ஜன வசீகர சக்தியை அன்னை சொப்பன வராகி நமக்கு அருளுவாள்;


ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு 11 முதல் 12 மணிக்குள் வீட்டில் இருக்கும் மஹாவராகி படத்திற்கு சிகப்பு மலர்களால் பூஜிக்க வேண்டும்;ருத்ராட்ச மணி மாலையால் சொப்பன வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இதனால்,எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள்;துரோகிகள் சிதறி ஓடிவிடுவார்கள்;ராஜ சன்மானம் கிடைக்கும்;குறைந்தது 1008 நாட்கள் ஜபிக்க வேண்டும்;

பெண்கள் மாத விலக்கு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ஜபிக்கலாம்;


துக்க வீடுகளில் கலந்து கொண்டால் ஏழுநாட்களுக்குப் பிறகு,மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;ருது வீடுகளுக்குச் சென்றாலும் இதே நாட்கள் கட்டுப்பாடுதான்;குழந்தை பிறந்த அன்றே சென்று பார்த்தால் மறுநாளில் இருந்து ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


துரோகிகளும்,எதிரிகளும்,பொறாமை பிடித்தவர்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொடூரங்கள் நிறைந்த கலிகாலம் இது;எனவே.அன்னை மஹாவராகியின் பலவிதமான மந்திரங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது 1008 நாட்கள் ஜபித்து நிம்மதியாகவும்,வலிமை மிக்கவராகவும் வாழ்க!

இணையத்தில் ஒருபோதும் இதுபோன்ற மந்திரங்களை எவரும் வெளியிடுவது இல்லை;ஒரு வேளை யாராவது வெளியிட்டால் அது உண்மையான மந்திரம் அல்ல;என்பதை உணருங்கள்;


சொப்பன வராகி மந்திரம் வேண்டுவோர் நேரில் வந்து சந்திக்கவும்;வாட்ஸ் அப்:9092116990

No comments:

Post a Comment