Wednesday, August 16, 2017

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!

இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;
இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;
84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;
19.8.2017 சனிக்கிழமை காலை 6.33 முதல் இரவு 7.20க்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுனம் மற்றும் கடகம் ராசி) பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது;
19.8.2017 சனிக்கிழமை இரவு 7.21 முதல் நள்ளிரவு (மறுநாள் விடிகாலை) 3.48 வரையிலான நேரத்தில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது ஜன்மாந்திரக் கடமை ஆகும்;

3.9.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.22 முதல் 4.9.2017 திங்கட்கிழமை காலை 12.13க்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருணாச்சல கிரிவலம் வர வேண்டும்;

17.9.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.56 முதல் அன்று நள்ளிரவு 1.04க்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலையை வலம் வரவேண்டும்;

17.9,2017 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு(திங்கள் விடிகாலை)1.05 முதல் 18.9.2017 திங்கட்கிழமை மதியம் 1.25க்குள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

2.10.2017 திங்கட்கிழமை நள்ளிரவு 1.40 முதல் 3.10.217 செவ்வாய்க்கிழமை இரவு 9.42 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 9.43 முதல் நள்ளிரவு 1.54 வரை பூரட்டாதி(கும்பம் ராசி மற்றும் மீனம் ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அருணாச்சல கிரிவலம் வர ஏற்ற நேரமாக அமைந்திருக்கின்றது;

16.10.2017 திங்கட்கிழமை நள்ளிரவு 1.20 முதல் 17.10.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.44 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 7.45 முதல் இரவு 12.42 வரை உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்மம் மற்றும் கன்னி ராசி) பிறந்தவர்களும் கிரிவலம் வர உகந்த நாட்கள் ஆகும்;

1.11.2017புதன்கிழமை மதியம் 3.30 முதல் பின்னிரவு(மறுநாள் வியாழக்கிழமை) விடிகாலை 5.37 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,2.11.2017 வியாழக்கிழமை அதிகாலை 5.38 முதல் மதியம் 2.16 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

15.11.2017 மதியம் 2.50 முதல் மதியம் 3.53 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்(ஒரு மணி நேரத்தில் கிரிவலம் வருவது மிகவும் கடினம்;இருந்தாலும் புண்ணியமான நேரத்தை அறிவிப்பது எமது கடமை)மதியம் 3.54 முதல் 16.11.2017 வியாழன் மதியம் 3.07 வரை சித்திரை நட்சத்திரத்தில்( கன்னி மற்றும் துலாம் ராசி) பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த ஆன்மீக ரகசிய நேரம் ஆகும்;

30.11.2017 வியாழக்கிழமை நள்ளிரவு(வெள்ளி விடிகாலை)3.49 முதல் 1.12.2017 வெள்ளிக்கிழமை மதியம் 12.07 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 12.08 முதல் நள்ளிரவு 2.06 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அருணாச்சலவலம் வர ஏற்ற நேரமாக அமைந்திருக்கின்றது;

15.12.2017 வெள்ளிக்கிழமை காலை 6.07 முதல் நள்ளிரவு(சனிக்கிழமை விடிகாலை) 3.06 வரை விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் மற்றும் விருச்சிகம்) பிறந்தவர்களும்,3.07 முதல் 16.12.2017 சனிக்கிழமை காலை 8.16 க்குள் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை வலம் வர உகந்த நேரமாக இருக்கின்றது;

30.12.2017 சனிக்கிழமை மதியம் 3.10 முதல் மாலை 5.37 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி மற்றும் ரிஷப ராசி) பிறந்தவர்களும்( இரண்டு மணி நேரத்தில் கிரிவலம் வருவது கடினமே);மாலை 5.38 முதல் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.04 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரமாக அமைந்திருக்கின்றது;

13.1.2018 சனிக்கிழமை நள்ளிரவு 1.42 முதல் 14.1.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.56 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 2.57 முதல் நள்ளிரவு 3.41 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த நாட்களாக இருக்கின்றன;

28.1.2018 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.04 மணி முதல் 29.1.2018 திங்கட்கிழமை இரவு 9.02 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர ஏற்ற நாளாக அமைந்திருக்கின்றது;

29.1.2018 திங்கட்கிழமை இரவு 9.03 முதல் இரவு 11.41க்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில்(மிதுனம் ராசி மற்றும் கடகராசி) பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர ஏற்ற நாளாக இருக்கின்றது;

12.2.2018 திங்கட்கிழமை இரவு 9.21 முதல் நள்ளிரவு 3.18 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,நள்ளிரவு 3.19 முதல் 13.2.2018 செவ்வாய்க்கிழமை இரவு 11.24 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி மற்றும் மகர ராசி) பிறந்தவர்கள் கிரிவலம் செல்லக்கூடிய நேரமாக இருக்கின்றது;

27.2.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 12.26 முதல் நள்ளிரவு 2.10 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;நள்ளிரவு 2.11 முதல் 28.2.2018 புதன் கிழமை காலை 10.14 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

14.3.2018 புதன் கிழமை மாலை 5.05 முதல் அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் மற்றும் கும்பம்)15.3.2018 வியாழக்கிழமை மாலை 5.14 வரையிலான நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

28.3.2018 புதன் கிழமை இரவு 10.26 முதல் 29.3.2018 வியாழக்கிழமை இரவு 7.45க்குள் வரும் நேரத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

13.4.2018 வெள்ளிக்கிழமை காலை 8.15 முதல் நள்ளிரவு 3.33க்குள் பூரட்டாதி நட்சத்திரத்தில்(கும்பம் ராசி மற்றும் மீனம் ராசி) பிறந்தவர்களும்;நள்ளிரவு 3.34 முதல் 14.4.2018 சனிக்கிழமை அன்று காலை 8.41க்குள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்; 
அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

No comments:

Post a Comment