Wednesday, November 9, 2011

8.11.11 செவ்வாய்ப்பிரதோஷத்தன்று ஓம்சிவசிவஓம் பரவிய கோவில்கள்


கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 16 வது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர் கோவில்பாளையம் ஆகும்.இங்கு எமனது சாபத்தைத் தீர்த்துவைத்த அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவிலிலும்,மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்யும் முறையை விளக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
இதுவரையிலும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கும் முறைபற்றிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட இடங்கள்:திரு அண்ணாமலை,சதுரகிரி,திருஆனைக்கால்,ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம்,பரமக்குடியில் இருக்கும் சிவாலயம்,காளையர்கோவில்,ஈரோட்டில் கடந்த மூன்று மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட சிவாலயம்;சென்னையில் பாம்பன் சுவாமிகள் ஆலயம்;நாகர்கோவில் அருகே இருக்கும் ஒரு புராதனமான சிவாலயம்.
ஹல்வா என்று கூறினால் நாக்கில் இனிப்புச் சுவை தெரியுமா? அதுபோல,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை ஜபிக்காமல் அதன் சக்தியைப் புரிந்துகொள்ள முடியாது;நான் பல்வேறு பிரச்னைகள்,சிக்கல்களிலிருந்து ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபித்துவருவதால்,முழுமையாக விடுபட்டேன்.நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தமிழ் இந்துப்பண்பாட்டுக்கேற்ப எனது தமிழ்கூறு சகோதர சகோதரிகள் அனைவருமே ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்றொரு பேராசை எனக்குள் உதயமாகியிருக்கிறது.1.1.2013 பிறக்கும் முன்பே,தமிழ்நாட்டிலும்,அயல்நாடுகளிலும் சேர்ந்து மொத்தம் ஒருகோடி பேர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்தே தீருவேன் என்பது உறுதி!!!
5.2.2012 ஞாயிற்றுக்கிழமையன்று பிரதோஷம் வருகிறது.இந்த நன்னாளில்,தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோவிலில் 20,000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க முடிவு.நீங்கள் வரத்தயாரா? aanmigakkadal@gmail.com க்கு உங்களின் பெயர்,செல் எண்,ஊர் எழுதித் தொடர்புகொள்ளுங்கள்.
ஒரு கோடி பேர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்;இந்தியாவையும் தமிழ்நாட்டையும் உலக வல்லரசு,நல்லரசு நிலைக்கு உயர்த்தப் பாடுபடுவோம்!!!

No comments:

Post a Comment