Wednesday, November 9, 2011

ஐப்பசி மாத பவுர்ணமி(10.11.11)யைப் பயன்படுத்துவோம்!!!




9.11.11 புதன்கிழமை அன்று நள்ளிரவு 12.16 மணிமுதல்,10.11.11 வியாழக்கிழமை அன்று நள்ளிரவு மணி 2.14 வரையிலும் ஐப்பசிமாத பவுர்ணமி அமைந்திருக்கிறது.இந்த நாளில் ஏதாவது ஒரு மணி நேரம் (நமக்கு வசதியான நேரத்தில்)ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;
கலிகாலத்தில் பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பாவத்தை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்.சிலர் மட்டும் பலவிதமான கர்மவினைகளை அனுபவிக்க பிறந்திருக்கிறோம்;இந்த கர்மவினைகளைக் கரைக்க இறைநாம ஜபத்தால் மட்டுமே முடியும்.இறை நாம ஜபங்களில் மிகவும் சுலபமான கட்டுப்பாடுகளைக் கொண்டதும்,மிகவும் விரைவான பலன்களை நமக்குத் தரக்கூடியதும் ஓம்சிவசிவஓம் மற்றும் ஓம்ஹரிஹரிஓம் மந்திரங்கள் மட்டுமே!!!
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை தொடர்ந்து செய்துவருபவர்கள்,தங்களுக்கு ஏற்படும் மந்திர ஜபம் சார்ந்த சந்தேகங்களை எப்போதும் அஞ்சல் அனுப்பிக் கேட்கலாம்.விளக்கங்கள் இன்று முதல் போனில் மட்டுமே தரப்படும்.
ஓம்சிவசிவஓம்
ஓம்ஹரிஹரிஓம்

1 comment: