Thursday, March 24, 2011

கிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்சிவசிவஓம்




24.3.2011 வியாழன் முதல் 45 நாட்களுக்கு ஜோதிடப்படி,செவ்வாயும் சனியும் நேர் எதிர் ராசிகளில் நிற்கப்போகின்றன.இதன் விளைவாக,மிதுனம்,கன்னி,கும்பம்,சிம்மம் ராசியினர் அதிகமாகப் பாதிப்படப்போகின்றனர்.தவிர,மீதி ஏழு ராசியினரும் ஏதாவது ஒருவிதத்தில் மன நிம்மதியிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்;அல்லது எதிர்பாராத விபத்து,கோபத்தில் தற்கொலை அல்லது கொலை செய்வதற்கான தூண்டலாக இருப்பதற்குக் காரணமாக இருக்கவுள்ளனர்.

எனவே,இந்த காலகட்டத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் கால அளவை அதிகரிப்பது நல்லது.இதன் மூலமாக யுத்த கிரகங்களின் போக்கினால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள்,விபத்துக்கள்,மன மற்றும் உடல் ரீதியான உபாதைகளின் தாக்கத்தை 80 சதவீதம் வரையிலும் குறைக்கலாம்.

கொடூரம் நிறைந்த இந்த கலிகாலத்தில் நமது சொத்து எதுவெனில்,கடன் இல்லாமலும்,நோய் இல்லாமலும்,எதிரி மற்றும் கர்ம நோய்கள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே! அப்படி வாழ நமக்கு வழிகாட்டியாகவும்,உறுதுணையாகவும் இருப்பது தினசரி ஒரு மணி நேர ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மட்டுமே!!!

1 comment:

  1. அன்புள்ள ஆன்மிகக்கடல் ,

    கடன் இல்லாமலும்,நோய் இல்லாமலும்,எதிரி மற்றும் கர்ம நோய்கள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே!


    அருமையான வார்த்தைகள் . மேற்கூறியவை கிடைத்தால் அதை விட சொர்க்கம் எதுவும் இந்த தரணியில் இல்லை.

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete