Thursday, March 17, 2011

பெண்களால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நீங்கிட

உங்களை உங்களது ரத்த உறவுகளான அப்பா,அம்மா,சகோதரன்,சகோதரி,மனைவி/கணவன்,மகன், மகள்,மருமகன்,மருமகள் போன்றவர்களே மிக இழிவாகப் பேசுகிறார்களா?

நீங்கள் ஒழுக்கமாக இருந்தும் கூட,உங்கள் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் பொறுக்கி /விபச்சாரி/காம வெறிபிடித்தவள் என்ற கெட்ட பெயர் உங்களது ரத்த உறவுகளாலேயே உருவாக்கப்படுகிறதா?

உங்களுக்கு இராகு மகாதிசை அல்லது இராகு சார திசை அல்லது ராகுவுடன் சேர்ந்து வேறு ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெறுகிறதா?(இதை உறுதிபடுத்திட,மேற்கூறிய அவமானங்கள் உங்களைப் பின் தொடர்ந்தால் போதும்)

இராகு மகாதிசையுடன் கூடிய ஏழரைச்சனி (2011 தீபாவளி வரையில் சிம்ம ராசி,கன்னி ராசி),அஷ்டமச்சனி(கும்பராசி) நடைபெற்றுவருகிறதா?
ஆம் எனில்,நீங்கள் செல்ல வேண்டிய ஸ்தலம் கேதுபகவானின் ஸ்தலமாகிய கீழப்பெரும்பள்ளம் அருகில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் சிவாலயம் ஆகும்.
இங்கு அடிக்கடி சென்று உங்களின் சொந்தச் செலவில் அபிஷேகம்,பூஜை செய்து கொண்டே வர வேண்டும்.இப்படி குறைந்தது ஒராண்டு வரையிலும் அல்லது 18 தடவை அபிஷேகம் செய்வதால்,அவர்களின் அவதூறுப்பிரச்சாரம் முடிவுக்கு வரும்.
நன்றி:ஷீர்டி சாய்பாபா

1 comment:

  1. நீ பதிவு எழுதாம இருந்தாலே எங்க தோஷங்கள் எல்லாம் விலகிடும்..

    ReplyDelete