Tuesday, March 22, 2011

சொர்ண ஆகர்ஷண பைரவரை நேரில் சென்று வழிபட முடியாதவர்களுக்கு:





அவரது மூல மந்திரத்தைக் கொடுத்துள்ளோம்:இதை 26.3.11 சனிக்கிழமை  9.00am முதல்10.30am  மணி வரையிலும் வரும் தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய இராகு காலத்தில் 330 முறை சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும் முன்பு,ஒலி இரைச்சல்கள்,செல்போன்,டிவி,வானொலியை அணைத்து வைப்பது நல்லது/அவசியம்,

சொர்ண ஆகர்ஷண பைரவர் இணையப் பெருங்கடலில் கிடைக்கிறது.அதை பெரிய அளவில் ப்ரிண்ட் எடுக்கவும்.எடுத்து பிரேம் போட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்.

பூஜையறையை சுத்தப்படுத்தி,பத்தி,தசாங்கம் ஏற்றி வைக்கவும்.நீங்களும் குளித்து சுத்தமாக்கிக்கொள்ளுங்கள்.நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பினை தயார் செய்து படையல் போட்டுக் கொள்ளுங்கள்.இவை அனைத்தும் 26.3.11 சனிக்கிழமை  9.00amக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்வரும் மந்திரத்தை 330 முறை வாய்விட்டுச் சொல்லாமல்,மனதுக்குள் ஜபித்துவர வேண்டும்.முடியும் போது ஜபித்தவர் ஒரு தம்ளர் இளநீர் அருந்த வேண்டும்.அதன் பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தூபதீபம் காட்டி,இனிப்பை(சர்க்கரைப்பொங்கல்,டைமண்டு கல்கண்டு,)அருகிலிருப்போருக்கு விநியோகிக்கலாம்.

இப்படிச் செய்வதன் மூலமாகவும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறலாம்.

வேலைப்பளு காரணமாக,இவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்ய முடியாவிட்டால் கூட,சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தினை வைத்து 330 முறை ஜபித்தால் கூட போதுமானது.

ஓம் ஏம் ஐம் க்லாம்

க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

சகவம்ஸ ஆபதுத்தோரணாய

அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மமதாரித்திரிய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

5 comments:

  1. ada paavi, 1.30 to 3 emakandam athai raagu kalamunu yaar sonnathu unakku therincha sollu illaina olunga iru

    ReplyDelete
  2. Saturday's raghu Kalam is between 9 and 10.30 AM, please clarify is it time or rahu Kala poojai?

    ReplyDelete
  3. சனிக்கிழமை ராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 வரையில்தான் இருக்கிறது.எனது கவனக்குறைவால் இந்த தவறு நிகழ்ந்துவிட்டது.வாசகர்கள் மன்னிப்பீர்களா?

    ReplyDelete
  4. அதிகம் பதிவு போடவேண்டும் என்பதை விட தரமான,நியாயமான,உண்மையான,மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன விஷயங்களை பதியவேண்டும் என்பதையே கருத்தாகக்கொள்ளவும்

    ReplyDelete
  5. adada partheergala..?ungal thavaral naan nerathai thavaravituviten.

    ReplyDelete