Tuesday, September 14, 2010

நீங்கள் பணக்காரர் ஆகிட ஒரு சுலபமான வழிபாடு

பெரும் செல்வ வளம் தரும் திருப்பதி வழிபாடு






உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்கள்,அவ யோகங்கள் இருந்தாலும் அவைகள் அடியோடு நீங்கி பெரும் செல்வச் செழிப்போடு வாழ ஒரு சுலப வழிபாடு இருக்கிறது.






நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலுக்குச் செல்லவேண்டும்.சென்று அங்கு சுப்ரபாத தரிசனம் செய்ய வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் (11 மாதங்கள்) சுப்ரபாத தரிசனம் செய்தால்,பெரும் செல்வ வளத்தின் அதிபதியாகிவிடுவீர்கள்.


இந்த சனிக்கிழமை சுப்ரபாத தரிசனத்தை ஒரு தவமாக,ஒரு யாகமாக,ஒரு லட்சியமாகச் செய்ய வேண்டும்.எப்பேர்ப்பட்ட இடர்ப்பாடுகள் வந்தாலும்,48 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்யும் வரை விடாமல் செய்ய வேண்டும்.






அப்படி திருப்பதிக்கே செல்ல இயலாத,ஆனால் வறுமையிலிருந்து அடியோடு நீங்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ விரும்புவோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.அவர்கள்,தமது வீட்டிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5 மணிக்குள் எழுந்து குளித்து தயாராகிவிடவேண்டும்.5மணிக்கு திருப்பதி வெங்கடாஜபதி படத்திற்கு மாலை அணிவித்து சுப்ரபாத கேசட்டை ஒலிக்கச் செய்ய வேண்டும்.சுப்ரபாத கேசட் ஒலித்து முடியும் வரை திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தின் முன்பாக தியானத்தில் அமர்ந்து மனப்பூர்வமாக நமது தேவை என்ன என்பதை வேண்ட வேண்டும்.சுப்ரபாதம் முடிந்ததும்,திருப்பதி வெங்கடாஜபதிக்கு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.


அதன்பிறகு,வீட்டுக்கு அருகில் இருக்கும் பசுவுக்கு இரண்டு வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும்;வாழைப்பழங்கள் கொடுத்தப்பின்பே,காலை உணவு அருந்த வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் செய்தால்,செல்வ வளம்மிக்கவர்களாக மாறுவது உறுதி!






நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல் பக்கம்3,மார்ச் 2008.

3 comments:

  1. பிதுர் தோஷம் கழிக்க தந்தை உயிருடன் இருக்க மகன் செய்ய கூடாது என்கிறார்களே, விளக்கம் தரமுடியுமா?

    ReplyDelete
  2. nijamthan.oru velai namathu appa irunthu,avar intha pithur kadamaigalai cheyyaamalirunthal naam cheyyalaam.ithu sila biramins sonnathu.

    ReplyDelete
  3. nijamthan.oru velai namathu appa irunthu,avar intha pithur kadamaigalai cheyyaamalirunthal naam cheyyalaam.ithu sila biramins sonnathu.

    ReplyDelete