Thursday, September 30, 2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

சுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.
காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!
தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.

தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?
தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.

பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!
சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.

தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.10.2010 அன்று ஆரம்பாக இருக்கின்றன.

1 comment:

  1. ஐயா,

    அஞ்சல் வழி பயிற்சி இருந்தால் தயவுசெய்து கட்டணத்தை தெரியப்படுத்துங்களேன்.

    ReplyDelete