Thursday, September 2, 2010

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்3







இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2006 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.






தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.


ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.






உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.






2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.கி.பி.2006 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்.பக்கம் 99,100,101.






பழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.


















தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்


கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.

5 comments:

  1. 2006ம் ஆண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன???

    ReplyDelete
  2. 2006 ஆம் ஆண்டு முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன என்பது எனக்கும் தெரியும்.இந்த கேள்வியை கேட்பதற்கே தாங்கள் ஒளிந்திருந்துதான் கேட்கிறீர்கள்.அவ்வளவு துணிச்சலா?

    இதனால்தான்,தேவரகசியங்கள்,சித்தர் ரகசியங்கள்,ஜீவநாடியில் தெரியும் நாடுகள்,நகரங்களைப் பற்றிய ரகசியங்கள் எப்போதும் சிலருக்கு அதுவும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அமைத்திருந்தனர்.
    டிசம்பர் 26க்குப்பிறகுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமியை அதன் சக்தியை உணர்ந்தோம்.அதன் பிறகு அதை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிந்ததா?
    எனது ஆன்மீகக்கடல் வாசகர்கள் இந்த அபூர்வமான சித்தரகசியங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தத்தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும் என்ற பாச உணர்வோடு இதை வெளியிட்டுள்ளோம்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது சரிரிரி....

    இப்போது நமது நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகி-
    றதே... மக்களிடையே சுயநலம்... அரசியலில் ஒரு தெளிவற்ற நிலை
    (கொள்ளை அடிப்பது மட்டுமே அரசியல்)... கோயிலுக்குச்
    கோரிக்கை வைப்பதற்கு மட்டுமே செல்வது... இயற்கையை
    பலவிதங்களில் சீரழிப்பது.... இது போன்ற நிலையில் நீங்கள்
    சொல்வது போல் நடக்குமா? மேலும் 2006 முடிந்து 4 ஆண்டு-
    களில் அதிகபட்ச சீரழிவு நடந்துள்ளதே...!

    ReplyDelete
  4. sir, as our spiritual ocean said we cant justify the power of our siddhas. If they decided to do anything single second is sufficient to do.. We have to wait for their grace..

    ReplyDelete
  5. sir as our spiritual ocean said its 100 per true.. the siddhas are checking our confidence and beleif on them

    ReplyDelete