Monday, September 13, 2010

மரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்

ஆவிகள் உலகம் பற்றி







ஆவிகள் உலகத்தினைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில்,சில அதீத உளவியல் சம்பந்தப்பட்ட ஆழ்மனப்பயிற்சிகளை செய்துவரவேண்டும்.ஆவியுலகத் தொடர்பு,சூட்சும உடல் பயணம்,ஞான திருஷ்டி பயிற்சிகள் இதற்கு உதவும்.இதற்குத் தேவை மிகுந்த பொறுமையும் கடினப் பயிற்சியும் தான்.


இதற்குமுன் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:






டாக்டர் வெல் ஓவன் என்பவர் உயர் நிலை ஆவிகளைத் தொடர்புகொண்டு The Life Beyond The veil என்ற பெயரில் நான்கு பாகங்களில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.






கரோலின் லார்சன்(Caroline D.Larsen) எழுதிய Travels in the Spirit World என்ற புத்தகமும்,தியோசபிகல் சொசட்டியைச் சேர்ந்த சார்லஸ் லெட்பீட்டர் என்பவர் எழுதிய Astral Planes என்ற நூலும் அன்னிபெசன் ட் அம்மையார் எழுதிய Death and After என்ற நூலும் சூட்சும உடல் பயண அனுவங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.






இதேபோல்,சூட்சும உடல் பயணம் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த ஜார்ஜ் W மீக் என்பவர் After Death then What என்ற நூலும்,மறைமலையடிகள் எழுதிய மரணத்திற்குப்பின் மனிதர் நிலை என்ற புத்தகமும்,தம்மண்ணச் செட்டியார் அவர்கள் சூட்சும உடல் பயணம் என்ற புத்தகமும் ஏராளமான தகவல்களை தெரிவிக்கின்றன.






கி.பி.1996 வரை தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பாடத்திட்டத்தில் சூட்சும உடல் பயணம் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது.பிற்காலத்தில் பல்வேறுகாரணங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது.






நன்றி:மரணத்திற்குப் பின் மனித வாழ்வு தொடர்,பக்கம் 18,19,பி.எஸ்.பியின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்,பிப்ரவரி 2009.தொடரை எழுதியவர்:J.R.ஜீலியஸ்,ராமநாதபுரம்.செல்:9942338138.

No comments:

Post a Comment