Monday, November 9, 2009

SWADESHIQUESTIONS

சுதேசியனின் தேசபக்தி கேள்வி பதில்கள்
(நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்கள்-2009)

1.அமெரிக்காவின் இன்றைய உண்மையான பொருளாதார நிலை என்ன?

சீனாவை விட பொய் சொல்லுவதில் தேர்ந்துவிட்டநிலை!

2.சீனாவின் எல்லைப்புற ஆக்கிரமிப்பு பற்றியும், தாக்குதல் பற்றியும் செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர்கள் மீது(இந்திய) மத்திய அரசு நடவடிக்கை அறிவித்துள்ளது நியாயமா?

பொய்யான செய்தி என்கிறது மத்திய அரசு.அப்படியானால் மறுப்பு வெளியிட்டால் போதுமே! ஏன் இந்த நடவடிக்கை?
உண்மையை மறைக்க அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவே தோன்றுகிறது.
தலைதூக்குகிறது சர்வாதிகாரம்.ஆனாலும்,பத்திரிகை சுதந்திரம் பேசுபவர்கள்(பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள்) வாயைத் திறக்கக் காணுமே?!


3.பொக்ரான் 2 அணுச்சோதனை தோல்வி என சில விஞ்ஞானிகள் மூலம் கூறப்பட்டு வருகிறதே?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே (இந்திய) தேசம் சிறுமைப் படுத்தப்படும்.தேசத்தின் தன்னம்பிக்கை வெட்டியெறியப்படும்.அப்போதுதானே வெட்கமின்ரி அந்நியரிடம் கையேந்தலாம்! இதுவும் ஒரு சதிதான்.

4.ஆசியன் ஒப்பந்தம் பற்ரி எதிர்க்கருத்து கொண்டிருந்த முதல்வர்கள் அது சம்பந்தமாக பேச அணுகிய போது அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தன்னை சந்திக்க நேரம் தரவில்லையாமே?

அந்நியர்க்கு ஏவல் செய்ய ஒரு சர்வாதிகார அரசு உருவாகி வருகிறது.இது நல்லதல்ல.

நன்றி:அக்டோபர் 2009

5.பொருளாதாரம் உட்பட (இன்றுடன் 120 அமெரிக்க வங்கிகள் திவால்) பல விஷயங்களில் ஆட்டம் கண்டு விட்ட அமெரிக்காவிடம் இன்னமும் பல நாடுகள் அடங்கி நடப்பதேன்?

கோடிகோடிகளாக பணத்தை அங்கு (முதலீடு என்ற பெயரில்) கொட்டியாகிவிட்டது.பணம் திரும்ப வர வேண்டாமா என்ன? மரியாதையால் அடங்கி நடக்கவில்லை.பயத்தால்!!!

6.பொன்விழா பாராட்டு நிகழ்ச்சியில் கமலஹாசன்,
‘பகுத்தறிவாளர்கல் அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இனி ஆத்திகர்களே கோவில்களை இடிப்பார்கள்.நாங்கள் இடிக்கவேண்டிய அவசியமில்லை’ என பேசியுள்ளாரே!

வக்கிரத்தின் மற்றொரு பெயர் கமலஹாசன்.ஹே ராம்,தசாவதாரம்,குருதிப்புனல் எல்லாம் தலைப்புத் திருட்டு.அவரது பல படங்கள் ஆங்கிலத் திருட்டு.திருட்டு நாயகனை உலக நாயகன் என்றால்,திருடன் ஏன் உங்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தசாவதாரம் படத்தில் முஸ்லீம் கமலஹாசன்,சீக்கிய கமலஹாசன் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.ஹிந்து கமலஹாசன் நாத்திகம் பேசுவார்.இதுதான் கமலஹாசனின் பகுத்தறிவு!

7.விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சியில் “தாலி பெண்களுக்கு அவசியமற்றது” என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி கூறியது சரியா?

விஜய் டிவியும் சரி, கோபியும் சரி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் மெல்லக்கொல்லும் விஷங்கள்.
மெக்காலே படிப்பு படித்த மேல்தட்டு வர்க்கம்தான் இதன் பார்வையாளர்கள்.பஜனை,பக்தி எல்லாம் இருக்கும்.படிப்பும் பணமும் இருந்தால் கெடுவது எளிதல்லவா!
இந்துதர்மத்தின் மற்றும் இந்தியாவின் ஆணிவேரான குடும்பங்களை சீர்குலைப்பதே இவர்களது முதல் குறி!

8.பின்லேடன், தாவூத் ஆகியோரை மறைத்துக் கொண்டு மற்ற நாடுகளிடமிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பணம் வாங்குகிறதே பாகிஸ்தான்?

வளர்த்துவிட்ட நாடுகள்தான் இன்று ஒடுக்கவும் பணம் கொடுக்கின்றன.பாகிஸ்தானும் அதைப் புரிந்துகொண்டுவிட்டது பனம் கொட்டும் மரத்தை யாராவது வேருடன் பிடுங்குவார்களா என்ன?

நன்றி:நவம்பர் 2009

9.அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பில் மட்டும் கம்யூனிஸ்டுகள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் ஒத்துப்போவது ஏன்?

கம்யூனிஸ்டுகளின் கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பிற்கும்,சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் எதிர்ப்பிற்கும் நிறைய்ய வேறுபாடுகள் உள்ளன.நமக்கு (இந்திய)தேசம் முக்கியம்.அவர்களுக்கு சீனா,ரஷ்யா முக்கியம்.
நமக்கு குடும்பம்,பெண்மை,சமுதாயம்,இந்துப்பண்பாடு இவைகளின் பாதுகாப்பு முக்கியம்.
அவர்களுக்கு அப்படி அல்ல.

10.திருவள்ளுவர் சர்வக்ஞர் சிலை திறப்புகள் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா?

நாம் இருவரல்ல ஒருவர் என்பதை புரிந்து கொள்ள முதல் படியாக இருக்குமே!
1991 லும் கூட பா.ஜ.க.ஆண்ட மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இரண்டாவது மொழியாக சில பள்ளிகளில் தென்மாநில மொழிகளை கற்பிக்க முன்வந்து, தமிழகத்திடம் (இதே முதல்வர்தான்) 5000 தமிழ் ஆசிரியர்கள் கேட்டன என்பது நினைவுகூரத் தக்கது.

11.இந்தியாவில் 4% போலி நோட்டுக்கள் இருப்பது ஆபத்தானது அல்ல என்கிறாரே ரிசர்வ் வங்கி துணை கவர்னர்?

முதலில் 4% போலி நோட்டுக்கள் இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளதற்கு நன்றி சொல்லுங்கள்.அரசின் கையாலாகத்தனத்திற்கு சான்று வழங்கியுள்ளார்.பாவம் அவர் என்ன செய்ய முடியும்.

நன்றி:செப்டம்பர் 2009

No comments:

Post a Comment