Thursday, November 19, 2009

சுற்றுச்சூழலின் அவசியத்தை வெளிப்படுத்தும் படம் பேராண்மை


திரைப்பட விமரிசனம்: பேராண்மை

நமது ஆன்மீகக்கடலில் திரைப்பட விமரிசனம் தேவையா? என தீபாவளி முதலே யோசித்துக்கொண்டிருந்தேன்.எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பேராண்மை தமிழ் திரைப்படத்தைஇரண்டாவது முறையாகப் பார்த்ததும் உணர்ந்தேன்.
திரைப்படங்களில் எவ்வளவோ நல்லதும் கெட்டதும் வந்தாலும் சுற்றுச்சூழலும் தேசபக்தியும் இந்தப் படத்தில் பிரதானமாக இருப்பதால் எழுதுகிறேன்.திரைப்பட விமரிசனம் ஆன்மீகக்கடலில் எழுதுவது தவறு என வாசகர்களாகிய நீங்கள் கருதினால்,ஒரு மின் அஞ்சலில் பதில் அல்லது கமெண்டு பகுதியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.


மலையேற்றப்பயிற்சிக்கு வரும் டீன் ஏஜ் மாணவிகளில் மிகவும் துடுக்கான 5 பேரை மனித நடமாட்டமில்லாத காட்டுக்குள் அழைத்துச் செல்லுகிறார் ஜெயம்ரவி.
போகும் காட்டில் ஆங்கிலேய கூலிப் படையை ஒரு மாணவி பார்க்கிறாள்.கதை விறுவிறுப்பாகிறது.காட்டிலாகா அதிகாரியான ஜெயம்ரவிக்கு ராக்கெட் தொழில் நுட்பம்,துப்பாக்கி,கண்ணிவெடிகள்,உலகப் பொருளாதாரம்,உள்ளுணர்வைப் பயன்படுத்தி துல்லியமாக முடிவெடுத்தல்,எதிரியைக் கொல்லுதல் என பல துறை நிபுணத்துவம் இருக்கிறது.ஆக ஜெயம்ரவி இந்திய உளவுத்துறை நபராகத்தான் இருக்கிறார் என்பது எனது யூகம்.
இயற்கை விவசாயத்துக்கு இந்தியா ஒரு செயற்கைக் கோளைப் பறக்க விடப்போகிறது.
அந்த செயற்கைக் கோளை ஏவும் போதே அழிக்க சிறு ஏவுகணையோடு 16 பேர் கொண்ட ஆங்கிலேயர்கூட்டம் அந்த தடை செய்யப்பட்ட காட்டுக்குள் வருகின்றனர்.அவர்கள் அனைவரையும் கொன்று, அவர்களின் சதியை ஜெயம்ரவி தனது 5 மாணவிகளோடு முறியடிப்பதுதான் கதை.


நான் பேராண்மையை தீபாவளிக்கு மறுநாள் பார்த்தேன்.அப்போது இருந்த சில வசனங்கள் நேற்று(18.11.2009)இல்லை.
ஒரு மாணவி கேட்பாள்: “யார் சார்! நம் செயற்கைக் கோள்களை அழிக்க விரும்புகிறார்கள்”
ஜெயம் ரவி, “ இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் நமது எதிரி நாடுகள்தான்.”
மாணவி, “எந்தெந்த நாடுகள் சார்”
ஜெயம் ரவி, “ அவர்கள் அனுப்பிய கூலிப் படைதான்.இவர்களுக்கு எந்த தேசபக்தியும் கிடையாது”

நேற்று,பார்த்ததில், “நமது எதிரிநாடுகள் . . . எந்தெந்த நாடுகள்” என்பவை இல்லை.

அட!!! நாம், நமது நாடு அவ்வளவு தொடநடுங்கிகளா? மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சொல்லும் வசனம்தான் ஞாபகம் வருகிறது. ‘கள்ள உறவை வெளிப்படையாகச் செய்யமுடியுது.கூடப்பிறந்தவங்களுக்கு உதவிசெய்யுறதை ரகசியமாகச் செய்ய வேண்டியிருக்கிறது’

ஜெயம்ரவியின் மேலதிகாரி பொன்வண்ணனுக்கு ஏன் இவ்வளவு அறிவு கெட்டத்தனம்? இந்திய நாட்டையும், இந்திய இறையாண்மையையும் 2 மாணவிகளை பலி கொடுத்துக் காப்பாற்றியது ஜெயம்ரவி. ஆனால், ஜனாதிபதியிடம் அவார்டு வாங்குவது பொன்வண்ணன்.
பொன்வண்ணனின் கேரக்டர்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.உழைக்காமலும், போராடாமலும் பதவிக்கும்,புகழுக்கும் பிசாசாக அலைபவர்கள் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அரசியல் துறையில் மட்டுமல்ல; ஐ.டி.,கல்வித்துறை,அறக்கட்டளை,சேவைத்துறை,காவல்துறை, உளவுத்துறை,ராணுவம்,ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் என எல்லாத் துறையிலும் லட்சக்கணக்கான மானங் கெட்ட ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள்.இவர்களால், எத்தனை இந்தியக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கின்றன தெரியுமா?

ஜெயம்ரவி பழங்குடி இனத்தில் பிறந்து காட்டிலாக அதிகாரியாக வருகிறார்.இவரைப்பற்றி அறிமுகம் செய்யும் பொன்வண்ணன் பேசும் வசனங்கள் தடைசெய்யப்பட்டு உதடு மட்டும் அசைகிறது.இதன்மூலம் ஜாதி வெறி இன்னும் நாம் கைவிடவில்லை என்பது தெரிகிறது.

5 துடுக்கான மாணவிகளின் கொட்டம் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மொத்தமாணவிகளின் மேல்தட்டுவர்க்கத்தின் அடையாளம்தான்.இந்த மேல்தட்டுவர்க்கத்தின் திமிர்த்தனம் இன்று சாதாரண மாணவிகளிடமும் பரவி வருகிறது.எனவே, செக்ஸ் விஷயத்தில் இனி ஆண்கள் மீது மட்டும் குற்றம் இருக்கும் என்பதை ஏற்க முடியாது. ஆக, நிர்வாகத்தில் இருப்பவர்கள் மிக மிக திறமை மற்றும் சாமர்த்தியசாலிகளாக இருக்கவேண்டியது அவசியம். பெண் அழுதால் மட்டும் அந்தக் கண்ணீரின் அடிப்படையில் ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பது முட்டாள்த்தனம்.ஆனால் கல்லூரி, பள்ளி, அலுவலகம், அரசுத்துறை,ஐ.டி.என எல்லாத்துறையிலும் பலிகடா ஆவது ஆண்கள்தான்!!!

கல்வித்திட்டத்தில்மாபெரும் மாற்றம் தேவை;என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற பயிற்சிகளில் பயிற்சி ஆசிரியருக்கு மனோதத்துவப் பயிற்சி முழுமையாகத் தேவை. அந்தப் பாடத்திட்டத்தையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம்.இல்லாவிட்டால், இந்தியாவாகிய நாம் வல்லரசாகியும் பயனில்லை.உருப்படாத, திமிர்த்தனம் நிறைந்த ஒரு சமுதாயத்தைத் தான் இன்றைய மெக்காலே கல்வித் திட்டம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் அதைப் பற்றி ஆளும் வர்க்கத்துக்கு சிறிதும் கவலையில்லை.



பெரும்பாலான கல்லூரி, பாலிடெக்னிக் மாணவிகள் பருத்தி வீரன் முத்தழகுகள் போல ஆண்மைத்தனம் நிறைந்தவைகளாகவே செயல்பட்டுவருகின்றனர்.தமிழ்நாட்டில் 2001 வரை ஊருக்கு ஒரு முத்தழகு இருந்தால் அது அதிகம்! இன்றோ ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சந்துக்கு ஒரு முத்தழகு இருப்பது நேரடி அனுபவம்.!!!



அவர்களில் ஒருத்தி ஜாதி பார்ப்பது,ஜெயம் ரவியை அவமானப்படுத்துவது என கொடூரமான துடுக்குத்தனத்தின் உச்சத்தை படம் நெடுக பார்க்கலாம்.
உணர்ச்சியே காட்டாத ஜொள் விடாத பாத்திரம் ஜெயம் ரவிக்கு!!! எப்போதும் கடமையே கண்ணாக இருக்க வேண்டும் என்பதை நம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரி கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.(உங்கள் லட்சியத்தில் நீங்கள் ஜெயிக்கவேண்டுமானால் மனித உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடாது.இந்த படத்தில் வரும் கதாநாயகனைப் போல)
சீமைக்கருவேல மரங்களை சதி மூலமாக வெளிநாடுகள்(நமது இன்றைய எதிரி நாடுகள் மட்டுமல்ல; நட்பு நாடுகளும்தான்) நம் நாட்டில் வளரவைத்து நமது நீர்வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொடுமை கி.பி.1947 லிருந்தே நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் கஞ்சி தொட்டிக்காலம் என 1970 களில் இருந்தது. அப்போது நான் கூட பிறக்கவில்லை.ஆனால் அதன் கொடூரத்தை நான் கேள்விப்பட்டது நிறைய்ய. நம் மீது இரக்கப்பட்டு கோதுமையை இலவசமாக அண்ணன் அமெரிக்கா தந்தது.அப்போது தமிழ்நாட்டில் அறிமுகமானதுதான் புரோட்டா.இன்று 170 விதமான புரோட்டாக்கள் தமிழக உணவகங்களில் கிடைக்கின்றன.இவற்றில் ஓரளவே சத்துக்கள் உண்டு.ஆனால், புரோட்டா தயாரிக்கும் பொருட்களால் கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியல் மிக நீளம்.
இந்த கோதுமையோடு இந்தியாவுக்கு திருட்டுத்தனமாக வந்ததுதான் ஆகாயத் தாமரைச் செடிகள்.நமது நீர் வளத்தை உறிஞ்சி, தஞ்சாவூர் போன்ற நீர் வளம் நிறைந்த பகுதிகளையே தார் பாலை நிலமாக்கும் சக்தி வாய்ந்தவை.
(இது போல நமது நாட்டை விவசாயத்தை அழிக்க ஏராளமான சதிவேலைகள் நிறைய்ய நடந்து வருகின்றன.வாசகர்களாகிய உங்களுக்கு தெரிந்த தகவல்களை அனுப்பினால் உங்கள் அடையாளங்களுடன் வெளியிடுவது எனது கடமை!)

கி.பி.2030க்குப் பிறகு இந்திய ஆண்களின் ஆண்மைத்தன்மை 20% ஆகிவிடும்.இதனால் குழந்தைப் பிறப்பு நின்றுவிடும்.ஏனெனில், இந்தியாவில் விவசாய விளைபொருட்களில் அந்தளவுக்கு ரசாயன உரங்கள் கலக்கப்படுகின்றன.இது அரிசி,கோதுமை,பருப்புவகைகளில் அதிகம் கலந்து மனித உணவாக உண்டு வருகிறோம்.விளைவு?
தாய்ப்பாலில் இந்த நஞ்சு 70% அளவுக்கு கலந்துள்ளதை 2002 ஆண்டில் ஒரு ஆய்வு தெரிவித்தது.

பசுமைபுரட்சி என்ற பெயரில் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது உண்மைதான்.பக்க விளைவாக, நமது பாரம்பரிய மரபுச் செல்வமான இயற்கை விவசாயத்தை, இயற்கையாகவே விளையும் ஏராளமான அரிசி,கோதுமை ரகங்களை இழந்தோம்.பசுமை புரட்சியால் அமெரிக்க உரக்கம்பெனிகள் பல கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டின.இதைத் தான் பேராண்மையில் ஜெயம்ரவி,
“இனிமே வெளிநாட்டுக்காரன் ஊறுகாய் விற்க இந்தியா வந்தால் கூட அவனை நாம் சந்தேகப்படவேண்டும்” என வசனம் பேசியிருக்கிறார்.
நிஜத்தில் ஃப்ளூரைடு கலந்த பற்பசை சுமார் 120 ரகங்களை சந்தையில் நாம் பயன்படுத்துகிறோம்.அவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகள்.(சில மட்டுமே இந்திய தயாரிப்புக்கள்.)அதனால் எத்தனை நன்மை என்பதை உங்கள் பல் மருத்துவரிடம் கேளுங்கள்.தெரியும்?
கோக் கோடு என்னைப் பாரு. என அக்ஷய்குமார் மேடையில் ரூ.100 கோடி சம்பளத்துக்காக விளம்பரம் நடித்தார்.கோக் என்ன மூக்குக் கண்ணாடியா?
(ஒரு இந்திய டீன் ஏஜ் பெண் தினமும் 300 மிலி பன்னாட்டுக் குளிர்பானம் அருந்திவந்தால் சில வருடங்களில் அவளது மாதவிலக்கு ஒழுங்கு சிதைகிறது.28 நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதவிலக்கு 15 நாட்களுக்கு அல்லது 42 நாட்களுக்கு ஒரு முறை என சிதைந்து போகிறது.இதுவே 25 வயதைக் கடந்த பெண்ணாக இருந்தால்,அவள் தினமும் ஒரு சிறிய பன்னாட்டுக் குளிர்பானம் அருந்தி வந்தால் சிலமாதங்களில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஆய்வில் கண்ட தகவல்.
இந்த ஆய்வு முடிவை பெரியளவில் பிரபலமாக்காமல் இருக்க அந்த ஆய்வுக்கூடத்துக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பல நூறு கோடிகளை அன்பளிப்பாக்கி அமுக்கிவிடுகிறது.
இருந்தும் ஏன் இதை அரசியல் கட்சிகள் சீரியஸாக்க வில்லை.?அவையும் விலை போகின்றன என்றுதானே அர்த்தம்)
முடிவாக, உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தை நம்முடைய நாடு தான்.நம்மைவிட சீனா மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும் அங்கே கட்டுப்பாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகம்.நம்முடைய சந்தையோ மிகச் சுதந்திரமானது.
ஒரு சர்வே கூறுகிறது: ஒரு இந்தியன் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஒரு பொருளை வாங்கினாலே அந்தப் பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் பல கோடி டாலர்கள் சம்பாதித்துவிடும்.
அவ்வளவு பிரம்மாண்டமான சந்தை நம் நாடு.இதுபற்றி ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும்.அதனால்தான் இந்திய அரசியல் வாதிகளின் பணம் 70 லட்சம் கோடி ரூபாய்கள் சுவிஸ் வங்கியில் கிடக்கின்றன.ஆக,நமது பலத்தை உணர்ந்து நம்மை சுயமரியாதையோடு நிர்வகிக்க எந்த பிரதமர் வருவாரோ?



ஆக, அடிமைத்தனத்தின் உச்சமாக நாம் நம் தமிழ்த்திரையுலகம் ஹாலிவுட் சினிமாத் தரத்துக்கு வந்துவிட்டது.ஹாலிவுட் நடிகர்கள் தமிழ்ப்படங்களிலும் நடிக்கத் துவங்கி விட்டனர்.சுற்றுச் சூழல்விழிப்புணர்வு இன்றைய காலத்தில் அவசியமான ஒன்றாகிவிட்டது.ஒரு முறை திரையரங்கில் பார்க்க வேண்டியபடம்.

சும்மாவா சொன்னார் அண்ணாத்துரை?
ஒரு சினிமாப்படம் ஆயிரம் புத்தகங்களுக்குச் சமம் என்று

No comments:

Post a Comment