Monday, November 23, 2009

இந்தியாவை மனக்குரல்தான் ராம்ஜெத்மலானி அவர்களின் பேச்சு


ராம்ஜெத்மலானியின் பேச்சுக்கு பாராட்டுக்கள்

நேற்று 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுடெல்லியில் ஒரு மாநாடு நடந்தது.அது தீவிரவாதம் தொடர்பான சர்வதேச நீதிபதிகள் மாநாடு ஆகும்.அதில் இந்திய (நமது) ஜனாதிபதி ப்ரதீபா பாட்டீல், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உலக நாடுகளின் நீதிபதிகள்,சட்ட அமைச்சர்கள்,மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில் இந்திய புகழ் வக்கீல் ராம்ஜெமலானி பேசிய பேச்சு விபரம் வருமாறு:
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மோசமாக உள்ளது.
அணிசேரா இயக்கம் ஒரு தீமை;

மத்திய அரசின் பஞ்சசீலக் கொள்கை ஒரு பெருங்கேடு;

தீயவற்றை அழிக்க நல்ல சக்திகளுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும்.

இந்தியாவின் விரோதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் உறவை முறித்துக்கொள்ளும் அளவுக்கு துணிச்சலாக வெளியுறவுக்கொள்கை அமையவேண்டும்.”
இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.அதற்கு சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மறுத்துப்பேசினார்.அது:
பஞ்சசீலக் கொள்கையில் இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது.(ஆமாம்.எங்களுக்குக் கொள்ளையடிக்கவே நேரம் பத்தவில்லை; புதிய கொள்கையை உருவாக்கிட எங்களுக்கு நேரமில்லை) அணி சேரா இயக்கத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது.(ஆமாம்.நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்கள்,அரசாங்கத்தின் நலனை மட்டும்தான் பார்ப்போம்.நாட்டின் நலனைப் பார்க்க மாட்டோம்).அந்த உறுதியை எந்த ஒரு நாடோ தனிநபர்களோ குலைக்க முடியாது.(இந்தியாவின் மரியாதையை,சுயச்சார்பினை,சுயமரியாதையை நாங்கள் மட்டுமே குலைப்போம்.அமெரிக்காவின் வீழ்ச்சியை சரியாகக் கணித்து,இந்தியாவை அந்த இடத்துக்குக் கொண்டு வர விடமாட்டோம்).

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெல்மலானியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து.அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை(எங்கள் காங்கிரஸ் அரசு எப்போதுமே இந்திய மக்களின் நலனைப் பற்றி மட்டும் கவலைப்படாது)
நன்றி:தமிழ்முரசு பக்கம் 4,மதுரைப் பதிப்பு நாள் 22.11.2009.

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் கருத்து தனிப்பட்ட கருத்து என மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.
அணிசேரா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது 1955 ஆம் வருடத்தில்!
முதலாளித்துவம் பேசும் பின்பற்றும் அமெரிக்காவுடனும்,
தொழிலாளித்துவம் பேசும் பின்பற்றிய சோவியத் ரஷ்யாவுடனும்
கூட்டு சேராமல் உலக அரசியலில் நடுநிலையோடு செயல்பட நம்ம நேருமாமாவால் உருவாக்கப்பட்டது.

1990களின் பிற்பாதியில் அமெரிக்கா தனது நீண்டகால+திட்டமிட்ட+ஒருங்கிணைந்த முயற்சிக்குப் பின்னர், சோவியத் ரஷ்யாவை துண்டு துண்டாக உடைத்தது.சுமார் 16 நாடுகளாக சோவியத் ரஷ்யா பிரிந்துவிட்டது.கம்யூனிசமும் காணவில்லை.
தனது எதிரியை ஒழித்துக் கட்டியதில் அமெரிக்காவுக்கு பரம சந்தோஷம்.

உடனே, சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியது.1.1.1995 அன்று நடைமுறைக்கு வந்த உலக வர்த்தக அமைப்பினை பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக மாற்றியே செயல்படத்துவங்கியது.
அமெரிக்கா செய்யும் உலக தீவிரவாதத்திற்கு துணைபோவது ஆபத்து என உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றிணைந்து 1.1.2000 முதல் ஐரோப்பிய ஒன்றியம் என்று செயல்படத்துவங்கின.பொதுப்பணமான யூரோவை அறிமுகப்படுத்தின.

அமெரிக்காவின் அம்மாவான பிரிட்டன் ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டு யூரோவில் சேர்ந்தது.பாதி அமெரிக்க ஆதரவும் பாதி ஐரோப்பிய ஒன்றிய ஆதரவும் என டீன் ஏஜ் பெண்ணாக காலம் கடத்துகிறது.
இன்று உலக வர்த்தகத்தில் 30% ஐரோப்பிய யூனியனில் நடைபெறுகிறது.

இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ.45 முதல் ரூ.55 வரை! ஆனால்,நிஜமாகவே ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ்ரூபாய் மதிப்பு ரூ8/-மட்டுமே.
சரி! பிறகு எப்படி ரூ.45/-க்கு நிலைநிறுத்தப்படுகிறது.நம்ம ப.சிதம்பரம்தான் காரணம்.இந்தியாவை இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை தூக்கி நிறுத்தியிருப்பது நம்ம ப.சிதம்பரம்தான்.இதற்காக அவர் செய்யும் செயல்களை விளக்க 1000 பக்கங்கள் விளக்க வேண்டும்.அப்படியே விளக்கினாலும்,அது உங்களுக்குப் புரிய உலகப் பொருளாதாரம் கொஞ்சமாவது நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.சுமார் 20,000 பொருளாதார சொற்களின் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.
தற்போது ஒரு யூரோவின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.70 முதல் ரூ.85 வரை!!
(கி.பி.1750 வரை உலக வர்த்தகத்தில் நம் நாடான இந்தியாவின் பங்கு 25 முதல் 30% என்பதை நினைவில் வைக்கவும்.முழு விபரம் அறிய நமது ஆன்மீகக்கடலில் முழுமையாக நீந்தவும்.)

இந்நிலையில் அமெரிக்காவில் 400 மாபெரும் வங்கிகள் திவால் ஆகின.இன்றைய நாள் படி இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்..ஆக, அமெரிக்காவின் பணமான டாலரும் தொபுக்கடீர்!!!!

பிறகு எதற்கு அணிசேரா இயக்கம்?ராம் ஜெத்மலானி கேட்டது என்ன தப்பு?

பஞ்சசீலக் கொள்கை என்பது இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக அமைதியை உருவாக்கும் நோக்கில் உருவாக்கியது.உருவாக்கியவர் அதே நேருமாமாதான் கி.பி.1955 ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார்.கி.பி.1967 ஆம் ஆண்டில் நம்மிடம் சீனா போர் தொடுத்து,நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை ஆக்கிரமித்தது.பஞ்ச சீலக் கொள்கை நமக்கு பஞ்ச் சீல் கொள்கையாகி விட்டது.
ஆனால், சீனா முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் நம் இந்தியாவை 18 துண்டுகளாக உடைக்க திட்டமிட்டு கி.பி.1990 முதல் செயல்பட்டுவருகிறது.நமது நட்புநாடுகளையும் நமக்கு எதிராக மாற்றிவிட்டது.பாகிஸ்தான்,இலங்கை,நேபாளம்,வங்கதேசம் என அனைத்துக்கும் உதவி செய்யும் விதமாக நமது எதிரிகளாக்கிவிட்டன.நாம் நமது அண்டை நாடுகளை அடிமை மாதிரியும், அவசரகாலத்தில் கூட அவர்களுக்கு உதவாமலும் இருந்துவந்தோம்.நாம் ஒரு இந்துதேசம் என்பதைக் கூட மறந்தோம்.

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையும்,அத்துடன் வரும் சீன ராணுவ வீரர்களும் அடிக்கவும்,நிர்வாணப்படுத்தியும்,மீன்பிடிப்படகுகளை உடைத்தும்,மீனவர்களை சுடுவதும் தினசரி செயல்களாகிவிட்டன.இதைத் தடுக்க வேண்டிய நமது முதல்வர் கருணாநிதி தாத்தா, இறக்குமதி அன்னை மன்னிக்கவும்.இறக்குமதி சித்தி சோனியா, மன்மோகன்சிங், தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை?
அதே நேரம் எங்கே சீனாவும், இந்தியாவும் பொருளாதார ரீதியில் ஒன்று சேர்ந்தால் (அது உலக பொருளாதாரத்தில் 50 முதல் 60%வரை கைப்பற்றிவிடும்.அப்படி ஒரு நிலை வந்தால் யூரோவின் பணமதிப்பும் சரிந்துவிடும்.டாலர் சராசரிப்பணமாகிவிடும்.அப்புறம்,அமெரிக்கக் கனவு, அமெரிக்க வேலை,அமெரிக்க சிந்தனை அத்தனையும் மாறி, அமெரிக்காவும் உலக நாடுகளின் இளைஞர்கள் இந்திய வேலை, இந்திய ரூபாய்,இந்திய வாழ்க்கை என கனவு காண ஆரம்பித்துவிடுவர்.இதை இன்னும் மன்மோகன்சிங்கும், ப.சிதம்பரமும்,எம்.கே.நாராயணனும் உணரவில்லை.ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் நன்றாகவே உனர்ந்திருக்கின்றன.)
அமெரிக்காவாகிய நாம் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடுவோமோ எனப் பயந்து அமெரிக்கா சீனாவை நமக்கு எதிராகக் கொம்பு சீவி விடுகிறது.சீனாவும் பேராசையோடு நம்மை தாக்கவும்,நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் சுறுசுறுப்பாக நாசவேலைகளை ஐ.நா.சபை, ஆசியான்,ராணுவம், மீடியா என சகல இடங்களிலும் செய்து வருகிறது.
நமது முன்னாள் நண்பன் ரஷ்யாவோ பாவம் அது பரம ஏழை நாடாகிவிட்டது.வேறு யாரும் உலக அரங்கில் நமக்கு ஆதரவு இல்லை.நம்மை நாம் மட்டுமே பாதுகாக்க வேண்டும்!

நாம் என்ன செய்கிறோம் என நமக்கே தெரியவில்லை.பிறகு எதற்கு பஞ்ச சீலக் கொள்கை?
பஞ்சுமிட்டாய் கொள்கையை வைத்துக் கொண்டாடுவோம்.


அமெரிக்காவும் சரி; சீனாவும் சரி ; சுயநலமே பெரிது என உலக அரங்கில் செயல்பட்டுவருகின்றன.பிறகு ஏன் நாம் பாடாவதியாகிப் போன கொள்கைகளை வைத்துக் கொண்டு மாரடிக்கணும்??

ஆக, ராம்ஜெத்மலானியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; இந்தியாவின் இந்தியாவை நேசிப்பவர்களின் இந்திய தேசபக்தர்களின் மனக்குரல்!!!

1 comment: