Tuesday, September 8, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(சதயம்)

அபூர்வ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

சதயம் : யாரையும் வசீகரிக்கும் தோற்றம் உள்ளவரும்,கரும் விழிகள் கொண்டவரும்,நினைத்த காரியத்தை முடிக்கும் நுண்ணறிவு படைத்தவரும், தீர யோசித்து எக்காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவரும், எவரையும் எளிதில் தன்வயப்படுத்தும் கோபக்காரருமாகிய தாங்கள் இதுவரை இழிவான பேச்சுக்கு ஆளாகியிருப்பீர்கள்.குடும்பசூழலால் தேக்க நிலையே எதிலும் இருந்திருக்கும்.
7.10.2009 முதல் 16.11.2009 வரை : தேக்க நிலை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இழந்த தைரியத்தைப்பெறுவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையை உருவாக்குவீர்கள்.பணப்புழக்கம் ஏற்படும்.உடலில் இருக்கும் மந்தநிலை நீங்கிட ஸ்ரீபழனி முருகனை நேரில் சென்று ஒருமுறை தரிசித்துவரவும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும்.குடும்பபெரியவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்வீர்கள். தந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தொழில் உறுதியான கசப்பான முடிவுகள் எடுப்பீர்கள்.வாழ்க்கைத்துணையிடம் சூடான வர்த்தைகளைக் கேட்பீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :தொழிலில் வருமானம் சிறப்பாக வந்து கொட்டும்.விரையங்கள் நீங்கும்.பெரிய பெரிய இடங்களில் நட்பு கிட்டும்.சுபவிரையம் உண்டு.புதிய வீடு,மனை போன்றவை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்க்கைத்துணையிடம் மட்டும் பேச்சைக்குறைக்கவும்.
சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் சிறப்பான லாபமும், சிலருக்கு இருமடங்கு லாபமும் கிட்டும்.யோகங்கள் வரும் காலமிது.
இக்காலகட்டத்தில் கிடைக்கும் பெருந்தன வரவுகளை நீண்டகால முதலீடுகளில் சேமிப்பது/முதலீடு/சேர்ப்பது எதிர்காலத்தில் நன்மைகளைத்தரும்.

ராகு புத்தி நடப்பவர்களுக்கு பதவி உயர்வு, தொழில் நிலைகளை உயர்த்திக்கொள்ளுதல் என பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.உப்புக்கல் என நினைத்த பொருள் வைரமாக மாறுவதைப் போன்று நான்காம் நிலையில் உள்ள ஒருவர் திடீரென முதல் நிலைக்கு (உச்சத்துக்கு) வருவர்.
தங்கள் சக்திக்கு மீறிய காரியங்களில்/விஷயங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.ஒருவேளை அப்படி தலையிட்டால் பிற்காலத்தில் கண்டனங்கள்/நஷ்டங்களுக்கு ஆளாவீர்கள்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்கள் தவிர்க்க முடியாதவை.பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவீர்கள்.உடலில் வேகமும்,கோபமும் ஏற்பட்டு ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்கள் உருவாகத்துவங்கும்.வாகனங்களில் பயணத்தின்போது கவனம் தேவை.குழந்தைகளுக்கு வைத்தியச்செலவு ஏற்படும்.இக்காலகட்டத்தில் துர்கையை வழிபட்டு நிம்மதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்க!!!

No comments:

Post a Comment