Friday, September 25, 2009

காயத்ரி மந்திரத்தின் மகிமைகளை உணர வைத்த பத்திரகாளி


ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் நூலகம் சென்றேன்.அங்கு சக்திவிகடனை சும்மா ஒரு புரட்டு புரட்டினேன்.அதில்,காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் என ஒரு பக்கக்கட்டுரை வெளியாகியிருந்தது.

வசிஷ்டரிடம் சவால் விட்டு ராஜரிஷிப்பட்டம் பெற்ற க்ஷத்திரியர் விஸ்வாமித்திரர்.அவரால் இந்த பூமிக்குக் கிடைத்ததுதான் காயத்ரி மந்திரம்.
காயத்ரிதேவி ஐந்துமுகங்களுடன் சூரிய மண்டலத்தின் மத்தியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாள்.உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தும் ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்தே தோன்றின.
புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிடும் சக்தி காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.எல்லாவிதமான சமஸ்க்ருத மந்திரங்களுக்கும்,ஒவ்வொரு கடவுள்களின் காயத்ரி மந்திரத்துக்கும் சக்தி தருவது காயத்ரி மந்திரமே.

இந்த காயத்ரி மந்திரத்தை வீட்டில் ஜபித்தாலே அளவற்ற புண்ணியம் உண்டாகும்.
கடலோரம்,அரசமரத்தடியில், பசுக்கள் இருக்கும் கொட்டகையில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபித்தால் அதன் பலன்கள் ஏராளம்.
ஏதாவது ஒரு அம்பாள் சன்னதியில் ஜபித்தால்(மனதுக்குள் சொன்னால்)அதனால் கிடைக்கும் பலன்களை கூறவே ஒரு வருடம் ஆகும்.எல்லா அம்பாளும் அன்னை காயத்ரிதேவியின் அம்சமாகும்.
அன்று மாலை 4.30 மணிக்கே நான் பத்திரகாளியின் கோவிலுக்கு வந்துவிட்டேன்.பலருக்கு அன்று ஜாதகம் சொல்லவருவதாகக்கூறியிருந்தாலும்,அதில் அக்கறை வரவில்லை.இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதைபரீட்சித்துப் பார்ப்போம் என நினைத்தேன்.

மாலைமணி 4.35 முதல் 5.20 வரை எனது அன்னை பத்திரகாளியின் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு, மனதுக்குள் ஒரு முறை கணபதியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துவிட்டு, காயத்ரி மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன்.

சுமார் 5.00 மணிக்கு ஒரு கதர் சட்டையணிந்த 40 வயது பெரியவர் வந்தார்.முகத்தில் பரபரப்பு தெரிந்தது.பூசாரியைத் தேடினார்.கோவிலில் யாருமில்லை.
பொத்தாம் பொதுவாக பூசாரியை எங்கே?ன்னு கேட்டார்.நான்பதில் சொல்லவில்லை.கோவிலை விட்டு வெளியேறினார்.சில நிமிடங்களில் திரும்பவந்தார்.இரண்டு பெண்மணிகள் வந்திருந்தனர்.வந்து வள வளவென பேச ஆரம்பித்தனர்.
அந்த 40 வயது கதர்ச்சட்டை அவர்களிடம் பூசாரியை எங்கேம்மா?ன்னு கேட்டார்.ஒரு பெண்மணி , “அவரு தைலாகுளத்துல ஒரு காளிகோவில் கும்பாபிஷேகம்.அங்கே போயிருக்காருய்யா”எனபதிலை வீசி விட்டு அவர்களுக்குள் அரட்டையில் மூழ்கினர்.அந்நேரம் பார்த்து சில இளைஞர்கள் கோவிலுக்குள் வந்தனர்.அவர்களிடம் அவர், ‘தம்பி, தைலாகுளம் எப்பிடிப்போகணும்?’னு கேட்டார்.அந்த இளைஞர்களோ, ‘தெரியாது’ எனக்கூறினர்.
இதை அனைத்தையும் வேடிக்கைபார்த்துக்கொண்டே, நான் மனதுக்குள் காயத்ரி மந்திரம் ஜபித்துக்கொண்டே இருந்தேன்.
திடீரென,அந்த 40 வயது ஜிப்பா என்னிடம் வந்து, ‘ உங்களுக்கு தைலாகுளம் எங்கேயிருக்குன்னு தெரியுமா?’ எனக் கேட்டார்.நான் தெரியும் என்ற அர்த்தத்தில் தலையசைத்தேன்.
உடனே,அவர் என்னிடம் . ‘தம்பி,ப்ளீஸ், என்னுடன் வாங்களேன்.நான் உடனே கோயம்புத்தூர் கிளம்பணும்.அம்மாவைப் பார்த்துட்டுக்கிளம்பணும்.பூசாரி வந்தால்தான் (பத்திரகாளி)அம்மாவைப் பார்க்க முடியும்’எனக் கெஞ்ச நானும் அரை மனதோடு காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தி விட்டு எழுந்தேன்.அவர் வாங்க போகலாம் வெளியே கார் இருக்கு வாங்க என்றவாறு கோவிலை விட்டு பதட்டம் நீங்காமல் வெளியேறினார்.
நானும் வெளியே சென்றேன்.
அது ஒரு வெள்ளைநிற ஆம்னி வண்டி!
வண்டியில் ஏறி உட்கார்ந்ததும்,அந்த 40 வயது ஜிப்பா தன் டிரைவரிடம், “இந்த தம்பி சொல்ற ரூட்ல போப்பா” என்றார்.நான், “சிவகாசி ரோட்டுல 3 கி.மீ.தூரத்துல இருக்குது தைலாகுளம்”என்றேன்.
‘சீக்கிரம் போப்பா”என டிரைவரை விரட்டினார்.
2 கி.மீ தூரம் வரை அவரது தொழிலில் அவர் ஏமாந்த கதைகளைச் சொன்னார்.நான் அவரது முகத்தைப் பார்த்தபடி, வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன்.ஆனால்,மனதில் காயத்ரி மந்திர ஜபம் ஜபித்துக்கொண்டே இருந்தேன்.இடையிடையே, அந்த ஜபம் தடைபடவும் செய்தது.

2 வது கி.மீட்டரைத் தாண்டியதும்,பத்திரகாளிகோவில் பூசாரியும் கூடவே இன்னொருவரும் வந்ததை அந்த 40 வயது ஜிப்பா கவனிக்கவில்லை.நான் அதைக் கவனித்து, ‘இதோ! பூசாரி வர்றாரு’ என்றேன்.அதற்குள் வண்டி அவர்களைக் கடந்து 300 மீட்டர்வரை போய்விட்டது.
உடனே,வண்டி அரைவட்டமடித்து,அந்த பூசாரியின் அருகில் போய் நின்றது.
பூசாரியும் உடனிருந்த ஆளும் திடுக்கிட்டனர்.40வயது ஜிப்பா வண்டியை விட்டு இறங்கி, “சாமி,உங்களைத் தான் தேடி வந்தேன்.வாங்க கோவிலுக்குப் போகலாம்”என பதட்டத்தோடு கூற இருவரும் வண்டியில் ஏறினர்.ஏறியதும் பூசாரிக்கு மேலும் ஆச்சரியம்.
‘அட! நீங்க தானா?அம்மா நீ நடக்க வேண்டாம்னுதான் வண்டி அனுப்பியிருக்கா போல’ என பேசியவாறு இருக்க, வண்டி கோயிலை நோக்கிப் பறந்தது.

கோவில்வாசலில் நாங்கள் இறங்கியதும்,தெருவே கூடிவிட்டது.பூசாரி வண்டியிலிருந்து இறங்குகிறாரே என அந்த தெருமக்களுக்கு ஆச்சரியம்!என்னைப் பார்த்தும் தான்.கோவிலுக்குள் நுழைந்ததும் மணியைப்பார்த்தேன்.
மணி சரியாக மாலை 6.00!
MORE DETAILS AT www.global-guardian-angel.blogspot.com

I HAVE BEEN GETTING MORE BENEFITS FROM MY FIRST GAYATHRI MANTHIRA JEBAM.TILL NOW,MY LIFE HAS BEEN CHANGING EASILY,PEACEFULLY AND LOVE FULLY.
GAYATHRI MANTHIRAM'S POWER IS EXPRESSING FROM FIRST JEBAM.

2 comments:

  1. IDHIL UNGALUKKU ENNA NANMAI NADANDHADHU?

    ReplyDelete
  2. சுப்ரியாதியாகு அவர்களே
    ஒரு சராசரிகுடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அந்த சம்பவம் ஒரு வித நன்மையை மேன்மையைத் தருவதாகவே தெரிகிறது.தொடர்ந்து காயத்ரி மந்திரம் நான் ஜபித்துவருவதால் எனது பல பிரச்னைகள் தீர்ந்துவருகின்றன.எனது பொருளாதார வளம் உயர்ந்துவருகிறது.எப்படி உயர்ந்தது என ஒரு தனி வலைப்பூவே வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete