Tuesday, September 8, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(பூரட்டாதி)

அபூர்வ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

பூரட்டாதி : ஆடை ஆபரணங்கள் அணிந்து மகிழ்பவரும், திடசரீரம் கொண்டவரும், பெரிய மனிதர்கள் நட்பும்,கவிஞரும் ஆசிரியரும்,வீட்டில் உணவு உண்பதை குணமாகவே கொண்டவரும்,கடனால் தொல்லையும்,குழந்தைகள் வழியில் குழப்பமான சூழ்நிலையும்,உழைப்புக்கேற்ற லாபத்தை அனுபவிக்க முடியாத நிலையும் குடும்பத்தில் சண்டை சச்சரவும் கடந்த 40 நாட்களாக இருந்திருக்கும்.

7.10.2009 முதல் 16.11.2009 வரை : குழந்தைகளால் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும்.தங்களுடைய வார்த்தைகளில் கோபம் குறையும்.குழந்தைகளுக்கு பிரியப்பட்டதை வாங்கித்தருவீர்கள்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : இடம்,வீடு போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.தந்தைவழி சொத்துக்கள் மூலமாகவும் லாபமுண்டு.சிலருக்கு மருத்துவச்செலவு உண்டு.முகமைப்பணியிலிருப்போர் பெரும் பணலாபமடைவர்.சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :லாபங்கள் அதிகமாக கிடைக்கும் நேரமிது.மூத்த சகோதரத்தால் ஆதரவும் உதவியும் லாபமும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் உண்டாகும்.முன்பு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.அரசு ஒப்பந்தப்பணிகளில் இருப்போருக்கு அதிக லாபம் உண்டாகும்.மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை உருவாகும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :அரசு வழியில் தொந்தரவும் , கருத்துவேறுபாடுகளும் சகோதரர்/ரிகளிடையே கருத்துவேறுபாடுடன் வாக்குவாதமும் உண்டாகும்.உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும்.ஆடை ஆபரணச்சேர்க்கைக்கு அதிகம் செலவழிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதி மூலமாக தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்.தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களால் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படும்.

No comments:

Post a Comment