Monday, February 8, 2016

யாருக்கெல்லாம் வராகி வழிபாடு சுலபமாகக் கைகூடும்?


மனதால் பிறருக்கு தீங்கு நினைக்காமல்,தான் உண்டு;தன்னுடைய வேலை/தொழில் உண்டு என்று இருப்பவர்களுக்கு


திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


தற்போது ராகு மஹாதிசை நடப்பில் உள்ளவர்களுக்கு


பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


பஞ்சமி திதியில் பிறந்துள்ளவர்களுக்கு


இனி ஒரு பிறவியே வேண்டாம்;என்று மனம் வெறுத்துள்ளவர்களுக்கு


ராகுவுடன் எந்தக் கிரகமாகவது இணைந்து அந்தக் கிரகத்தின் திசை நடப்பில் உள்ளவர்களுக்கு


நிம்மதியாக வாழ விரும்புவோர்களுக்கு


அன்னை அரசாலை(வராகி)யின் வழிபாடு சுலபமாகக் கைகூடும்;
ஆமாம்!

பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் (காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும்) ஜபித்து வந்தால் போதும்;மூன்றாவது நாளில் இருந்தே உங்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருட்பாதுகாப்பு கிட்டிவிடும்;

4 ஆம் நாளில் இருந்து,கூடவே இருந்து பழகி நமக்கு துரோகம் செய்தவர்கள் படிப்படியாக நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்;

7 ஆம் நாளில் இருந்து,நாம் அறியாமையால் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படும் நல்ல ஆத்மாக்கள் நம்மோடு பழக ஆரம்பிப்பார்கள்;எதிர்பாராத உதவிகள் செய்ய ஆரம்பிப்பார்கள்;

30 ஆம் நாளில் இருந்து எதெற்கெடுத்தாலும் புலம்புவதும்,பயப்படுவதும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடும்;

60 ஆம் நாளில் இருந்து நமது வராகி மந்திர ஜபத்தின் பலன் நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசமாக பாதுகாக்கத் துவங்கும்;

நமது குடும்ப உறுப்பினர்கள் நம்மோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி;அல்லது தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்குச் சென்று வந்தாலும் சரி;அல்லது நாம் ஒரு ஊரிலும் நமது குடும்பத்தார் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து வந்தாலும் சரி;அவர்களுக்கு சூட்சுமமான பாதுகாப்பை அன்னை அரசாலை(வராகி) வழங்குவாள்;இப்படி வழங்கும் பாதுகாப்பை எந்த ஒருவராலும் வழங்க முடியாது;

எனவே,பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் ஜபிக்கத் துவங்குங்கள்;

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்,அருகில் இருக்கும் பழமையான ஆலயத்தில் மூலவர்,அம்பாள்/தாயார் சன்னதியின் முன்பாக 30 நிமிடத்துக்குக் குறையாமல் ஜபிக்கவும்;

60 நாட்கள் இப்படி தினமும் இருமுறை ஜபித்தப் பின்னர்,வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை ஜபிக்கத் துவங்கலாம்;

அசைவம் தவிர்த்துவிட்டு,ஜபிக்க ஆரம்பிப்பது அவசியம்;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை ஒருமுறை ஜபித்தாலே,வராகி பரணியை ஒருமுறை பாடியமைக்கான பலன் கிட்டும்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment