Monday, February 15, 2016

பணக்கஷ்டம்,வர்த்தக வீழ்ச்சியைத் தீர்த்து எழுச்சியைத் தரும் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுகாம்பாள் சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர்!!!


மாசி மகத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு தேனுபுரீஸ்வரருக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்;(பாக்கெட் பால் கண்டிப்பாக தவிர்க்கவும்)அதுவும் கறந்த பாலை இளஞ்சூடு ஆறுவதற்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்;இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே! இருப்பினும் முயற்சி செய்யவும்;

அபிஷேகம் செய்த பின்னர்,மீதி வாங்கி வைத்திருக்கும் பாலை இங்கே அந்த சமயத்தில் வரும் சிறுவர்,சிறுமியர்க்கு தானம் செய்ய வேண்டும்;இப்படி தொடர்ந்து 12 மகம் நட்சத்திர நாளில் குரு ஒரையில் அல்லது சந்திர ஒரையில் செய்து வரவேண்டும்;இதன் மூலமாக,தொழிலில் பெருத்த நஷ்டம் அடைந்தவர்கள் படிப்படியாக மீண்டு பழைய நிலையை எட்டுவர்;மிகுந்த கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு எதிர்பாராத உதவிகள் கிட்டிட ஸ்ரீதேனுபுரீஸ்வரர் அருள்புரிவார்;

மகம் நட்சத்திர நாளில் இப்படி காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்,அதற்குப் பதிலாக தசமி திதி வரும் நாளில் செய்யலாம்;தொடர்ந்து 12 தசமி(தேய்பிறை தசமி திதியில் மட்டும்) நாட்களில் குரு ஒரை அல்லது சந்திர ஒரையில் செய்ய வேண்டும்;

அதுவும் இயலாதவர்கள் ரோகிணி நட்சத்திரம் நிற்கும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்யலாம்;12 ரோகிணி நட்சத்திர நாட்களில் தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக காரியத்தடைகள் விலகும்;தொழிலில் வளர்ச்சி உருவாகும்;தீராத மற்றும் நீண்டகாலக் கடன் தீர வழிகள் திறக்கும்;

இங்கே ஒரே ஒரு சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமானது,ஒரு கோடி சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமாக மாறுகின்றது;

ஆதிசிவனுக்கு முதன் முதலில் வாகனமாக நந்தி ஆனது பிரபஞ்சத்திலேயே இங்கேதான்;

தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஆலயம் அமைந்திருக்கின்றது;இதே போல,கும்பகோணம் பட்டீஸ்வரத்திலும் இதே பெயரில் ஈசன் அருள்பாலித்து வருகிறார்;

எங்கெல்லாம் தேனுபுரீஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் அருள் பாலித்து வருகிறாரோ,அங்கெல்லாம் ஐஸ்வர்ய அருட்கடாட்ச சக்தி நிரம்பியிருக்கிறது;இந்த ஐஸ்வர்ய அருளைப் பெற விரும்புவோர்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;

தினமும் ஒரு மணி நேரம் வீட்டில் சிவ வழிபாடு செய்து வரவேண்டும்;

அல்லது 

தினமும் சிவாலயம் செல்ல வேண்டும்;

அல்லது 

தினமும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் வீட்டில் சிவசிவ என்று 1008 நாட்கள் ஜபித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்;

இதில் ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால் ஈசனின் அருட்கடாட்சம் சுலபமாகக் கிட்டும்;



ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment