Monday, December 7, 2015

இந்து என்ற உணர்வு இல்லாமையால் நாம் அனுபவிக்கும் அவஸ்தைகள்!!!


1700 வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரையிலும் உலகின் பணக்கார நாடுகளாகவும்,வல்லரசு நாடுகளாகவும் இருந்தவை நமது பாரத தேசமும்,நமது பங்காளி சீனாவும் தான்;ஒவ்வொரு 300 ஆண்டுகள் வரையிலும் உலகின் முதல் பணக்கார நாடாகவும்,உலகின் முதல் வல்லரசு நாடாகவும் பாரதமாகிய நாமும்,இரண்டாவது பணக்கார நாடாகவும்,உலகின் இரண்டாவது வல்லரசு நாடாகவும் சீனாவும் இருந்திருக்கின்றன;அடுத்த 300 ஆண்டுகள் வரையிலும் சீனா முதலிடத்திலும்,பாரதமாகிய நாம் இரண்டாமிடத்திலும் இருந்துள்ளோம்;இந்த உண்மையை உலக பொருளாதார ஆவணங்களை ஆராய்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது;அந்த புத்தகத்தின் பெயர்;The Rising and Falling of Great Powers.

மீண்டும் சீனாவும்,பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவும் உலக வல்லரசாக ஆகிவிடக்கூடாது என்பதில் மேற்கு நாடுகள் பலவிதமான சதித்திட்டங்களை கடந்த 400 ஆண்டுகளாக செயல்படுத்திவந்துள்ளன;அவைகளில் ஒன்றுதான் மதமாற்றம்;

நமது நாட்டின் முதல் பிரதமராக ஒரு நாத்திகவாதியை ஆக்கியதில் பிரிட்டனின் நயவஞ்சசகம் ஜெயித்தது;இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரித்த பின்னரும்,சுமாராக 18 மாதங்கள் இரு நாட்டு ராணுவத்திற்கும் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார் தெரியுமா?

மவுண்ட்பேட்டன் தான்;உலக வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நமது நாடு அப்போது சந்தித்தது;இரு நாட்டு ராணுவத்திற்கும் ராணுவ ஜெனரலாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்த சதிகளை இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவருமே வாசித்தால் ரத்தம் கொதிக்கும்;

இந்த சதிகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் மறு பிரசுரம் ஆகவில்லை என்பதுதான் சோகம்;இதனால்,இவைகள் மாவட்ட நூலகங்களிலும்,பழைய புத்தகக் கடைகளிலும் மட்டுமே தேட முடியும்;தேடிப் பார்த்துப் வாசித்தால்,தேசபக்தியும் வளரும்;தன்னம்பிக்கையும் வளரும்;

1.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்=எழுதியவர் விநாயக தாமோதர சாவர்க்கர்;
2.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்திரி
3.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுரம் வெளியீடு)
4.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ
5.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ
6.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=சக்தி புத்தக நிலையம்(ஆங்கிலத்தில் 10 பாகங்களாக வெளிவந்துள்ளன;விலை ரூ.15,000/-தான்)
7.கோட்சேயின் வாக்குமூலம் =தமிழ் மொழிபெயர்ப்பு
8.வால்கா முதல் கங்கை வரை
9.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடு
10.Lectures from Columbo to Almora=Swami Vivekananada(Sri Ramakrishna Mission ,Chennai)
11.சுவாமி விவேகானந்தரின் வாழ்கை வரலாறு=ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,சென்னை
12.ஸ்ரீரங்கன் உலா
13.சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்
14.குருஜியின் ஞான கங்கை 3 பாகங்கள்
15.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்
16.ஓம் சக்தியும், அணு சக்தியும்
17.திராவிடத்தால் வீழ்ந்தோம்?
18.ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள்
19.இஸ்ரேலின் வீர உதயம்
20.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்=மறைக்கப்பட்ட தேசவிடுதலைப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாறு
21.சாவர்க்கரின் கடிதங்கள்
22.இந்து மகாசபை தோன்றிய வரலாறு
23.உப்பு வேலி=(ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த சுரண்டலை ஒரு ஆங்கிலேயனே எழுதிய உண்மைக் கதை;பிப்ரவரி 2015 இல் தமிழில் வெளிவந்திருக்கிறது)
24.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு
25.தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தமிழ் அடிமைகள்
26.கலாபானி
27.வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு

இன்று,120 கோடி பேர்களாக நாம் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறோம்;இதில் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இந்தியாவை,இந்தியாவின் பாரம்பரியத்தை மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதே சமயம்,பெரும்பாலான இந்துக்களுக்கு பக்தி உணர்வே இல்லாமல் செய்வதற்கு கடந்த 300 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் நமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்து,அவைகள் நாத்திகப் பிரச்சாரமாக செலவாகியிருக்கின்றன;ஜாதிக்கட்சிகளை உருவாக்கவும்,வளர்க்கவும் செலவாகியிருக்கின்றன;ஜனநாயகம்,மனித நேயம் என்ற முகமூடியில் இந்து தர்மத்தின் 20,00,000 ஆண்டுகால பெருமைகளை சீரழிக்க செலவாகிக் கொண்டே இருக்கின்றன;இவைகளை நாம் தட்டிக்கேட்காமைக்குக் காரணம்,90% இந்துக்குடும்பங்கள் தினசரி உழைத்தால் தான் ஒரு வேளை சோறாவது சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன;

7 வயதுக்குள் நமது குழந்தையை மாதம் ஒருநாள்(ஞாயிற்றுக்கிழமையே போதும்) நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்துக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு பக்தி உணர்வு உருவாகும்;

15 வயது முதல் 25 வயது வரை நமது மகனையும்,மகளையும் ஆன்மீக பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி 7 நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன;அவைகளுக்கு அவசியம் நமது மகன் களை அனுப்ப வேண்டும்;

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதத்தில் 30 நாட்கள் தமிழ்நாட்டில் இதே பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன;அவைகளுக்கும் நமது மகன் களை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்;இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அனுப்பினால்,அதன் பிறகு,நமது மகன் நமது இந்து தர்மம் பற்றிய முழு அறிவைப் பெறும் கண்ணோட்டத்தைப் பெற்றுவிடுவான்;எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் அவனை விட்டு ஓடிவிடும்;எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு கைகூடிவிடும்;

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெண்களுக்கு மட்டும் 21 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றது;என்ன கஷ்டம் வந்தாலும் சரி! எந்த தியாகம் செய்தாவது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நமது மகள்கள் 15 வயது அடைந்தது முதல் 18 வயது வரை இந்த முகாம்களுக்கு அனுப்பியே ஆக வேண்டும்;
இந்த மூன்று ஆண்டுகள் வாழ்நாளில் முக்கிய தருணங்கள்;இந்த காலகட்டத்தில் இந்த பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பிவிட்டால் போதும்;அதன் பிறகு,இந்த உலகில் சுயமாக சிந்திக்க,செயல்பட,எதையும் எதிர்கொள்ளும் இந்து உணர்வும்,தன்னம்பிக்கையும் கைகூடிவிடும்;

19 வயது முதல் 25 வயது வரை ஆளுமைத் திறன் மேம்பாடும்,ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம்,சுதேசி விழிப்புணர்வுக்  கருத்தரங்கு,இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்கள் இவைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்ப வேண்டும்;

25 வயது முதல் வாழ்நாள் முழுவதும் நமது மகனும்,மகளும் சகலகலா வல்லியாகத் திகழுவார்கள்;

இதை எடுத்துச் சொல்ல இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் யாராவது இருக்கிறார்களா?

10 ஆம் வகுப்பிற்குப் பிறகு, அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பிற்கு நமது மகனையும்,மகளையும் சேர்க்க பணத்தை வாரி இறைக்கிறோம்;யார் யாரையோ பிடித்து சிறந்த கல்லூரியில் சேர்க்கிறோம்;

ஆனால்,நமது மகன்,மகளின் ஆளுமைத் திறனை உருவாக்குவதில் அக்கறை காட்டுகிறோமா?
கிறிஸ்தவர்கள் இந்தியா முழுக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் கோடைகால இளைஞர்கள் முகாம்,கோடை கால இளம் பெண்கள் முகாம் என்று நடத்தி வருகின்றனர்;இதன் மூலமாக தமது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மதம் பற்றிய விழிப்புணர்வை டீன் ஏஜ்ஜிலேயே பதிய வைத்துவிடுகின்றனர்;

நாம் பக்தி உணர்வை உருவாக்கவே முயற்சி செய்வதில்லை;
1960களில் உருவான நாத்திகப் பிரச்சாரத்தினால் சிவனையும்,விஷ்ணுவையும் கடந்த 20,00,000 ஆண்டுகளாக சரணடைந்திருந்த நமது தமிழ் இனம் இன்று கடவுளை நம்பாத கட்சியின் அடிமைகளாக இருக்கின்றனர்;அவர்களோ,சரியான நேரத்தில் சரியான பரிகாரம்,பூஜை,முயக்கம் செய்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்;நாத்திகவாதிகளை கோவில் அறங்காவலர்களாக ஆக்கி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க வைத்துவிட்டனர்;கோவில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன;

கடந்த 300 ஆண்டுகளாக ஆங்கிலேயன் என்ற கிறிஸ்தவனும்,கடந்த 30 வருட நாத்திகப்பிரச்சாரமும் நமது இந்து தர்மத்தை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றன என்பதை அறியாமல் நாம் தன்னம்பிக்கை பெற முடியாது;
இந்து என்ற உணர்வு பெறாததால் தான் பிரிட்டனால்,இந்தியாவை மத ரீதியாகப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிட முடிந்தது;1930 முதல் இந்துக்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் இடையே மத மோதலை உருவாக்கிட முடிந்தது;

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி வராகி அன்னை வழிபாட்டையும்,வைஷ்ண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி லக்ஷ்மீ நரசிம்மர் வழிபாட்டையும் பின்பற்றாமல் போனதுதான் இந்தியாவுக்கும்,இந்து தர்மத்துக்கும் எதிரான சக்திகள் இந்தியாவுக்குள் பேயாட்டம் ஆட ஆன்மீகக் காரணமாக இருக்கின்றன;

பெருகும் இந்துக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப,சைவ ஆதினங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் தமது தினசரி பிரச்சாரத்தை விரிவுபடுத்தாமையும் ஒரு முக்கியக் காரணம்;

இந்து என்ற உணர்வு பெறாததால் தான்,இன்று இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்து வரும் ஊரில் கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி நடத்தவும் முடிகிறது;அங்கே படிக்கும் இந்து மாணவ,மாணவிகளின் இந்து மரபுகளை மிரட்டித் தடுக்க முடிந்திருக்கிறது;(சபரி மலைக்கு மாலை போடுவதை தடுத்தல்,பொட்டு வைப்பதை நையாண்டி செய்தல்,பூ வைத்து வருவதை மிரட்டித் தடுத்தல்=ஓ! அன்பைப் போதிக்கும் ஏசு கிறிஸ்து இதைத்தான் செய்யச் சொன்னார் போலும்?)
நாமோ இதை ஒரு பிரச்சினையாக,அவமானமாக,கவுரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்கிறோமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் கேட்டு தொழில்முறை பயணம் செல்லும் இந்துத்தொழிலதிபர்களை,கிறிஸ்தவத்திற்கு மாறினால் உங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ஆர்டர் தருகிறேன் என்று கிறிஸ்தவ நாட்டு நிறுவனங்கள் தந்திரமாக மிரட்டுகின்றன;
அந்த 3 ஆண்டுகள் முடிந்ததும்,உங்கள் நிறுவனங்களில் கிறிஸ்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்டர் தருகிறேன் என்று அடுத்த கட்டமாக முன்னேறுகின்றன;
கடந்த 300 ஆண்டுகளாக நமது இந்து தர்மத்துக்கு எதிராக செய்த சதிகளில் மொத்த விளைவுகளால் நாம் இன்று ,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பேய் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்;


நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் எனது இந்து சகோதர,சகோதரிகளே. . .




No comments:

Post a Comment