Monday, December 7, 2015

தரித்திரத்தை நிரந்தரமாக அழிக்கும் அரசாலை(வராகி) மந்திரம்!!!!


நம்மில் பலருக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கின்றதா?(ஜன்மச்சனி நடைபெறும் போது நிரந்தரவேலை கிடைத்தால் அது மகத்தான அதிஷ்டமே!)

பலருக்கு தினமும் மூன்று வேளையும் சாப்பிடத் தேவையான அளவுக்கு வருமானம் வருகிறதா?(சுமாராக 75% பேர்களுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை)

நம்மில் எத்தனை பேர்கள் தினமும் ஒருமுறையாவது சிரிக்கிறோம்?

நம்மில் பலர் எத்தனை பேர்கள் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது தேவையற்ற இம்சைகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்? ஏதாவது ஒன்று நம்மைத் துரத்துகிறதா? இவை அனைத்தும் ஒவ்வொருவரின் கர்மவினைகளின் தொகுப்பே!

இதில் இருந்து மீள்வதற்கு இரண்டு சுயக் கட்டுப்பாட்டுடன் பின்வரும் மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் (காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம்) வீதம் ஓராண்டு வரை ஜபித்துவர வேண்டும்;(வாய்விட்டுச் சொல்லக் கூடாது)

1.அசைவம் சாப்பிடவே கூடாது;
2.இந்த மந்திர ஜபத்தை பரமரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்;
3.10 வயதில் இருந்து 100 வயதுவரை யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த ஒராண்டில் பெரும்பாலான நாட்களில் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம்,அம்மன் ஆலயம்,விஷ்ணு ஆலயத்தில் இந்த மந்திரத்தை ஜபிப்பது விரைவான பலன் தரும்;

தரித்திரம் என்பது வேலையின்மை,நிரந்தரவேலையின்மை,சீரான வருமானம் இல்லாமை,உறவினர்கள் மதியாமல் இருப்பது,எல்லோரும் தப்பாக நினைப்பது,பழகியவர்கள் ஏமாற்றிவிடுவது,பழகிய பின்னர் அவதூறாகப் பேசுவது,எப்போதும் கடனை அடைக்கவே உழைப்பது,எப்போதும் கொடுத்த கடனை வாங்க முடியாமல் தவிப்பது;அல்லது நமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பல ஆண்டுகள் காக்க வைப்பது;

பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது மகன்/ள் ஏமாற்றிவிடுவது போன்றவைகள் ஆகும்;

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹிதேவியை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நமஹ
மமாத்ரே வாராஹி தேவி
மமதாரித்திரியம் த்வம்ஸய த்வம்ஸய


இப்படிக்கு எனது தமிழ்சகோதர,சகோதரிகள் அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டி,சுகமாக வாழ வேண்டும் என்று விரும்பும் ஜோதிட மஹாமுனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990

No comments:

Post a Comment