Tuesday, December 22, 2015

ஏன் இலவசமாக ஜோதிடப்பலன் கள் சொல்லக் கூடாது தெரியுமா?


கலையை காசாக்கத் தெரியாதவர்களுக்கு,தட்சிணா தேவியின் சாபம் பீடிக்கும்;
செருப்பு தைப்பது ஒரு கலை;
முடிவெட்டுவது ஒரு கலை;
விவசாய நிலத்தில் களை எடுப்பதும் ஒரு கலை;(நீங்களோ,நானோ களை எடுத்துக்க மாட்டோம்)
சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பதும் ஒரு கலை;
இளநீர் சீவித்தருவதும் ஒரு கலை;
கூட்டம் கூட்டுவது ஒரு கலை;
கோவிலில் பூஜை செய்வதும் ஒரு கலை;
கோவிலில் அல்லது வீட்டுப் பூஜையறையில் பாடுவது ஒரு கலை;
பாட்டு இயற்றுவது(எழுதுவது) ஒரு கலை;
கதை சொல்வது ஒரு கலை;(இந்தக் கலையின் தாயகம் நமது தமிழ்நாடுதான்!)
அதே போல ஜோதிடம் கணித்து எதிர்காலம் சொல்வதும் ஒரு கலை;
கலையை காசாக்கத் தெரியாதவர்கள்(ஜோதிடம் பார்ப்பதும் ஒரு தொழிலே!) தட்சிணைக்குரிய சக்தியாகிய தட்சிணாதேவியின் சாபத்திற்கு ஆளாவார்கள்;இதனால் அடுத்து வரும் பிறவிகளில் ஜோதிடத்தில் பிரபலம் ஆக முடியாது;ஆனால்,அதில் பிறரைவிடவும் ரொம்ப திறமைசாலியாக இருப்பார்கள்;அதை வெளிப்படுத்திட சந்தர்ப்பம் கிடைக்காது;

இதற்குப் பரிகாரம் என்னவெனில்,இப்பிறவியில் ஒரு ஜாதகம் பார்த்தாலும் அதற்கு தட்சிணை வாங்குவது மட்டுமே!

திருவனந்தபுரத்தில் ஒரு அம்மையார் வாழ்ந்துவந்தார்;அவருக்கு அவரது 37 ஆம் வயதில் ஒரு மகானின் ஆசி(அவரது ஜாதகப்படி) கிடைத்தது;அந்த ஆசியால் அருள்வாக்கு சொல்லும் ஆற்றல் உருவானது;எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்லும் திறன் உருவானது;இதை எப்படி குறுகிய காலத்தில் பிரபலப்படுத்த?

ஒரு மாதம் மட்டும் இலவசமாக அருள்வாக்கு சொல்ல முடிவெடுத்தார்;

ஆனால்,பொதுமக்களின் மனோபாவம் வெறும் 16 நாளுடன் இலவசமாக பார்க்கும் ஆர்வத்தையே பொசுக்கிவிட்டது;
ஆமாம்! இலவசம் என்பதால் ஒரு அம்மையாரிடம் கேட்கக் கூடாத தமது அந்தரங்க சந்தேகங்களுக்கு விடை தேட ஆரம்பித்துவிட்டனர்;

எனவே,ஜாதகம் பார்ப்பதற்கு கண்டிப்பாக தட்சிணை வாங்குவது அவசியம்;

இப்படிக்கு

27 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர்;ஜோதிடப் பயிற்சியாளர்,ஜோதிட எழுத்தாளர்,கலையுலக ஜோதிடர் கை.வீரமுனி . . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990  9364231011

No comments:

Post a Comment